Sunday 31 March 2013

யார் இந்த சோனியா காந்தி ?

யார் இந்த சோனியா காந்தி ?சரித்திரத்தை புரட்டி பார்ப்போம்.
இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய


மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான்.

இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம்.

அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம்.

உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino)
எல்லோரும் இவர் இத்தாலி என்று கூறுவர் இவரது இந்திய பொய் பெயரான "சோனியா" எனபது இத்தாலி கிடையாது, உண்மையில் இந்த பெயர் ரஷிய பெயராகும்.

எப்படியோ இவரது உண்மையான பெயர் "சோனியா" என்பது இல்லை. மாறாக அந்தோனியா (Antoniya) என்ற இத்தாலிய பெயரை தான் இவர் தனது பாஸ் போர்டில் வைத்து உள்ளார்,

நன்கு ஆராய்ந்து பார்த்தால் காந்தி - காந்தி என்று நம்மை ஏமாற்றும் காங்கிரெஸ் காரர்கள் அடிப்படையில் முஸ்லிம் கள், எப்படி என்று கேட்கிறீர்களா? ராஜீவ் காந்தியின் உண்மை பெயர் ராஜீவ் கான் காரணம் இவர் தந்தை பெரோஸ் கான், மேலும் இவர்கள் குடும்பத்தில் வரும் காந்தி என்ற பெயர் கூட பொய்யானது, ராஜிவின் அன்னை இந்திராவின் உண்மை பெயர் இந்திரா பிரிய தர்ஷினி. காந்தி என்ற பெயரை இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் இட்டுக்கொண்ட அடை மொழி.

சரி நாம் அன்னை சோனியாவின் வண்டவாலத்துக்கு வருவோம், சோனியாவின் தந்தை ஸ்டீபன் (Stefano Eugene Maino) முதலில் ஜெர்மனி யின் ஹிட்லரின் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் , அப்போது ரஷ்யா மீது ஹிட்லர் போர் தொடுத்த பொது, இவர் ரஷ்யாவில் கைதாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையை ரஷியா அளித்தது,பின்னர் அவருக்கு நான்கு ஆண்டுகளாக தண்டனையை குறைத்து விடுதலை செய்தது ரஷ்யா, அங்கிருந்து வரும்போது தான் தன மகளுக்கு ரஷியா பெயரை வைத்தார். அதுவும் அந்த மகள் "சோனியா" இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொது பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சோனியா பிறப்பில் கூட ஒரு மர்மம் மறைந்து கிடைக்கிறது, மரபியல் ரீதியாக தந்தை பெயர் தெரியாத ஒரு பெண் தான் இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.

சோனியாவின் அறிக்கையின்படி அவர் இத்தாலியில் பிறந்தார் என்றார், அனால் பிறப்பு சான்றிதழ் மூலம் இவர் ச்விட்செர்லாந்தில் மிலிடரி காம்பில் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆக இவர் எங்கு பிறந்தார் என்று கூட இவருக்கு நினைவு இல்லை.
இவர் ராஜிவை மனம் முடிக்கையில் தான் இங்கிலாந்தில் உள்ள காம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்ததாக சொல்லி இருந்தார், பின்னர் அது பொய் என்றும் இவர் பள்ளியில் 5 வகுப்பை தாண்ட வில்லை என்றும் நிருபனமானது.

இப்போது புரிகிறதா நம்மை ஆட்டுவிக்கும் பெண் ஒரு படிக்காத மாமேதை...

Saturday 30 March 2013

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீர
த்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.......

Friday 29 March 2013

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!

உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா? உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்புங்க அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். பண்ணுங்க:

[PDS] ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு] அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்]. இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும். (படத்தைப் பார்க்கவும்)

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரி

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:
1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Pallavaram --- mlapallavaram@tn.gov.in
118 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
119 Panruti---mlapanruti@tn.gov.in
120 Papanasam---mlapapanasam@tn.gov.in
121 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
122 ParkTown----mlaparktown@tn.gov.in
123 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
124 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
125 Perambalur----mlaperambalur@tn.gov.in
126 Perambur---mlaperambur@tn.gov.in
127 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
128 Peravurani---mlaperavurani@tn.gov.in
129 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
130 Pernambut---mlapernambut@tn.gov.in
131 Perundurai---mlaperundurai@tn.gov.in
132 Perur---mlaperur@tn.gov.in
133 Pollachi---mlapollachi@tn.gov.in
134 Polur---mlapolur@tn.gov.in
135 Pongalur---mlapongalur@tn.gov.in
136 Ponneri---mlaponneri@tn.gov.in
137 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
138 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
139 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
140 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
141 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
142 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
143 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
144 Ranipet---mlaranipet@tn.gov.in
145 Rasipuram----mlarasipuram@tn.gov.in
146 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
147 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
148 Royapuram---mlaroyapuram@tn.gov.in
149 Saidapet---mlasaidapet@tn.gov.in
150 Salem -I---mlasalem1@tn.gov.in
151 Salem-II---mlasalem2@tn.gov.in
152 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
153 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
154 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
155 Sankari---mlasankari@tn.gov.in
156 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
157 Sattangulam----mlasattangulam@tn.gov.in
158 Sattur---mlasattur@tn.gov.in
159 Sedapatti----mlasedapatti@tn.gov.in
160 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
161 Sholavandan---mlasholavandan@tn.gov.in
162 Sholinghur----mlasholinghur@tn.gov.in
163 Singanallur---mlasinganallur@tn.gov.in
164 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
165 Sivaganga----mlasivaganga@tn.gov.in
166 Sivakasi---mlasivakasi@tn.gov.in
167 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
168 Srirangam---mlasrirangam@tn.gov.in
169 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
170 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
171 Talavasal---mlatalavasal@tn.gov.in
172 Tambaram---mlatambaram@tn.gov.in
173 Taramangalam---mlataramangalam@tn.gov.in
174 Tenkasi----mlatenkasi@tn.gov.in
175 Thalli---mlathalli@tn.gov.in
176 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
177 Thanjavur---mlathanjavur@tn.gov.in
178 Theni---mlatheni@tn.gov.in
179 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
180 Thirumayam---mlathirumayam@tn.gov.in
181 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
182 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
183 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
184 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
185 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
186 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
187 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
188 Thottiam---mlathottiam@tn.gov.in
189 Tindivanam---mlatindivanam@tn.gov.in
190 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
191 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
192 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
193 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
194 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
195 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
196 Tirupporur----mlatirupporur@tn.gov.in
197 Tiruppur----mlatiruppur@tn.gov.in
198 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
199 Tiruttani----mlatiruttani@tn.gov.in
200 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
201 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
202 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
203 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
204 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
205 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
206 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
207 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
208 Triplicane----mlatriplicane@tn.gov.in
209 Tuticorin---mlatuticorin@tn.gov.in
210 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
211 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
212 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
213 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
214 Usilampatti---mlausilampatti@tn.gov.in
215 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
216 Valangiman----mlavalangiman@tn.gov.in
217 Valparai----mlavalparai@tn.gov.in
218 Vandavasi----mlavandavasi@tn.gov.in
219 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
220 Vanur----mlavanur@tn.gov.in
221 Varahur-----mlavarahur@tn.gov.in
222 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
223 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
224 Vedasandur---mlavedasandur@tn.gov.in
225 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
226 Vellakoil---mlavellakoil@tn.gov.in
227 Vellore---mlavellore@tn.gov.in
228 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
229 Vilavancode---mlavilavancode@tn.gov.in
230 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
231 Villupuram---mlavillupuram@tn.gov.in
232 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
233 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
234 Yercaud---mlayercaud@tn.gov.in
235 ThousandLights---mlathousandlights@tn.gov.in
இந்த முகவரியில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவிற்கு புகார் மனு அனுப்புங்கள். அதற்காக புகார் என்ற பெயரில் கண்டதையும் அனுப்பி வெறுப்பேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீண்டும் ஒரு இசைப்பிரியாவா…? ஊடகங்களே உடன் செயற்படுங்கள் -

மீண்டும் ஒரு இசைப்பிரியாவா…? ஊடகங்களே உடன் செயற்படுங்கள் -

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலங்கையில் இறுதிப் போரின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வேற்று நாடுகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக 45 பேர் படகில் சென்றனர்.

