Monday, 31 October 2011

27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்

 
அசுவனி-தனவந்தன்,நீதிமான்,

பரணி-கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,

கிருத்திகை-கல்விமான், அசடு,

ரோகினி- புலமைமிக்கவன்,செல்வந்தன்

மிருகசீரிஷம்-சத்தியவான், தனவான்,

திருவாதிரை-ஐனவசியன், சுயநலவாதி,

புனைபூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,

பூசம்-பக்திமான், சுகவாசி,

ஆயில்யம்-முன்கோபி, ஸ்திரீதுவேசி,

மகம்-பலவான், ஸ்திரீதுவேசியன்,

பூரம்-நீதிமான், ஆஸ்திகன்,

உத்திரம்-யோகவான், சுகபோகி,

அஸ்தம்-ஆஸ்திகன், அறிஞன்,

சித்தரை-காரியவாதி, ஏழை,

சுவாதி-பக்திமான், கலகக்காரன்,

விசாகம்-கல்விமான், சாமர்த்தியன்,

பூராடம்-செல்வந்தன், உபகார்,

உத்திராடம்-திறமைசாலி, பலவான்,

திருவோணம்-பொதுநலவாதி, தருமவான்,

அவிட்டம்-கம்பீரமானவன், அவசரக்காரன்,

சதயம்-நல்லவன், பிடிவாதக்காரன்,

பூரட்டாதி-கலைஞன், கீர்த்தியுடையவன்,

உத்திரட்டாதி,-செல்வந்தன், திறமைசாலி,

ரேவதி-இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி(அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்..



மூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா? : சீமான் கேள்வி


ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.

3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.

அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழ் இணையங்கள்

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்
அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.
பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.