Tuesday 14 January 2020

*வெண் பெங்கல் & வடை*

*வெண் பெங்கல் & வடை*
*தேவையான பொருட்கள்:*
பச்சரிசி – 3/4 உழக்கு
பாசிப்பருப்பு – 1/4 உழக்கு
நெய் -75 மிலி
வறுத்த முந்திரி-15
மிளகு-20
இஞ்சி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிது
பெருங்காயத்தூள்-சிறிதளவு
தண்ணீர்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பையும்,அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்குகலையவும். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி,சிறிதளவு சீரகம்,ஐந்தாறு மிளகுடன் ,அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
1 பங்கு அரிசி பருப்பு கலவைக்கு 4 பங்கு தண்ணீர் வைக்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை குறைக்கவும்.[இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும்]10 நிமிடத்தில் இறக்கி விடலாம்.
அடுத்து இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து,நெய் ஊற்றி,சிறிது கடுகு போட்டு பொறிந்ததும்,தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,சிறிதளவு பெருங்காயம்,கறிவேப்பிலை,வறுத்த முந்திரி,பொடித்த மிளகு போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வெண் பொங்கல் தயார்
வெள்ளை உளுந்து – 3/4 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிகை
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – பொறிக்க
செய்முறை
உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, குளிர்ந்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்.
அரைக்கும் பொழுது, அருகிலே நின்று, ஓரங்களை வழித்து விடுதல் வேண்டும். வழு வழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைக்கவும். வடை மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும்.
எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 3-4 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம்.
பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்Best regards,