குறித்த படகு நடுக்கடலில் பழுது பட்டதையடுத்து டுபாய் அரசுக்குறிய படகு இலங்கை பயணிகளை மீட்டு தமது நாட்டில் வைத்து சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது.

இதில் 7பேருக்கு வெளிநாட்டு விசா வழங்கியதுடன் 7பேரை இலங்கைக்கே நாடுகடத்தியுள்ளது.

மிகுதி 31 இலங்கையர்களையும் இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.

இதில் தமிழீழ ஊடகவியலாளர் பெண் ஒருவரும் அடங்குவர்.

இறுதிப்போரில் அரச படையிடம் சரணடைந்த ஊடகவியலாளர்கள் இசைப்பிரியா மற்றும் அகழ்விழி போன்றோர் மிகக் கொடூரமாகச்சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பெண் ஊடகவியலாளரையும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தினால் இவருக்கும் இதே கொடூரமே சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்படும்.

ஆகவே குறித்த பெண் ஊடகவியலாளர் உட்பட தஞ்சம் கோரிவந்த அனைத்து தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும் சர்வதேச அமைப்புக்கள் வழங்க வேண்டும் எனக் கோருவதுடன் இச் செய்தியை ஊடகங்கள் கவனத்தில் எடுத்து உரிய பொறுப்பு வாய்ந்த தரப்புக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.


via - பெண்கள் Women

Thursday 28 March 2013

முட்டாள் தமிழா இனியாவது சிந்தி

முட்டாள் தமிழா இனியாவது சிந்தி
.

திரை கூத்தாடி உனக்காக போராட வேண்டிய அவசியமும் கட்டாயமும் என்ன.???
.
அவன் அரசு அதிகாரியா,
நீ பணியமர்த்திய பணியாளனா,
பணம் பெறாது தேர்வு செய்த அரசியல் வாதியா,
பலன் எதிர்பாராது உழைக்கும் சமூக அர்வமுடயவனா,
அல்லது போராளியா, தமிழனா, உனது உணர்வுகளுக்கு
கட்டுப்பட உனது மனைவியா, கணவனா. தோழனா.........
இப்படி உன்னோடு எதிலும் சம்பந்தம் அல்லாத ஒருவன் உனக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன...????
.
பிழைக்க வந்தவனை பணத்தில் புரள வைத்ததற்கா.?
தலைவா என வேலை வெட்டியற்று குறைத்ததற்கா.?
அவனது திரைபடத்தை நீ ஆண்டுகளில் ஓடவைப்பதாலா.?
அவனை அர்த்தமற்று புகழ்ந்து பலான நடிகைகளுடன் கூட்டிகொடுத்து இலை மறைவாய் மாமாவேலை பார்த்ததற்கா.?
இரத்தைத்தை பாலாக்கி உனது பசியாற்றவலை பட்டினியில் கிடத்தி அவனது உருவத்திற்கு பாலாபிஷேகம் செய்ததற்க்கா.?
இதைவிட மேலாய் திரைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் சம்பந்தம் அல்லாத நடிகனை உன்னை ஆளும் அதிகாரத்தில் அமர வைத்து அழகு பார்த்ததற்கா.?
.
இதெற்கெல்லாம் உனது பதில் ஆம் எனில் தவறு நீ பழிகூரும் திரை கூதடியல்ல ( ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் நீ விரல் நீட்டும் கூத்தாடிகள் ) முழுமுதற் காரணம் அறவே அறிவும், உணர்வும் அற்ற நீ மட்டுமே.
.
மருத்துவம், பொறியியல், கணிதம், அறிவியல் எந்திரவியல் போன்று திரையும் ஒரு துறை அதில் நடிப்பவனும் இயக்குபவனும், பணியாற்றுபவனும் ஒரு வியாபாரியே. வியாபாரி என்பவன் வர்த்தகம் செய்து பணம் ஈட்டுபவன் மட்டுமே. நீ அவனது திரைக்காக செலவிடும் பணத்திற்கு உன்னை மகிழ்விப்பது மட்டுமே அவனது கடமை உனக்காக போராடுவதும், குரல் கொடுப்பதும் அல்ல நினைவிற்கொள்.
.
வந்தேறி ரஜினி என்பவன் தமிழனல்ல அவன் பிறப்பால் யாரோ அதற்காக குரல் கொடுக்கிறான். அதை கேள்வி கேட்க தகுதியற்றவன் நீ.

1) விபச்சாரிக்கு போராடிய இவன், உனது சகோதரிகள் கற்பை சூரையாடியதற்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல காரணம் அவள் அவனது துறை சார்ந்த நடிகை நீ ரசிகன் அவ்வளவே,
2) ஒரு நடிகனாய் சஞ்சய்தத் தீர்பிர்க்கு அனுதாபம் தெரிவிப்பதும், தவறை மன்னிக்க செய்வதும் என்ன தவறு.
3) குடிநீர், மின்சாரம், எல்லை, போன்ற பல பிரச்சனைகளுக்கு தமிழகத்துக்கு எதிராக குரல் கொடுத்ததில் என்ன தவறு அவன் அவன் இனத்துக்காகவும், மொழிக்காகவும் உணர்வோடு செயல்டுகிறான்.
.
கமல் தான் ஒரு வியாபாரி மட்டுமே என பலமுறை பொதுப்படையாக அறிவித்தவன். அவனிட்ட முதல் போகும் நிலையில் கண்ணீர் சிந்தியதும், வருந்தியதும் ஒரு வியாபாரியாகவே அதற்கு களமிறங்கி போராடி அவனை கைதூக்கி விட்டது பாராட்ட தக்கதே அதற்காக அவன் உனக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.
.
மேற்கூர்யா ஏதும் உனது மூளைக்கு எட்டவில்லை எனில் எட்டும் பொருட்டு சில
உனது பசிக்கும், தாகத்திற்கும் பிறரை சாராத நீ,
உனது வலிக்கும், வேதனைக்கும் பிறரை நாடுவது உனது கையாலாகாத தனம்.
இல்லை எல்லாத்துக்கும் என் தலைவன் தான் வேனும், அவர் சொன்னதான் நாங்க கேப்போம், அவர்தான் எங்களை காக்க வந்த ரட்சகன்னு சத்தம் போட்டிங்க உங்க அவதாரத்திற்கு படையலாய் உன் மனைவியை, சகோதரியை கொடு.
.
மூளை என்பது இருப்பில் சிந்தி, மனக்கண் இருப்பின் விழித்தெழு.
.
நிலைமாற உணர்வோம்

Wednesday 27 March 2013

தமிழகத்தில் சிங்கள வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் போட்டிகளை முடக்குவோம்!

தமிழகத்தில் சிங்கள வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் போட்டிகளை முடக்குவோம்!

தமிழர்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த கொலைபாதக சிறிலங்கா அரசாங்கம்மீது சீற்றங்கொண்டு தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கும் இந்நிலையில் இந்தியாவில் கோலகலமாக நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறிலங்காவைச் சேர்ந்த 12 கிரிக்கற் வீரர்கள் பங்குபற்ற உள்ளனர்.

இதில் சென்னை அணியில் சிறிலங்கா பந்துவீச்சாளர் நுவன் குலசேகர பங்கேற்கிறார். இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கா உருகிய தயாநிதிமாறனின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் ரைசஸ் அணி தனது அணிக்கு கப்டனாக குமார் சங்கக்காரவை நியமித்துள்ளது. இவர் தவிர சிறிலங்காவின் சகல துறை ஆட்டக்காரர் திஸ்ஸர பெரேராவும் இந்த அணிக்கா விளையாட இருக்கிறார்.

தமிழின ஒழிப்பில் ஈடுபட்டுள்ள, சிங்கள அரச டைகளுடன் நெருக்கமானவர்கள்தான் சிறிலங்கா கிரிக்கட் அணி வீரர்கள். ஐபிஎல் போட்டிகளில் புனே அணிக்காக விளையாட இருக்கும் அஜந்த மென்டிஸ் இலங்கை இராணுவத்தில் 2வது லெப்டினன்ட் ஆக உள்ளவர். இவர் ஆட்டிலறிப்படையில் சுடுநராக சிறந்த சேவையாற்றியவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். பல அப்பாவித் தமிழ் மக்கள் வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பவற்றில் தஞ்சம் அடைந்திருந்த வேளை அவர்கள்மீது குண்டுகளை ஏவிப் படுகொலை செய்ததுதான் இவர்சார்ந்திருந்த ஆட்லறிப்படை.

கொலைபாதக சிங்கள இராணுவத்தின் செயல்களை பல சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்தியுள்ளவர் மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான அணியின் கப்டனாக இருக்கும் குமார் சங்கக்கார. ஆகவே தமிழர்களின் கொலையை மூடிமறைத்து சிறிலங்காவிற்கு சர்வதேசமட்டத்தில் ஒரு நற்பெயரை உருவாக்க துணைநிற்கும் சிறிலங்கா கிறிக்கற்றைப் புறக்கணிப்போம். சிங்கள தேசத்திலிருந்து ஐபிஎல்லில் விளையாடவரும் வீரர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த சிங்கள வீரரரையும் விளையாடவிடோம் என உறுதிபூணுவோம்.

Tuesday 26 March 2013

சிகரட் பிடிக்கும் நம் நண்பர்கள் அதில் இருந்து விடுபட 'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சை

சிகரட் பிடிக்கும் நம்  நண்பர்கள் அதில் இருந்து விடுபட 'இமேஜ் தெரபி' எனும் மனோதத்துவ சிகிச்சையின் பகுதி

நண்பர்களே முழுமையாக படித்துவிட்டு பகிரவும், இதில் ஒருவர் திருந்தினாலயே எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்...!

என் முதல் கட்டப் பணி உங்களுக்கு சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன். இது உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். தெரிந்து இருந்தால் நீங்கள் மிகப்பெரிய குற்றவாளி! தெரியாதவர்களை மன்னித்து விடுகிறேன்

கடவுள் நமக்கு இந்த உடலைத் தந்திருக்கிறார் வெளியே தோலும் கண்களும் மூக்கும் கை கால்களும் தெரியும் உறுப்புகள் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியும். ஆனால் என் சாண் உடம்பு தோல் போர்த்தி உள்ளே நடக்கும் விஞ்ஞான அற்புதங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்..?

முதல் உதாரணம்: நாம் சுவாசிப்பது நமக்குத் தெரியும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது? நம் நுரையிரலில் என்ன நடக்கிறது அது வெளிப்படுத்தும் பொருள் என்ன? மேலே பார்க்கலாம்!.

நமது உடலின் தசைகளை புதுப்பிக்க ரத்தம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் சிகப்பணுக்கள் உள்ளன. இந்த அணுக்கள் கரையக் கூடிய ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கொண்டு செல்கின்றன. இதனால் செல்கள் உயிர் பெறுகின்றன.

அது சரி இரத்தத்தில் எப்படி ஆக்ஸிஜன் கலக்கிறது?

வியக்கப் போகிறீர்கள்...மெல்லப் படியுங்கள்... புரியும் வரை படியுங்கள்...அதுவரை நான் உங்களுக்காக காத்து இருப்பேன்...

கடவுளின் மிகப்பெரும் கருணையில் இந்த வினை மாற்றம் நுரையீரலில் நிகழ்கிறது. நமது நுரையிரல் பஞ்சு போன்ற அல்லது ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பில் உள்ளது. நுரையிரல் வெளிக்காற்றை உட்கொள்ளும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ஸ்பாஞ்சின் உள்ளே போகிறது. சிறிய சிறிய துவாரங்களின் முனைக்கு செல்லும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அங்குள்ள மிகச்சிறிய இரத்த நாளத்தின் முனையில் உள்ள ஒரு மைக்ரான் அளவுள்ள இரத்தம் உடனே தன்னுள் ஆக்ஸிஜனை கரைத்து உட்கொண்டு உடனே பறக்கிறது. பறந்து செல்லும் இந்த இரத்தம் தான் திசுக்கள் உள்ளே சென்று அதை புதுப்பிக்கிறது.

எதற்கு இதை நான் உங்களிடம் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது......

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-

1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது.

2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது.

இதென்ன? தின்பவனுக்கு கண் இல்லையா?

எனக்கு தெரியாதா? முட்டையா அல்லது தயிரா என கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு பரிட்சை வைக்கிறேன். உங்களால் கண்ணை மூடிக்கொண்டு நான் தரும் உணவில் உள்ள பொருள்களை மூக்கையும் பொத்திக் கொண்டு உங்களால் சொல்ல முடியும் என்றால் உங்களுடன் சேர்ந்து நானும் புகைபிடிக்க தயார்!

அவ்வாறு இல்லையென்றால் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு நீங்கள் உங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தயாரா?

சவால்!!!!!!!!!!!!

3. நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.?

எப்படி?

புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப் கோதுமைமாவை உங்களால் சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப் கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம் போடுகிறது!.

அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?

ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன் சொன்ன சிறிய துவாரம் கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!!

உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.....

கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு ஆப்பு அடித்தது போல மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.

பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது சிகரெட்டுகள் பிடிப்பதன் மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!.

திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை !

ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை.

என்னது? தாம்பத்திய உறவில் பிரச்சனையா? போய் சொல்கிறீர்கள் சார்..... எனக்கு காத்து குத்தியாகி விட்டது என்று சொல்லும் காம ராஜர்களே.... கேளுங்கள் .....

ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்லும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்.... உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன நியாயம்?

இது தேவையா?

எங்கே இப்போதாவது உங்களுக்கு தோன்றுகிறதா? சிகரெட்டை விட வேண்டும் என்று?

ஆம் தோன்றுகிறது என்போருக்கு சபாஷ்!

இன்னும் இல்லை என்பவருக்கு இன்னமும் பல கதைகள் இருக்கிறது. சொல்லிக் கொண்டே போவேன்...வெட்கமில்லாமல்....சிகரெட் குடிப்பதற்கு நீங்கள் வெட்கப் படவில்லை...அதன் தீமைகளையும் விளைவுகளையும் சொல்லுவதற்கு நான் என் வெட்கப் பட வேண்டும்?

அடுத்த மிகப்பெரிய வெடிகுண்டு தலைமுறை மாற்றம்! சரியான அளவில் இரத்ததில் ஆக்ஸிஜன் இல்லாமல் போனால் உங்களின் உயிர் அணுக்கள் பாதிக்ப்படுகிறது.

எவ்வாறு?

புரத சத்துக்களும் பின்னர் கண்ணிற்கும் அறிவிற்கும் புலப்படாத பல நுண்ணிய விஷயங்கள் மூலம் மனிதனின் உயிரணுக்கள் உண்டாகின்றன. ...... குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள இரத்ததில் உயிரணுக்களின் குரோமோசோம்களின் எழுதப்படும் தலைமுறை பற்றிய விவரங்களில் குறுக்கீடு ஏற்பட்டு உங்கள் குழந்தை உங்கள் டி என் ஏ விலிருந்து மாறுபட்டு ஒரு தலைமுறை உறவு விட்டு போகிறது.

அதனால் என்ன என்று கேட்கும் ஜெனடிக்ஸ் அறியா நண்பனே? ஜீன்கள் குறைந்தால் எல்லா வித நஷ்டங்களும் உனக்கில்லை .... உன்னால் பிறக்கும் குழந்தைக்குத்தான் ....என்ன வெல்லாம் நடக்கும்?

உங்கள் குழந்தை நோஞ்சானாக பிறக்கும்! சுவாச கோளாறு கண்பார்வை கோளாறு மற்றும் சில சமயங்களில் நோய் எதிர்பு சக்தி குறைந்து எடுத்ததற்கெல்லாம் வியாதி என்று எப்போதுமே நோயில் விழும் அபாயம்.!

யார் காரணம் இதற்கு? உங்கள் உடலை கெடுத்துக் கொள்வது உங்கள் உரிமை எனில் உங்களால் பிறக்கும் உயிர்க்கு நீங்கள் எப்படி தீங்கு நினைக்கலாம்?

அக்குழந்தைக்கு நல்ல கல்வியும் ஒழுக்கமும் கொடுக்க வேண்டிய தந்தையே அதன் நோய்க்கான மூலக்காரணம் என்று அதற்கு தெரிய வரும் போது உங்களின் மரியாதை என்ன ஆகிறது?

நினைத்து பாருங்கள் கையில் சிகரெட்டுடன் நீங்கள்! விந்தி விந்தி நடந்து இருமிக் கொண்டு வரும் உங்கள் மகன்! அல்லது மகள்!!

யார் காரணம்?

நீங்கள் இல்லையா?

அதன் காரணம் உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லையா? சைத்தான் அல்லவா இது ? விட்டுவிட வேண்டுமா இதை?

உங்களுக்கு எந்த நல்ல பயனும் இல்லை! உங்கள் தாம்பத்திய உறவு திருப்தியில்லை!! உங்கள் குழந்தை நோயுள்ள சவலைக் குழந்தை!!! காலம் முழுதும் குற்ற உணர்வுடன் உங்கள் வாழ்க்கை!!!!

கவலையாக இல்லை உங்களுக்கு?

இந்த கணமே வேண்டாம் என விட்டுவிடுங்கள்!

அதன் பயனாக நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். கீழ் கண்டவற்றை நீங்கள் உடனே அடையலாம்.....

1. புகைப்பழக்கம் விட்ட இரண்டாவது நாளிலிருந்து உங்களின் நாவு மீண்டும் பழைய சுவையை திருப்பித்தரும்.

2. பாலின் மெல்லிய சுவையையும் மணத்தையும் அறிவிர்கள்.

3. மல்லிகைப்பூ மணம் புகையிலை மணமில்லாது நல்ல வாசம் தரும்.

4. தயிருக்கு இத்தனை சுவை உண்டா என உங்கள் மனம் வியக்கும்.

5. சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் மனம் ஆழமாக பதியும் இதெல்லாம் நீங்கள் புகைப்பதை விட்டுவிட்ட 48 மணி நேரத்தில் நடக்கும்.

ஆனால் உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது! என்னால் ஒரு மணிநேரம் கூட புகை பிடிக்காமல் இருக்க முடியவில்லையே என்பவர்களுக்கு!

நான் இருக்கிறேன் வழி சொல்ல!

எத்தனை பேர் என்னுடன் பயணிக்கத் தயார்?

என்னுடன் பயணம் செய்பவர்கள் அனைவரும் நிச்சயம் இதிலிருந்து விடுதலை பெறுவீர்கள் நம்புங்கள்! நிச்சயம்! உறுதி.!

புகைப்பதை நிறுத்த முடியாமல் போவதின் காரணம் என்ன ?

சிகரெட்டில் உள்ள புகையிலையில் 'நிக்கோட்டின்' என்னும் ரசாயனம் தான்.

இது வெள்ளைக்கார துரையின் செயல்பாடு போல! நண்பன் போல முதலில் வரும், பின்னர் விருந்தாளியாகி களிக்கும், அதன் பின் உங்கள் எஜமானனாகி உங்களை அடிமை செய்யும்!

நிகோடினும் அது போலவே செயல்படுகிறது.

முதல் முறை நீங்கள் புகை பிடித்த போது 'கிர்'ரென்று ஒரு கிறக்கம் வந்ததா? அதை போதை எனகிறிர்களா? அது போலவே ஒவ்வொரு சிகரெட்டிலும் வரும் என்று நினைத்தீர்கள் இல்லையா?

ஆனால் அது நடக்காமல் சில நாட்கள் கழித்து காலையில் பிடிக்கும் சில சிகரெட்டிற்கு மாத்திரம் போதை தரும் சங்கதி இருந்தது இல்லையா? நாளின் மற்ற சமயங்களில் அது போல நடக்கவில்லை? கொஞ்ச நாள் கழித்து காலையிலும் அந்த முதல் சிகரெட்டும் போதை தரவில்லை இல்லையா?

ஆனால் நடந்தது என்ன முதல் முதல் குடித்த சிகரெட் உங்கள் நண்பன் போல வ்ந்து போதை தந்தது! காலையில் போதை தந்த சிகரெட் உங்கள் விருந்தாளி ஆனது! பின்னர் நீங்கள் புகைத்த அனைத்து சிகரெட்டிற்கும் நீங்கள் அடிமையாகி போனீர்கள்!. காலையில் டாய் லெட் போக உங்களுக்கு முதல் தேவை ஒரு சிகரெட்....

உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றம் என்ன? ஏன் திடீரென்று ஒரு நாளைக்கு இத்தனை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தீர்கள்?


இதன் பெயர் தான் 'நிக்கோட்டின் அடிமைத்தனம்'. மருத்துவத்தில் நிகோடின் 'க்ரேவிங்' என்று கூறுவார்கள் உங்கள் உடலில் நிக்கோடின் ஒரு அளவு வரை கரைந்து உங்களுக்கு மன நிறைவை தரும் ஆனால் கரைசலின் அடர்த்தி குறையும் போது 'சிகரெட் குடி .....சிகரெட் குடி .......' என்று உங்களைத தூண்டும்.

அப்போது தான் நீங்கள் அடுத்த சிகரெட்டை தேடுவிர்கள்.

புகைத்த பின் உங்களுக்கு திருப்தி உங்களுக்கு திருப்தி அல்ல, உங்கள் ரத்தத்தில் கலந்துள்ள நிகோடின் சாத்தானுக்குத் திருப்தி! இனி அடுத்த சிகரெட் சாத்தான் உங்களிடம் கேட்கும் வரை உங்களுக்கு சிகரெட் பிடிக்க தோன்றுவதில்லை.

நோய் நாடி நோய் முதல் நாடி அதன்
வாய் நாடி வாய்ப்பக் கொளல்'

எனும் குறளிற்குத் தக்கவாறு நாம் சாத்தானை எதிர்கொள்ள போகிறோம். நாம் அது நம்முள் மீண்டு எழாதபடி முழு சக்தியும் பிரயோகித்து அதனை அடக்கி விரட்டப்போகிறோம். உங்கள் மனபலம் கொண்டே நீங்கள் நண்பனாய் நினைத்த விரோதியை உங்கள் கையாலேயே அடித்து விரட்டப்போகிறீர்கள்.

குடி சாத்தானே...! இதோ நாங்கள் உன்னை தொலைத்து தலைமுழுக வந்துள்ளோம் அதற்குள் எத்தனை வேண்டுமானாலும் குடித்து முடி. நீ மடியப்போகும் நாள் குறிக்கப்பட்டுவிட்டது.

Monday 25 March 2013

காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?

காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?
******************************
****
ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார்... அன்று.. அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே!!!
தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.

அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

குறிப்பு :************* அன்றைய தினம் ராஜீவ் காந்தி பெற்று கொண்ட இலங்கை ராணுவ மரியாதையில் எந்த சிங்களவ படை வீரனிடமும் துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. ஒரு வேலை இருந்திருந்தால் சிங்களவன் அடித்திருக்க மாட்டான் கொன்று இருப்பான்.

இவ்வளவு பெற்றும் ராஜீவ் காந்தி சிங்களவனுக்கே துணை நின்றார் என்பது உலகறிந்த அவலம்...

Sunday 24 March 2013

சவூதி வாழ் நண்பர்களின் கவனத்திற்க்கு...!!!

சவூதி வாழ் நண்பர்களின் கவனத்திற்க்கு...!!!

******************************
******************************
*****************************************************

சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....

கீழை ஜஹாங்கீர் அரூசி-தம்மாம்

சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே,

சமீப காலமாக நமதருமை சகோதரர்களில் சிலர் விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

தாயகமும் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவும் முடியாமல் விக்கித்து நின்ற அவர்களின் பரிதாப நிலை கண்டு என்னால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.

இப்போது என் கதியும் அதே நிலைதான்.விசயத்திற்கு வருகிறேன்,

நாம் நமது அத்தியாவசிய பயன்பாட்டிற்காக நமது இகாமாவில் ( STC,ZAIN,MOBILY )போன்ற கம்பெனிகளில் சிம் கார்டு பெற்று அதை முறையாக பயன்படுத்தி வருகிறோம்.

நம்மில் சிலர் ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பது இயல்பு.

இப்போது பிரச்சினை என்னவென்றால் நமக்கே தெரியாமல் நம்முடைய இகாமாவில் வேறு யார்,யாரோ சிம் கார்டுகளும்,நெட்கார்டுகளும் பெற்று பயன்படுத்திவருவதால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் பலியாகி விடுகிறோம்.

இப்படி ஒருவர் இகாமாவில் வேறொருவர் நெட்சிம்கார்டு வாங்கி தாறுமாறாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சவூதி ரியால்களுக்கு பில் பாக்கி வைத்து விட்டதால்,

யாருடைய பெயரில் சிம்பெறப்பட்டதோ அவர் ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றனர்.

அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்தான் தமிழ் சகோதரர்.

நிலுவைத்தொகை முழுவதையும் திருப்பி செலுத்தாத வரை இந்த நபர் சவூதியை விட்டு வெளியேற முடியாது.

இந்த தவறுகள் எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

தற்போது எனது இகாமாவில் எனக்கே தெரியாமல் 9 சிம்கார்டுகளும்,5 நெட்சிம்கார்டுகளும் STC மூலம் பெறப்பட்டு யார் யாரோ பயன் படுத்தி வருவதை கண்டு நொந்து போய் விட்டேன்.

உடனடியாக STC தலைமை அலுவலகம் சென்று புகார் செய்து விட்டேன்.

அவர்களும் எனது புகாரை பதிவு செய்து விட்டு 24 மணி நேரத்தில் இல்லீகலாக செயல்படும் சிம்கார்டுகளின் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என சொல்லி 5 நாட்களாகி விட்டன.ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.

வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதை போல் உணர்கிறேன்.

இது போல எத்தனையோ நபர்கள் பாதிக்கப்பட்டு சிம்கார்டு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

விஷயம் தெரிந்தவர்கள் சுதாரித்துக் கொள்கின்றனர் விஷயம் தெரியாதவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டு பயன்பாட்டில் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

STC சிம்கார்டு வைத்திருப்பவர்கள் 902 என்ற எண்ணிற்கு 9988 என்ற எண்களை டைப் செய்து மெசேஜ் செய்தால் உடனே நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்ற விபரம் வந்து விடும்.

STC சிம்கார்டு வைத்திருக்கும் சகோதரர்கள் உடனே உங்களது இகாமாவின் நிலைபாட்டை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட சிம்கார்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் இது காலத்தின் மிக மிக அவசர அவசியமாகும்.

Saturday 23 March 2013

ஊடக விபச்சாரம்.

ஊடக விபச்சாரம்.

இன்று சன் டிவியின் செய்தி ஆசிரியர் ராஜா என்பவர் மேல் ஒரு பாலியல் புகாரை அந்த நிறுவனத்திலேயே பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொடுத்துள்ளார். இந்த ராஜா என்பவர் வேறு யாருமில்லை, ரஞ்சிதா - நித்யானந்தா ஆபாச வீடியோவை சன் டிவியில் போட்டு கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து கொடுத்தவர் தான். இவர் மீது ஒரு கொலை வழக்கும் ஏற்க்கனவே இருக்கிறது

இந்த ராஜாவை பற்றி "சன் பிக்சர்ஸ்' முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்த கருத்து இது தான். "சன் டிவி ராஜாவுக்கு, கோடி, கோடியாக சொத்து வந்தது எப்படி என, எனக்கு தெரியும். பணம் வசூலிப்பதில் ராஜாவின் பாணியே தனி. கழிவு நீர் ஓடுகிறது; அதனால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என செய்திபோட்டு விடுவதாக மிரட்டி, ஆலை அதிபர்களிடம், லட்சக்கணக்கில் பணம் கறப்பார்"

சன் டிவி நிருபராக வேலை பாரத்த சங்கீதா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் அந்த கொலை வழக்கை நீர்த்துப்போக வைத்துவிட்டார்கள்.

இதேபோல் ராம.செல்வராஜ் சன் டிவியின் கிரைம் நிருபராக பல காலமாக பணியாற்றி வருகிறார். இதனால், இவருக்கு பல காவல்துறை அதிகாரிகளோடு நெருக்கமான தொடர்புகள் உண்டு. சமீபத்தில், ஒரு நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத் தடுப்பு போலீசார் ஒரு ரெய்டு நடத்தினார்கள். அந்த ரெய்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ராம.செல்வராஜுக்கு, அந்த வழக்கில் சிக்கிய ஒரு பெண்ணோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் “சன் நியூஸ்” தொலைக்காட்சியில் “நிஜம்” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக இந்து ஆன்மீக, கலாசார, பழக்கவழக்கங்களை கேவலமாகச் சித்தரித்து, பார்வையாளர்கள் மனதில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, இந்து மதத்தின் உன்னதமான கலாசாரத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது

ரஞ்சிதா - நித்யானந்தா ஆபாச வீடியோவை சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப செய்தது விபச்சாரத்தை விட மோசமான செயல். அவர்களின் தொலைகாட்சிகளில் வரும் நாடகங்கள் தான் சமூக அவலங்களுக்கு மூலக்காரணம். சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

ஏற்க்கனவே 40 வயதிற்கு உட்பட்ட சன் டிவி ஊழியர்கள் மன உளைச்சலால் இறந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இது போல அதிக புகார்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவை ஊடக தர்மங்களால் அதிக பத்திரிக்கை மற்றும் டிவிகளில் வருவதில்லை. ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மாறன் குடும்பம் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.

தமிழனுக்காக தமிழ்நாட்டில் போய்ப் போராடு, ஆந்திராவில் அல்ல: IPS அதிகாரி !

தமிழனுக்காக தமிழ்நாட்டில் போய்ப் போராடு,
ஆந்திராவில் அல்ல: IPS அதிகாரி !
******************************************
வணக்கம் !

இலங்கைத் தமிழர் விவகாரம் முதல், தமிழ்மீனவர் தாக்கப்படுவது வரை கண்ணைத் திறந்து பார்க்காமல், காது கொடுத்தும் கேட்காமல் காலம் காலமாக சுயலாபத்தைக் கணக்கில் கொண்டு தமிழனை பிரித்து வைத்து வருகிறது நமது இறையாண்மை மிக்க இந்திய அரசு என்பதை யாவரும் அறிவோம். இலங்கையிலும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் தமிழன் ஒடுக்கப்படுகிறான் என்பதற்கு அத்தாச்சியாக எங்களது இன்றைய அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று இந்தியா முழுதும் பரப்பும் விதமாக, சில எதிர்ப்புகளுக்கிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (17/3/13) ஹைதராபாத்தில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை நாங்கள் மேற்கொண்டோம். இந்தப் போராட்டம், நம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அவசியத்தை ஓரளவிற்கு மற்ற மக்களுக்கும் எடுத்துச் சென்றது. இதை மேலும் விரிவுபடுத்தும் விதமாகவும், உயிரைக் கொடுத்து போராடும் நம் மாணவர்களை ஆதரிக்கும் விதமாகவும் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தோம்.

அதன்படி, இன்று காலை பதினோரு மணிக்கு கிளம்பி, நானும் ராஜா என்ற நண்பரும், ராம்கோபால் பேட்டை காவல் நிலையத்தை அடைந்தோம். எங்களுடன் அப்துல் காதர் என்ற நண்பரும் இணைந்து கொண்டார். மணி பனிரெண்டு. அங்கே உள்ள துணை ஆய்வாளரை சந்தித்து, எங்களது போராட்டத்தைப் பற்றியும் அதற்கான அவசியத்தைப் பற்றியும் விளக்கினோம். அதை நன்கு புரிந்து கொண்ட அவர், நாங்கள் கொடுத்த கடிதத்தில் சில மாற்றங்களைச் செய்து கொண்டு, மதியம் இரண்டு மணிக்கு வாருங்கள், ஆய்வாளர் வருவர் என மிகவும் நம்பிக்கையோடு பேசினார்.

இன்று நான் அலுவலகம் போகவில்லை. அப்துல் காதர் அவரது உணவகத்தை திறக்கவில்லை. மதியம் அலுவலகம் முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று LKG படிக்கும் தனது குழந்தையை கவனிக்க வேண்டிய கட்டாயம் ராஜாவிற்கு. காவல் நிலையத்திற்கு வரும் பொழுதே காதர் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தார். குழந்தைகளுடன் அவரது தாய், மனைவியும் கூட இருந்தனர். அவர்களை காரில் விட்டு விட்டு, 2.30 வரை நாங்கள் காத்திருந்தோம். வேறு வழியின்றி போக மனமில்லாமல் ராஜா தனது குழந்தைக்காக அப்போது சென்று விட்டார்.

எங்களது காத்திருப்பு நீண்டது. குழந்தைகள் முதல், யாரும் மதிய உணவு கூட எடுத்துக் கொள்ள முடியாத சூழல். மாலை நான்கு மணி... ஆய்வாளர் வந்தார். உள்ளே போனவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. இன்னும் அரைமணி நேரம் காத்தோம். பிறகு, அந்த காவல் நிலையத்தின் எழுத்தாளர் எங்களை அழைத்து, நீங்கள் DCP யை போய்ப் பாருங்கள் என்றார். வேறு வழியின்றி DCP அலுவலகத்திற்கு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றோம்.
சற்று நரத்தில் அந்த IPS அதிகாரியைப் பார்க்க அனுமதி கிடைத்து. உள்ளே சென்றோம்.

ஆங்கிலத்தில் தொடர்ந்த எங்களுக்கு இடையிலான உரையாடல் தமிழில்..

நான் மற்றும் தோழர் காதர்: வணக்கம் ஐயா

DCP: என்ன விடயம் ?

நான்: ஐயா, 2009 இல் சிறிலங்காவில் 1,40,000+ தமிழ்ப் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் நீதி வேண்டி தமிழகத்தில் மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஆதரிக்கும் விதமாக....

DCP: போரடனும்னா தமிழ்நாட்டுல போயி போராட வேண்டியதானே ?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று என்னக்குத் தெரியவில்லை.. இருந்தும் தொடர்ந்தேன்...

நான்: ஐயா, இன்று ஐ.நா பேரவையில் இந்த இனப்படுகொலை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். விவாதத்தின்போது இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்கள் சேர்க்க இந்தப் போராட்டம் சிறிய அளவிலாவது உதவும்...

DCP: போரடனும்னா தமிழ் நாட்டுல போயி போராட வேண்டியதானே ? இங்க போரடவெல்லாம் அனுமதி தரமுடியாது. அதான் இன்னைக்கு அந்த தீர்மான நிறைவேற்றப் பட்டதே ?

நான்: ஐயா, தீர்மானம் எப்படியும் நிறைவேறும். ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். அதோடு தமிழ் என்று உணர்வோடு மட்டுமில்லாமல் மனித நேயத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் நீதிக்காக நாங்கள் நடத்தும் போராட்டம் இது. தயவு செய்து அனுமதி தாருங்கள். எங்கள் போராட்டம் மெழுகு வர்த்தி ஏந்தி ஊர்வலமாகப் போகும் அமைதி வலிப்போரட்டமாகவே இருக்கும். எங்களுக்குதேவையானது வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே.. தயவு செய்து அனுமதி தாருங்கள்.

DCP: ஏற்கனவே இங்க தெலுங்கான போராட்டம் இருக்கு. அதெல்லாம் தரமுடியாது. நீங்க தமிழ் நாட்டுக்கு போய்ப் போராடுங்கள் என மீண்டும் மீண்டும் அதே வார்த்தையில் அழுத்தம் காட்டினார்.

நான்: உங்கள கெஞ்சிக் கேக்குறேன் ஐயா, அனுமதி தாருங்கள்.

DCP: முடியாது..

கடைசியில் எங்கள் கடிதத்தை வாக்கிக்கொண்டு, நீங்கள் கிளம்புங்கள், அனுமதி இல்லை என்றார். வேறு வழியின்றி வெளியேறினோம்.

இந்த உரையாடலுக்குப் பின், நாம் இந்தியனா தமிழனா என்ற கேள்வி எங்களுக்குள் உதித்தது. தமிழனுக்காக தமிழ்நாட்டில் போராடு இங்கே கூடாது என்று சொல்லி அனுமதியை மறுப்பது இது முதல் முறையல்ல. சென்ற முறையும் அனுமதி கோரியபோது இதே பதில்தான். இரண்டு முறையும் எங்கள் கடிதங்களை அவர்கள் படிக்கக்கூட இல்லை. இவர்களைப் பார்க்க நாள் முழுதும் குழந்தைகளுக்கு உணவு கூட கொடுக்க இயலாமல் அனைவரும் பட்டினியாக காத்திருந்தோம்.

தமிழன் என்று சொன்னால், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் காந்திபிறந்த நாட்டில், உலகின் மிகப்பெரும் குடியரசு நாட்டில், 8 கோடி தமிழர்கள் கொண்ட நாட்டில், எம் மக்களுக்காக ஒன்றரை மணி நேரம் கூட போராட எனக்கு அனுமதி கிடைக்க வில்லை யென்றால் நான் எதற்கு இந்தியன் என்று சொல்ல வேண்டும் ? தமிழனுக்காக தமிழ் நாட்டில் தான் நான் போரட வேண்டுமேன்றால் நான் ஏன் இந்தியன் என்று சொல்ல வேண்டும் ? ஒரு டெல்லிப் பெண்ணிற்காக போரடா இங்கே அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆயிரம் ஆயிரம் தமிழச்சியின் ஆத்மாக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இரண்டு கேரள மீனவன் கொல்லப்பட்டதற்கு வாய்கிழியப் பேசும் இந்தியா. இதுவரை 554 தமிழ் மீனவன் கொல்லப்பட்டதற்கு ஒரு கட்டணம் கூட சொல்லவில்லையே. தினம் தினம் தாக்கப்படும் மீனவர்களை பற்றி கவலைப்படவே இல்லையே. இனி நான் எதற்கு இந்தியன் என்று சொல்ல வேண்டும் ? தனித்த தமிழ்நாடு என்போரை இந்திய இறையாண்மைக்கு எதிரானவன் என்று சொல்லும் நீங்கள், தமிழ்நாட்டுக் காரனுக்காக அங்கே போய்ப் போராடு என்று சொல்வது தான் நீங்கள் கடைபிடிக்கும் இறையாண்மையா ? வேற்றுமையில் ஒன்றுமை என்பது இதுதானா ?

சட்டம் ஒழுங்கு சீர்குலையும், குண்டுவெடிப்பு அபாயம் இருக்கிறது என்று அனுமதி மறுப்பதற்கு மற்ற காரணங்களைக் கூறி இருந்தால் நான் மனதார ஏற்றுக் கொண்டிருப்பேன். அதோடு இந்த வாசகத்தைச் சொல்லியவர், ஒரு விவரமறியா அடிமட்ட கடைக் குடிமகனாக இருந்தால் பரவாயில்லை. சொன்னது ஒரு IPS அதிகாரி. இந்திய அரசாங்கத்தால் இந்தியன் என்ற அடையாளத்தோடு இந்தியர்களுக்காக நியமிக்கப் பட்ட ஒருவர். அவர்கள் தமிழன் என்று பிரித்துப் பார்க்கும்போது, என்னை எவ்வாறு இந்தியன் என்று சேர்த்துப் பார்க்கச் சொல்கிறீர்கள் ?

சொந்த இனத்தையே கொத்துக் கொத்தாக கொல்லப் துணைபோன, அவர்களுக்கு கிடைக்கும் நீதியையும் அடித்து பறிக்கும் அரசியல் உள்ள நாட்டில், என்னால் எவ்வாறு இனி இந்தியன் என்று சொல்ல முடியும் ?. அரசு வேறு அரசாங்கம் வேறு என்று சிலர் வாதிடலாம். அதற்காக மொத்த இனத்தையே பலிகொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

இதுவரை ஒரு முறை கூட நான் இந்தியனல்ல என்ற சிந்தனை எனக்கு வந்ததில்லை. இன்று அவ்வாறு சிந்திக்க வைத்த பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாய்ச் சொல்லும் இறையாண்மை மிக்க இந்தியாவையே சேரும்.



via - World Wide Tamil People

Friday 22 March 2013

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் விடுதலை முழக்கமிட்டவர் மாவீரன் பூலித்தேவன். இவருக்குத் தலைவன் கோட்டை ஜமீன்தார் நேரடியாக சில உதவிகளை செய்தார். ஒரு சில நேரத்தில் மறைமுகமாகவும் உதவினார்கள். ஏனெனில் ஆங்கிலேயர்கள் தனது பகுதிகளுக்கும், மக்களுக்கும் நெருக்கடி தருவார்கள் என்று மறைமுகமாக பல உதவிகளைச் செய்தார். ஆனால் பூலித்தேவர்க்கு தலைவன்கோட்டை ஜமீன்தார்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்க சில கருவிகளைக் கொடுத்துள்ளனர். மேலும் ஆங்கிலேயர்கள் பூலித்தேவரைத் தேடிவரும் போது தலைவன் கோட்டை பகுதியில் உள்ள தாருகாபுரம் மலையிலிருந்து தீப ஒளி (தீப்பந்தம்) காட்டப்படும். அவ்வாறு காட்டும்போது, பூலித்தேவர் அதை அறிந்து கொண்டு உடனே உஷாராகி கொள்வார். இவ்வாறு பூலித்தேவருக்கு மறைமுகமாகப் பல உதவிகளைச் செய்தன.

தலைவன் கோட்டை என்று பெயர் வர காரணம் :

இராமநாட்டில் உள்ள ஆப்ப நாடு, கீழவை நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை,தேவர் [மறக்குலத்தைச் ]சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இங்கு பிழைப்பிற்காக வந்தவர்கள். தாருகாபுரம் அருகில் வந்து தங்கினர். உடனே
தமக்கென்று ஊர்ப்பெயர் வேண்டுமென்று நினைத்த அவர்கள் வம்சத்தை வைத்து ஊர்பெயரும் வைத்தனர். அதாவது தலைவனார் என்ற பெயரால் தலைவன் கோட்டை என்று பெயர் வைத்தனர். பின்பு இதுவே பதினெட்டு பட்டிக்குத் தலைநகராக விளங்கியது. இவ்வாறு தலைவன் கோட்டை பெயர் உருவானது.

ஜமீன் குடும்பத்தார் வருகை :

“பதினெட்டு நற்பதியைப் கொண்ட
பலவளம் நிறைந்த நாட்டை
அதிபதியாய் ஆளப் பெற்றார்
ஆப்ப நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்”

ஆதியில் இராமநாட்டைச் சேர்ந்த ஆப்ப நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்து வாழத் தொடங்கினர். பாண்டிய நாட்டின் பகுதிகளில் ஒன்று தலைவன் கோட்டை இதன் அருகாமையில் உள்ளது. தாருகாபுரம் இவ்வூரில் குடியேறி வாழ்ந்தார் அவர்களில் ஒருவர் இந்திரராமசாமி பாண்டியன். இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது. இவர்கள் தேவர் [மறவர் ] இனத்தில் தலைவனார் என்ற வம்சத்தைச் சார்ந்தவர்கள்.


Thursday 21 March 2013

சன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு !

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?

மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.

ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட
ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி
செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.

அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி,
திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.

சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல்,குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.

சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து,
கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில்
பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு
மாற்றப்பட்டார்.

வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன்,செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால்
புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து,
தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு
மாற்றப்பட்டு உள்ளார்.

இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.

முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.

இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.விழுப்புரம் மாவட்டம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினருக்கு விழுப்புரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சன் டிவி கும்பல் அடிக்கும் கூத்து...
தொடரும்...

படங்கள் மற்றும் செய்தி: மக்கள் செய்தி மையம்
20.3.13 மாலை 5.30 மணி

நன்றி
அன்பு செல்வன்

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றி இலக்கியங்கள் :


மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றி இலக்கியங்கள் :

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் புகழ்பாடும் இலக்கியங்கள் மயூரகிக் கோவை, சிவகங்கை சரித்திரக்கும்பி, சிவகங்கைச் சரித்திர அம்மானையாகும். இவையனைத்தும் மருதுபாண்டியர்களின் புகழை பார் போற்ற எடுத்துறைக்கிறது

மயூரகிக் கோவை
இக்கோவை நூலின் ஆசிரியர் சாந்துப் புலவராவார். இவர் மருதுபாண்டியர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டும் தெரிகிறது. அவர் எவ்வளவு காலம் இருந்தார் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. இவர் தந்தை சர்க்கரைப் புலவர். இவர் இராமநாதபுரம் அரசவையில் அணுக்கனப் புலவராய் இருந்தவர். இவரின் பாடல்களில் மொத்தம் 536 கட்டளைக் கொண்டது. அதில் 14 பாடல்கள் பெரிய மருதுவின் புகழ் பாடுபவையாகும். இந்நூலை இயற்றியதற்காகக் காளையார் கோவில் அருகிலுள்ள சாத்தரசன் கோட்டை சமீபத்தில் உள்ள மகுதன்குடி என்னும் சிற்றூரை தானமாக மருதரசர் புலவருக்கு வழங்கியதாக ஆதாரம் உள்ளது.

செவிவழிச் செய்தியாக 1938ஆம் ஆண்டில் மருது சகோதரர்களைப் பற்றி உ.வே. சாமிநாத ஐயர் செவிவழியாகக் கேட்ட இரண்டு செய்திகளை எழுதியிருக்கிறார். 'முள்ளால் எழுதிய ஓலைமருதுபாண்டியர் ஆகிய தலைப்புகளில் அவர் கூறும் செய்திகள் :

ஆங்கிலேயரின் தாக்குதலுக்குத் தப்பிக் காடுகளில் மறைந்து வாழ்ந்த பெரிய மருது ஒரு முறை திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சிலந்தி நோயால் துன்புற்றுக் கொண்டிருந்தார். பகைவரின் ஆட்கள் அவரைத்தேடி அந்த ஊர் எல்லைக்குள் வந்துவிட்டனர் என்னும்செய்தியை அவரது நம்பகமான வேலையாள் தெரிவித்தார். மருதுபாண்டியர் ஓர் ஆடையைக் கிழித்துச் சிலந்தியை இறுகக்கட்டிக் கொண்டு தம் வளரியின் துணையுடன் குதிரை மீதேறி அவ்வூரினின்றும் அகன்றார். பின் குதிரையில் தப்பித்து ஒரு சிற்றூரை அடைந்தார்.

அவ்வூரை அடைந்த போது அவரைப் பசி வாட்டியது. ஒரு வயதான மூதாட்டி அவரை யார் என்று தெரியாமலேயே பழைய கூழுணவை அவருக்கு அளித்தார். உணவை உண்டபின் அயர்வினைப் போக்குவதன் பொருட்டு அம்மூதாட்டியின் வீட்டுக் கொட்டகையில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் அம்மூதாட்டிக்கு நன்றிக் கடனாக ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினார். தம்முடன் வந்த குதிரைக்காரனிடம் அவ்வீட்டு கூரையிலிருந்து ஓர் ஓலையையும், வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் செய்தார். அம்மூதாட்டிக்கு அவ்வூரை அளிப்பதாக எழுதிக் கொடுத்தார். அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் கொடுத்தால் வேண்டிய நன்மை கிடைக்கும் என்று கிழவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

வெளியூருக்குச் சென்றிருந்த தம் மக்கள் வந்தவுடன் அவர்கள் வழியாக அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காண்பித்து மூதாட்டி உதவி பெற விரும்பினார். ஆனால் அதற்குள் பெரியமருதுவை ஆங்கிலேயர்கள் கைதுசெய்து தூக்கிலிட்டனர். அவர் தூக்கிலேறுவதற்கு முன் 'தாம் செய்த அறக்கொடைகள் தொடர வேண்டும்என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆங்கிலேயர் உறுதி கொடுத்தனர். இந்தச் சூழலில் மூதாட்டி அவரிடமுள்ள ஓலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காண்பித்து அவர் வாழ்ந்த சிற்றூரை தானமாகப் பெற்றார். அச்சிற்றூர் இன்னும் பழஞ்சோற்றுக்குக் குருநாதனேந்தல் என்ற பெயருடன் விளங்குகிறது. தமக்கு ஓலை எழுதிக் கொடுத்தவர் பெரிய மருதாம் என்பதை அவர் இறந்தபின் தான் அறிந்து உள்ளம் உருகினார் அந்த மூதாட்டி .

வஞ்சகனுக்கும் ஒரு சிலை :
வலையன் ஒருவன் பெரிய மருதுவுக்கு நெருக்கமானவனாக இருந்தான். அவன் பெயர் கரடிக்கருத்தான் என்பதாகும். பெரியமருது வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம் அவனும் உடன் செல்வது வழக்கம். அவனது வேட்டைத்திறமை பெரிய மருதுவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு முறை இருவரும் வேட்டைக்குச் சென்றனர்.
அவன் மட்டும் தனித்து ஒரு விலங்கினைத் துரத்திச் சென்றான். நீண்ட நேரம் அவன் திரும்பாமல் இருந்ததைக் கண்ட பெரிய மருது வேதனை கண்டார். ஆனால் வெகுநேரம் கழித்து அவ்வலையன் ஒரு பெரிய கரடியைத் தோளில் தூக்கிவைத்து அவர் காலடியில் போட்டான். போர்க்களத்தில் அவன் மருது சகோதரர்களுடன் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டான். அவனது வீரத்தை பாராட்டும் வகையில் காளையார் கோயில் பழைய கோபுர வாயிலின் வலப்புறத்தில் பெரிய மருது அவனின் சிலையை வைத்தார். அச்சிலையில் அவன் கையில் துப்பாக்கி வைத்து இருப்பதை காணலாம். இத்தகைய வீரனே பிற்காலத்தில் பணத்துக்காகப் பெரிய மருதுவைக் காட்டிக் கொடுக்கும் வஞ்சகனாக மாறினான். பெரிய மருதுவும், சின்ன மருதுவும் வளரி வீசுவதில் வல்லவர்கள். வளரி என்றும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆற்றலும், திறமையும் படைத்த ஒருவர் முன்னூறு அடி தூரத்தில் உள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை ஆச்சரியப்படத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வீழ்த்திவிடலாம். ஆங்கிலேயத் தளபதி கர்னல் வேல்ஷ், சின்ன மருதுதான் முதன் முதலாக ஈட்டி எறியவும், வளரியைச் சுழற்றி எறியவும் தனக்குக் கற்றுக் கொடுத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன மருதுவைப் போலவே, பெரிய மருதுவும், வளரி எறிவதில் வல்லவராகவும் நிகரற்றவராகவும் விளங்கினார். ஒரு முறை பெரிய மருது மதுரை சென்றிருந்தார். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளத்திலிருந்து வளரியை வீச ஆயத்தங்கள் செய்தார். பெரிய மருது தெப்பக்குளத்தில் நின்று கொண்டு தனது கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றிக் கொண்டு, வளரியை வேகமாக விட்டெறிந்தார். அவர் எறிந்த வளரி மாரியம்மன் தெப்பக்குளத்தின் நடு மண்டபத்தைத் தொடாமல் அக்கரையில் போய் விழுந்தது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு மருதரசன் தனது மூச்சைப் பிடித்து வளரியை மிக வேகமாக எறிந்த வேகத்தில் அவர் இடுப்பில் கட்டியிருந்த தங்க அரைஞான் தெரித்து விழுந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் தான் சென்ற 31-10-2007 அன்று முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மருது பாண்டியர்களின் சிலையை அவர் கைப்பட திறந்து வைத்தார். வாழ்க நம் முக்குல தெய்வங்கள் நம் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள்