Wednesday 18 November 2020

புதிய கார் வாங்கும் போது கார் ஷோரூமில் காருக்கு இன்ஸ்சுரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை

புதிய கார் வாங்கும் போது கார் ஷோரூமில் காருக்கு இன்ஸ்சுரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை

ஒருவர் புதிய கார் வாங்கி இருக்கிறார். 15.20லட்சம் விலையுள்ள காருக்கு 73000 ரூபாய் இன்சூரன்ஸ் என்று இன்வாய்ஸில் போடப்பட்டிருப்பதைக் கண்டு இது அதிகமாக இருக்கிறதே என்று தனது இன்சூரன்ஸ் துறையில் இருக்கும் தனது நண்பரிடம் விவரம் கேட்டிருக்கிறார். 12 லட்ச ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட அந்த பிரீமியம் அதே கவரேஜ் (பம்பர் டு பம்பர்) 53000 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று அவரது நண்பர் கூறியதைக் கேட்டு இவருக்கு அதிர்ச்சி.

ஆயிரம், இரண்டாயிரம் என்றால் பரவாயில்லை சொளையாக 20000 ரூபாய் என்றதும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார். கார் புக் செய்த ஷோரூமின் சேல்ஸ் மேனேஜரிடம் ஏன் இன்சூரன்ஸில் இவ்வளவு வித்தியாசம் என்று கேட்டதற்கு எங்க இன்சூரன்ஸ்ல எல்லாம் கவர் ஆகிடும், மத்ததுல ஆகாது என்று சின்னதா இருக்கசொல்ல உறிச்ச கோழி நீங்க சொல்றது, அதே கோழி பெரிசா இருக்கசொல்ல உறிச்சது நாங்க சொல்றது என்று அவர் பதில் அளிக்க, மீண்டும் தனது இன்சூரன்ஸ் நண்பரிடம் தொடர்புகொண்டு மீண்டும் விளக்கம் கேட்க, அவரோ ரெண்டுமே ஒரே கோழிதானே என்ற விளக்கத்தை அளித்திருக்கிறார். சேல்ஸ் அதிகமாக்க டீலர்கள் செய்யும் டகால்டியே தவிர்த்து வேறு எதுவும் இல்லை, நீங்கள் நோண்டி நொங்கெடுப்பதாக இருந்தால் அவர்களிடம் இல்லாமல் வெளியே இன்சூரன்ஸ் வாங்கிக்கொடுக்க நான் உதவுகிறேன் என்று நண்பர் சொல்லி இருக்கிறார்.

அன்பருக்குக் குழப்பம் தீரவில்லை. மோட்டர் வாகனச் சட்டம் என்ன சொல்கிறது என்று தேடிப்படித்தார். சட்டத்தில் வாடிக்கையாளரை எங்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது, அது வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.

சரி என்று சம்பந்தப்பட்ட கார் விற்பனையகத்தின் CRM தொடர்புகொண்டு கேட்டதற்கு, நீங்கள் எங்களிடம்தான் கார் வாங்குகிறீர்கள் எனவே எங்களிடம்தான் இன்சூரன்ஸ் போடவேண்டும் என்று பதில் வந்திருக்கிறது. ஆனால், மோட்டர் வாகனச் சட்டத்தில் நீங்கள் இப்படி ஒரு வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறதே? அதன்படி நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்த முடியாதே என்று இவர் திருப்பிக்கேட்க , மறுமுனை சைலண்ட் ஆகி, இருங்கள் தகுந்த நபரைப் பேசச் சொல்கிறேன் என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

வழக்கம்போல கார்பொரேட் விதிமுறைப்படி அன்பரின் புகார் கிடப்பில் போடப்பட, அன்பர் எல்லாவற்றையும் பதிவுசெய்ய முடிவெடுத்து மெயில் அனுப்பத் துவங்கினார். அதற்குள்ளாக கார் டெலிவரி நேரமும் நெருங்க ஆரம்பித்து , வண்டி எப்ப டெலிவரி எடுக்கப் போறீங்க என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 20000 அதிகம் கட்ட மனதில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை யோசித்திருக்கிறார் அன்பர்.

டெல்லியிலுள்ள கார் கம்பெனியின் கஸ்டமர் கேர் எண்ணிற்குத் தொடர்புகொண்டு இதைப் பற்றிக் கேட்க, அவர்களோ நாங்கள் நிச்சயம் கஸ்டமரை எங்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கமாட்டோம், இது தவறு என்று பதிலளித்திருக்கிறார்கள். கூடவே அன்பர் அளிக்கும் புகார் சரிதானா என்று விசாரிக்க அவரிடம் இன்சூரன்ஸ் எங்களிடம்தான் போடவேண்டும் என்று வலியுறுத்திய சேல்ஸ் மேனேஜரையும் கான்பிரன்ஸ் காலில் அழைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.

நண்பர் உடனே சேல்ஸ் மேனேஜரை கான்பிரன்ஸ் கால் போட்டு அந்த சேல்ஸ்மேனேஜரிடம் பேசத் துவங்கினார். டெல்லி அலுவலகம் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் முதலிலிருந்து கதையை ஆரம்பிக்க. அவரோ கூலாக இதெல்லாம் இந்தக் கார் கம்பெனி பாலிஸி, நீங்கள் எங்களிடம் இன்சூரன்ஸ் எடுத்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும், இல்லைன்னா உங்களுக்குத்தான் பிரச்னை என்று ஏகத்துக்கும் அடித்துவிட, மறுபக்கத்திலிருந்து எத்தினி நாளா கூழ் ஊத்தற? அதென்ன கம்பெனி பாலிஸி அது எங்கே? நம் கம்பெனியின் எந்த டாக்குமெண்டில் இருக்கிறது? என்று டெல்லி கம்பெனி கஸ்டமர் கேர் இடைமறித்துக் கேட்க பிரச்னையின் தீவிரம் சேல்ஸ் மேனேஜருக்கு உரைத்திருக்கிறது. இந்த டிவிஸ்டை அவர் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான அப்பாவி ஆமாம் சாமி கஸ்டமர்களைப் போல நினைத்து அள்ளிவிட்டது தவறு என்று மாட்டிக்கொண்டார்.

அந்தர் பல்டி அடித்து வாடிக்கையாளரே எங்கள் உயிர் மூச்சு அதை இன்சூரன்ஸ் மேல் விடமாட்டோம் என்று சமாளித்து வெளியே அன்பர் விருப்பப்பட்ட இடத்தில் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள உதவுகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். அதன்படி இன்சூரன்ஸை வெளியே எடுத்து ரூ.20000 சேமித்திருக்கிறார் அன்பர்.

இதைப் பற்றி தனது உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் பேசியபொழுது ஒருவருக்கும் இதுபோன்று இன்சூரன்ஸ் வெளியே நாமே விசாரித்து எடுக்கலாம் என்பது தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்திருக்கிறது. இந்த ப்ராடுத்தனத்தைப் பற்றி முழுவதுமாக ஆராய்ச்சி செய்யத் துவங்கினார்.

அனைத்து ப்ராண்ட் கார்களிலும், இன்சூரன்ஸ் என்பது கார் விற்பனை விலையுடன் வரும் பாக்கேஜாகவே பலரும் நம்பிக்கொண்டுள்ளனர் என்பதும் அவருக்குத் தெரிந்து அதிர்ச்சியாகிறார்.

இந்தியாவில் 2017 ல் சுமார் 32 லட்சம் கார்கள் விற்பனையாகி இருக்கிறது. ஆவரேஜாக 10000 ரூபாய் அதிகம் வைத்து ஒவ்வொரு காருக்கும் இன்சூரன்ஸ் விற்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்கள் அறியாமைக்குத் தந்த விலை சுமார் 320 கோடி ரூபாய்கள்.

அதாவது மாதம் 26 கோடி ரூபாய்கள். கார் விற்பனைக்கு மட்டுமே இந்தக் கணக்கு. லாரி, பஸ், விவசாய வாகனங்கள், டூவீலர்கள் போன்றவைகளையும் கணக்கெடுத்தால் மாதம் லவுட்டிய தொகை எவ்வளவு வருமென்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தால் குமாரசாமிகளுக்கே நெஞ்சுவலிக்கும்.


FORWARD MESSAGE
என்றும் தேசப்பணியில்,

எம்.சரவணக்குமார்@எஸ்.கே
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து-(ABGP)
(ALL INDIA CONSUMER PROTECTION MOVEMENT)
REGD NO.S-9194/1974 DELHI
மதுரை👈🇮🇳🚀🌍

Best regards,

மழையால்பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது #பிரச்சினைகளை கூற:- உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (#தாசில்தார் ) செல் எண்கள்

மழையால்பாதிக்கப்பட்ட 
மக்கள் தங்களது #பிரச்சினைகளை கூற:-
உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (#தாசில்தார் ) செல் எண்கள் :-
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம்
Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம்
Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691...

Best regards,

Sunday 25 October 2020

பதினாறு வகையான அர்த்தங்கள்.

பதினாறு வகையான அர்த்தங்கள்.

முகநூலில் படித்த செய்தியை அப்படியே நகல் எடுத்து பகிர்கின்றேன்)

1] எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]

3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும். 

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம்  என்று முழுமையாகப் புரியும். {இப்போது புரிந்து கொண்டிருக்கின்றேன்}.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7]சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...? 
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9]ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம். 

10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11]அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13]எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு  
நம்பிக்கையையே ஆகும்.

15]அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. 
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

👆🏻பிடித்ததால் பகிர்கின்றேன்👆🙏

நீங்களும் பகிருங்களேன்.

Best regards,

நுகர்ச்சி

நுகர்ச்சி

உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்? 

மக்கள் தொகைப் பெருக்கம்? 

இல்லை.

over-population அன்று, 

இன்று over-consumption தான் என்கிறார்கள். 

அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 

ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 

இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.

 population is not exactly the issue. consumption is! 

அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.

 அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. 

சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 

இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 
வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?

 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 
ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.

 'பூஜா kit' விலை 180 ரூபாய்! 

உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்
180 ரூபாய்!

தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்! 

ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் யுக்தி!

 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித 'fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். 

சமீபத்திய உதாரணம் vegetable wash! 

250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 
இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 

பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 

எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.

 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 

எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 

'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!

இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது.

அதாவது நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான். 

நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு option lifebuoy சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 

எல்லா சோப்புகளும் more or less ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 

64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு! 

'selection time rule' என்ன சொல்கிறது தெரியுமா? 

இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 

நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!

நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.

இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 

அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 
முழுக்க முழுக்க automated process சில் வந்திருக்கலாம். 
எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 

அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. 
அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, 
அந்தத் தயாரிப்பு எத்தனை carbon footprint ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. 

மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் socio, economic, political forcesகள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.

'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது.

 எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள். 

home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு, 
ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், shit sells!!

ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம் என்று தோன்றுகிறது. 

தினமும் 3 GB டேட்டா இலவசம். 
வேறு என்ன செய்ய? 
வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 
இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். 
எதையும் புதிதாகக் கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 

'Stop making stupid people famous' என்று சொல்வார்கள். 

அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 

மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers! 

வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 

data என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே over consumption தான்.

 Buffet- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 

விளைவு: வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 

இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!

மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.

 'நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு' என்பதெல்லாம் சரி தான்.

 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?

 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.

 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான். 

'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.

 'expression பத்தலை' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்.

 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 

50+...அந்தந்த வயதில் அது அது இனிக்கும். 

ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 

20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 

ஆனால் ஒரு curiosity க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. 

அது வெறும் over consumption ஆகவே இருக்கும்.

சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்தால் நான் காதைப் பொத்திக் கொள்வேன்.

பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?

 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?

நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 

நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 

அளவுக்கு மிஞ்சினால்.????


Best regards,

Wednesday 21 October 2020

*வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2020 அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2020**

**வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2020
அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2020** 

மற்றும் 

மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்க வாய்ப்பு


 இணைய வழியில்  ஆண்ட்ராய்டு செயலி மூலம் 


 அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு 


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை,மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கொரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணாவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது.இத்தேர்வு இந்தியா முழுவதும்   29-11-2020 (ஞாயிறு) மற்றும் 30-11-2020 (திங்கள்) ஆகிய இரு நாட்கள்   இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது.

 
இவ்வருடம் இந்த  திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.

 தேர்வின் முக்கியமான நோக்கங்கள் :

  * அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணாக்கர்களின் பங்கேற்பை அதிகரித்தல்.அறிவியல் துறையில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு பற்றி அறிதல்.

  *மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம்            ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம்.


தேர்வுக் கட்டணம்              :     100 ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி தேதி  :     31-10-2020

தேர்வு நடைபெறும் நாள்         : 29-11-2020 (ஞாயிறு)  அல்லது 30-11-2020 (திங்கள்)

தேர்வு நேரம்: 90 நிமிடங்கள்(1.30 மணி நேரம்)

நேரம்: காலை 10. 00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.

( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)

 யாரெல்லாம் தேர்வு எழுதலாம்? 

Ø  6ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.

Ø  6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.

 தேர்விற்கான பாடத்திட்டம்: 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீத கேள்விகளும், வியான்கடேஸ் பாபுஜி கெட்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் நேரத்தை அளவிடுவதில் அவரின் அறிவியல் சாதனைகள் என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 

 எவ்வாறு பதிவு செய்வது? 

www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

 பள்ளி வழியாக: 

பள்ளி மூலமாக விண்ணப்பிக்க இயலும். மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.

 தனித்தேர்வர்களாக :

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்: 

 

பள்ளி அளவில்:

பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில்:

மாவட்ட அளவில் (6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Ø  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.


மாநில அளவில்:

மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.

Ø  இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.

Ø  120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு   ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.

தேசிய அளவில்:

Ø  ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.

Ø  தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.

Ø  தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000ரொக்கப்பரிசு வழங்கபபடும்.

Ø  மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

Ø  அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.

இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.மேலும் இந்த வருடம் பதிவு செய்யும் மாணாக்கர்கள் அனைவரும் இந்திய அளவிலான மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு.. 
 ஜெயபால்.R,
தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்.

JEYAPAL R
SOUTH DISTRICT CO ORDINATOR
VIDYARTHI VIGYAN MANTHAN.

Contact;

8248497740
9487001828


Best regards,

Sunday 11 October 2020

உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு - 2021.

*உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு - 2021. 
 தஞ்சாவூர். 

அறிவிப்பும்-அழைப்பும்....

26.02.2021-வெள்ளி,
27.02.2021 சனி.
28.02.2021.ஞாயிறு  
ஆகிய மூன்று நாட்களும்  சோழமண்டலத் தலைநகரம் தஞ்சாவூரில்
கோலாகலமாக
நடைபெற உள்ளது.

முதலாவது உலகத் திருக்குறள் மாநாட்டை
மலேசியா, கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 2019 - பிப்ரவரி 22,23,24 -இல் நடத்தினோம்.

இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை
இலங்கை, யாழ்ப்பாணம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2020 பிப்ரவரி 21,22,23 -இல் நடத்தினோம்.

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை
2021. பிப்ரவரி 26, 27,28 -இல் தஞ்சாவூரில் 
மூன்று நாட்களும் வெவ்வேறு தகுதி வாய்ந்த அரங்கத்தில் நடத்த இருக்கிறோம்.

சாதி, மதம், அரசியல் தவிர்த்து கல்வி சார்ந்த மாநாடாக 
உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு தஞ்சாவூரில் வெகுசிறப்பாக, நடத்த முயற்சி எடுத்துவருகிறோம்.

ஏற்பாட்டாளர்களாகிய எங்களுக்கோ,
தனிப்பட்ட தமிழ்ச்சங்க அமைப்பிற்கோ இந்த திருக்குறள்  மாநாடு உரிமையானதல்ல.
முயற்சி எங்களுடையது.
அதை வெற்றி பெற வைப்பது 
உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் , கடமையும் உரிமையும் ஆகும்.

தமிழ்நாடு அரசு சார்ந்த கல்வி நிறுவனம்,
பல்கலைக்கழகம், கல்லூரிகளுடன் இணைந்து 
உலகத் தமிழர்களின் ஆதரவுடன்.
இந்த மாநாடு நடைபெற உள்ளது.

அயல்நாட்டிலிருந்து வருகை தரும் அறிஞர்களுக்கும்
தமிழ்ச் சங்க அமைப்பினருக்கும்,
திருக்குறள் நெறி பரப்புவோருக்கும்,
தங்கும் விடுதி, 
தஞ்சாவூர் தலைவாழை உணவு
மூன்று நாட்களும் சிறப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

திருவள்ளுவர் சிலை அன்பளிப்பு:-

3 -அடி உயரத்தில் 750 - கிலோ எடையுள்ள திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரி 
ஸ்ரீ கிருஷ்ணா சிற்பக் கூடத்தில் வடிவமைத்து,
கன்னியாகுமரி முதல் சென்னை வரை 
10 -நாட்கள் அலங்கார ஊர்தியில் ஊர்வலமாக எடுத்து வந்து மாநாட்டில் நிறுவிய பின்னர் தஞ்சாவூரைச் சேர்ந்த
தகுதி வாய்ந்த கல்வி நிறுவனம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 
மாவட்ட நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகம்,
தமிழ்ச் சங்க அமைப்பு இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக வழங்க இருக்கிறோம்.

மற்றொரு சிலையை
ஆஸ்திரேலியா நாட்டில்
மெல்பர்ன் மாநகரில்
இணையவழியாகத் திறந்துவைத்து மாநாடு தொடக்கவிழாவை நடத்த இருக்கிறோம்.

மாநாட்டு சிறப்பு மலர் :-

திருக்குறளின் சிறப்புகள், அரிய தகவல்கள்.
திருக்குறள்நெறி பரப்புவோரின் அரிய பணிகளைத் தொகுத்து மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடுகிறோம்.
மாநாட்டு சிறப்பு மலருக்கு படைப்புகளை அனுப்ப எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வாழ்த்துச் செய்திகள் வழங்கலாம்.
வணிக விளம்பரங்கள் தரலாம்.

ஆய்வுத் தொகுதி:
(பேராளர்கள்)

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் எழுதும் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை புத்தகமாகத் தொகுத்து ISBN பதிவு எண்ணுடன் வெளியிட இருக்கிறோம்.

திருக்குறள் தொடர்பான உங்கள் ஆய்வினை கட்டுரை வடிவில்
6 - பக்க அளவில் MS Word - இல் 
Unicode - Fond -இல் தட்டச்சு செய்து
kuralmanadu21tnj@gmail.com
மற்றும்
thamilthaitrust@gmail.com
 ஆகிய இரண்டு மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.
மேலும், ஆய்வுக்கட்டுரை அச்சிட்ட பிரதி ஒன்றை உங்கள் புகைப்படம், வசிப்பிட முகவரி, பணிபுரியும் இடத்தின் முகவரியுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வையுங்கள்.

" தமிழ்த்தாய் அறக்கட்டளை,
மாரியம்மன் கோயில்,
தஞ்சாவூர். 613501.

இந்தியப் பேராளர்களுக்கான கட்டண விபரம்.
பேராசிரியர்கள். தமிழ் அறிஞர்கள் , ஆய்வு மாணவர்களுக்கு
ரூ.1,000
பேராளர்
கட்டணத்தை
இந்தியன் வங்கி
மாரியமன்கோயில் கிளை,
IFSC -
IDIB 000 M 134
கணக்கு எண் :-
979223876
THAMIL THAI TRUST
(தமிழ்த்தாய் அறக்கட்டளை) 
என்ற பெயரில் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தி
அதன் நகலை இணைத்து 
ஆய்வுக் கட்டுரையுடன்  அனுப்பி வையுங்கள்.
D/D வரைவோலை,
காசோலை (செக்) அனுப்ப வேண்டாம்.
பேராளர் கட்டணத்தை நேரடியாகவும்,
அஞ்சல் (M.0) வழியாகவும் செலுத்தலாம்.

ஆய்வுக் கட்டுரைகளை தற்பொழுதிலிருந்து 31.01.2021 -க்குள் *அனுப்பலாம்.
கடைசி தேதி வரை காத்திருக்காதீர்கள்.

அயல்நாட்டுப் பேராளர் கட்டண விபரம்.

மாநாட்டில் நேரடியாகக் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் 
இந்தியப் பணம் 
ரூ.1,500.
கலந்து கொள்ளாதவர்களுக்கு
 (இந்தியப் பணமதிப்பில்) ரூ.2000

10 -க்கும் மேலான ஆய்வுக்கட்டுரைப் பேராளர்களை அறிமுகப்படுத்தி எழுதத் தூண்டுபவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், பரிசு, விருது வழங்கப்படும்.
பதிப்பாசிரியர் குழுவில் பெயர் சேர்க்கப்படும்.

அமர்வுத் தலைமை வகிப்பவர்களுக்குத் தனியாக சான்று வழங்கப்படும்.

மாநாட்டின் இரண்டாம் நாள் ஆய்வரங்க அமர்வுகள் நடைபெறும்.
அயல்நாட்டுப் பேராளர்கள் மட்டும் முன் அனுமதி பெற்று இணையவழி அமர்வரங்கத்தில் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கலாம்.

நூல் வெளியீடு:

நீங்கள் எழுதியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்
உள்ளிட்ட புத்தகங்களையும்,
ஒலி & ஒளிப்படக் குறுந்தகடு போன்றவற்றையும்
மாநாட்டு மேடையில் தனி அமர்வில் வெளியிடலாம்.
இதற்காக  கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
31.01.2021-க்குள் 
உங்கள் வெளியீடு பற்றிய விபரத்தை எங்களுக்குத் தெரிவித்து உங்கள் நிகழ்ச்சியை மாநாட்டு அழைப்பிதழில் இடம் பெறச் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சிறப்பு விருது.

தமிழ்மொழி வளர்ச்சிக்கும்,
திருக்குறள் நெறி பரப்பும் பணியிலும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ள
சாதனையாளர்களுக்கு
சிறப்பு விருது வழங்கப்படும்.
விருது பெறத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள், உரிய தகவல்களுடன் விண்ணப்பத்தை 
இந்த நாள் முதல் 31.01.2021-க்குள்  அனுப்புங்கள்.

விருது பெறுவதற்காக அயல்நாட்டில் இருந்து வருகை தர இயலாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் விருதைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாநாட்டு நன்கொடை,

உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாட்டுப் பணிகளுக்கும்,
திருவள்ளுவர் சிலை தயாரிப்புப் பணிக்கும்
 நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம்.
உரிய பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
மாநாட்டு நிகழ்வில் சிறப்பிக்கப்படுவீர்கள்.
நன்கொடை அளித்தவர்களின் பெயர்ப் பட்டியல் மாநாட்டு மலரில் இடம்பெறும்.

இந்திய உள்ளிட்ட அயல்நாட்டு ஒருங்கிணைப்புப் பணி :-

மாநாட்டுப் பணிகளை அவரவர் பகுதிகளில் விளம்பரம் செய்யவும், பேராளர்களைத் தொடர்பு கொண்டு
ஊக்கப்படுத்தி அவர்களை ஈடுபாடு செய்வதற்காகவும்,
மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்க பயணக்குழு அமைக்கவும்,
தகுதியானவர்களிடம் வாழ்த்துச் செய்தி பெற்றுத் தருவதற்காகவும்,
மாநாட்டு சிறப்பு மலர் தயாரிப்பு உள்ளிட்ட
இன்ன பிற மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும்,
தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும்,
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, பிரான்சு, அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, கனடா, மொரீசியசு, தைவான் குவைத், துபாய், டென்மார்க், நோர்வே, ரஷ்யா,
உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைப்புப் பணியை மேற் கொள்ளுமாறு
தன்னார்வத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பணிகளில் ஈடுபட விருப்பம் உடையவர்கள் 
கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு வேண்டுகோள்.

இந்தப் பதிவை உங்களின் வாட்ஸ்அப் புலனத்திலும், முகநூல் உள்ளிட்ட இணையத் தொடர்புகளில் பகிருங்கள்.
இந்த அறிவிப்பை உங்களால் இயன்றவரை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேருங்கள்.
மாநாட்டின் வெற்றிக்கு இதன் மூலம் உங்களின் பங்களிப்பைத் தாருங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

உடையார்கோயில் குணா,
 ( தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அரசு விருது பெற்றவர்)

தமிழ்த்தாய் அறக்கட்டளை,
மாரியம்மன் கோயில்,
தஞ்சாவூர். - 613501
தமிழ்நாடு, இந்தியா.

(வாட்ஸ்அப் எண்)
+91-7530002454.

+91 - 9443938797.
thamilthaitrust@gmail.com
kuralmanadu21tnj@gmail.com.

மாநாட்டுக் குழு. -
கடந்த காலங்களில் எமது அனைத்து பணிகளுக்கும் துணை நின்று வெற்றிதேடித் தந்த பெருந்தகையாளர்கள்
உலகளாவிய நிலையில் பலரும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கலந்தாலோசித்து மாநாட்டுக்குழு ஒருங்கிணைக்கப்படும்.

மாநாட்டு அறிக்கை விரைவில் அச்சிட்டு வெளியிட இருக்கிறோம்.

உங்கள் ஆய்வுக்கட்டுரையை இப்போதே அனுப்புங்கள்.....
கட்டுரைகள் எங்களுக்கு வந்துசேர்ந்த உடன்
அச்சிற்கு அனுப்பும் பணியையும் உடனுக்குடன் மேற்கொள்கிறோம்.
ஆகையால், 
கடைசி தேதி வரை காத்திருக்காதீர்கள்.

🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🏻

Best regards,

Saturday 10 October 2020

உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது?

உணவை தான் உண்டேன்
எப்படி. மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன்
எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?

இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசியது. எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !

நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது.
இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.

காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?

கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து ,
" மகனே ! நானிருக்கிறேன் .என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.

அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்வை
உடம்பை ஓம்பற்க
நினைமின் மனனே
நினைமின் மனனே
சிவப்பெருமானை
செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே
                          - பட்டினத்தடிகள்Best regards,

Friday 9 October 2020

முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க!!!

முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவை!!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

ரேஷன் கார்டு photo  15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது!
ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருக்கோம் னு காட்டுது!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, தமிழச்சி எங்களை அடிச்சிக்க முடியாது!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி 
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும்!
ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்!!
 😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

நாம் அழுதால் நமக்கே பிடிக்காது! 
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க!
ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!! பொண்டாட்டிங்க திட்டியே கொல்லும்!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்" 
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி  இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!! 
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா, பிரச்சனை  Flight ஏறி வருது😒😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்! 
இல்ல, முடி விழும்!! அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

காந்தி நாட்டுக்காக பாடு பட்டார்! 
நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க! ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான் select ஆகுறாங்க!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல! நமக்கு புடிச்சா நல்லவங்க!! புடிக்கலனா கெட்டவங்க!!!😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும்😁  புரிதா😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

Best regards,

Thursday 8 October 2020

FMB

FMB

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
**************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*******
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

Thank you 

🙏🙏🙏

Best regards,

மகாத்மாகாந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.

மகாத்மாகாந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.

எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். 

காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.

அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலரினார்கள்.

ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது,
 அவனை மிகவே
யோசிக்க வைத்தது.

அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.

ஆனால், காந்தியை அவ்வப்போது 
உற்றுப் பார்த்தான்.

இலேசாகப் புன்முறுவல் காட்டினான். ஒரு நாள் "மிஸ்ட்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து,
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்?

ஏதாவது புத்தகம் கொடுங்கள்  என்றார் காந்தி. 
இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது. 

ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.

மகழ்ச்சி  எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.

இன்று உங்களுக்கு
விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.

ஆனால், உங்களைப் பிரிய
என்னால் முடியவில்லை.

இது வருத்தமான செய்தி என்றான்
ஸ்மட்.

காந்தி சொன்னார்,
"நானும் உங்களுக்கு
ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி,
தான் சிறையில் தைத்த பூட்சை  அவரிடம்  கொடுத்தார். 
ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட் கேட்டான், 
"இவ்வளவு
துல்லிமாகத் தைக்க, அளவு எப்படிக் கிடைத்து" என்று கேட்க,
சிரித்தபடி காந்தி
தனது மார்புத் துண்டை அகற்றினார்; ஆரம்பத்தில்
ஸ்மட் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.


"இந்த வடுக்களை
அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.

"தடால்" என்று சத்தம்;
ஸ்மட் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக்
கதறினான்.

"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!
என்னை மன்னித்து விடுங்கள்.
இனி யாரையும்
அடிக்க மாட்டேன்" என்றார். 

ஒரு நிமிடத்தில்,
ஒரு கொடிய மிருகம்,
மென்மையான
மனிதனாக மாறியது. "கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று  இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

ஸ்மட் சத்தியம் செய்தான்.
"இந்த பூட்ஸ்தான்
இனி எனக்குக் கடவுள்;
இதை மட்டுமே வணங்குவேன்" 
என்று அப்படியே 
வணங்கினான்.

"நாம் நினைத்தால், யாரையும்
மன்னிக்கவும் முடியும்;
மாற்றவும் முடியும்".

வாழ்க! மகாத்மா காந்தி!!

Best regards,

Wednesday 7 October 2020

5 நிமிடம் ஒதுக்கி 📖📖📖படியுங்கள் ஒவ்வொரு பெற்றோர்களும் ....

இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-📖📖📖📖📖

1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services5 நிமிடம்    ஒதுக்கி 📖📖📖படியுங்கள் ஒவ்வொரு பெற்றோர்களும் .... 
21. IIOFS  -   Indian Ordinance Factory Service
22. IDSE  -  Indian defence engineering services
23.  IES  - Indian Economics Services
24. ISS  - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service 
26. IREES -  indian railway elec engg service

இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.📖📖📖
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...📖📖📖🎓🎓🎓
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.✍️✍️✍️

இந்த பதவிகளில் எல்லாம் வடநாட்டு காரர்களும், கேரளா காரர்களும் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.🎓🎓🎓
 நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. ***   ✍️✍️✍️

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
📖📖📖📖📖
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான்.🎓 எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
📚📖✍️
இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள்.📚📖📖📖
உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.📖📖📖
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
🚴📖📖📖📚✍️

இளைஞர்களுக்கும்... மகளிர்களுக்கும்... மாணவர்களுக்கும் ....... வாழ்க்கைத்தரம்.... உயர... குறிப்பாக கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு வழிகாட்டியாக நாம் இருப்போம்.

Best regards,

Monday 5 October 2020

பொறாமை குணம்

''பொறாமை குணம்...!
......................................

பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் அதிகமாக இருக்கும்...

பொய்யினைப் போலவே ''பொறாமை''யும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டு உள்ளது...

பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்...

வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள்...

இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்...

இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ!, அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அவர் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் உற்று நோக்குவர்...

தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் மகிழ்ச்சியை விட அவர்களுக்கு துன்பம் நேரும்பொழுது மகிழ்ச்சி கொள்வர்கள். பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள், இன்னும் கூடவே இருப்பவர்கள்தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள்...

பள்ளிகளில், கல்லூரிகளில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்...

பொதுவாக நண்பர்களுக்குள் இந்த பொறாமை ஏற்பட்டால், பெரும் தீங்கை விளைவிக்கிறது. நட்பில் விரிசலை உண்டாக்குகிறது...

நண்பர்கள் போல் இருந்து கொண்டே பொறாமை கொள்ளும் மனிதர்கள், நட்பு கொண்ட மனிதர்களிடம் உறவாடி அவர்களின் குடியைக் கெடுக்கிறார்கள்...

இந்த மாதிரியான ‘முகமூடி’ நண்பர்களிடம் பழகுபவர்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களை, தங்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும்...

கடுமையான எதிரியை நம்பலாம். இப்படிப்பட்டவர்களை எந்த காலத்திலும் நம்புதல் கூடாது. தான் வளர்வது பற்றிக்கூட அதிகம் சிந்திக்காமல் அடுத்தவர் வளர்ச்சி பற்றியே அதிகம் சிலர் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்...

அடுத்தவர் சிறப்பாக இருப்பதைப் பொறுக்க முடியாத இழிவான குணம் இது....

ஒரு சிலர் தன் வளர்ச்சி, தன் குடும்ப வளர்ச்சி என்று சிந்தித்தாலும் முன்னேற, வளம் பெற, நலம் பெற, வளர்ச்சி பெற வாய்ப்பும் கிட்டும், வழியும் பிறக்கும்...

அதைவிட்டு, அடுத்தவர் வாழ்கிறாரே என்று வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பயன்...?

ஒருவரின் பொறாமை குணம் என்றும் முன்னேற்றத்தை முழுவீச்சில் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடும்...

இந்தக் குணம் இருந்தால் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு துன்பம்தான் அதன் பரிசாகக் கிடைக்கும்...

அதேபோல அடுத்தவரின் வளர்ச்சியைப் பார்த்து அதனால் அவருக்கு அவப் பெயரைச் செய்வதும் மிகவும் தவறான செயல்...

இதன்மூலம் எதிரியை கீழ்மைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே களங்கப்படுத்திக் கொள்வார்கள்...

ஆம் நண்பர்களே...!

எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாவதுடன், பொறாமை என்னும் தீய குணத்தால் பல நல்ல நண்பர்களை இழக்க வேண்டி வரும்...!

பொறாமை குணம் உள்ளவர்கள் வாழ்வில் எதையும் வெற்றிகொள்ள முடியாது...!!

பொறாமை என்பது மிகவும் தீங்கை விழைவிக்கின்ற ஒரு எதிர்மறை எண்ணம். அதை விலக்கி வாழ்ந்தா நல்லதே நடக்கும்...!!!

-உடுமலை சு. தண்டபாணி✒️


Best regards,

உணவு ஒரு உணர்வு

உணவு ஒரு உணர்வு

உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். 

சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். 

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். 

உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. 

கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். 

அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். 

கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். 

இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார்.

 உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும். 

சமைக்கும் பொழுது கணவரை குழந்தைகளை நினைத்து வாழ்த்தி, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து சமைத்தல் வேண்டும். 

அதுமட்டுமன்றி தெய்வீகமான பாடல்களை கேட்டுக்கொண்டே சமைக்கும் பொழுது அதனுடைய அதிர்வுகள் சமைக்கும் உணவில் உள்ள தண்ணீரினால் உள் வாங்கப்படுகிறது. 

இறைவனை நினைத்துக் கொண்டே சமைக்கும் பொழுது, நம்முடைய குடும்பத்தினருக்கு, குழந்தைகளுக்கு இறை உணர்வு உணவின் வழியாக கொடுக்கப்படுகிறது. 

அசுத்தமான சூழ்நிலையில் நாம் சுவாசிக்கும் பொழுது , அசுத்தமான தண்ணீர் குடிக்கும் பொழுது ,அசுத்தமான உணவை உண்ணும் பொழுது நம் உடல்நிலை பாதிக்கப்படுகிறது 

அதுபோல் நாம் கோபத்துடன் சமைப்பது, வேண்டாவெறுப்புடன் சமைப்பது, டிவியில் வரும் வன்முறை காட்சிகள், அழுகை காட்சிகள் போன்றவற்றை கேட்டுக்கொண்டு சமைப்பது போன்றவை நம் குடும்பத்தினருக்கு, தேவையில்லாத உணர்வுகளை கொடுக்கிறது. 

நம் குடும்பத்தில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள், முரட்டுத்தனமாக நடக்கும் குழந்தைகள், கோபப்படும் கணவர், மாமியார் போன்றவர்கள் நாம் அன்புடன் வாழ்த்தி சமைக்கும் உணவினால், தெய்வீக பாடல்களை கேட்டுக்கொண்டே சமைக்கும் உணவை உண்பதினால், அவர்களுடைய எண்ணங்களில் செயல்களில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். 

எனவே அவசர அவசரமாக பரிமாறாமல், டிவி பார்த்துக்கொண்டே பரிமாறாமல், குழந்தைகளும் கணவரும் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடாமல், அனைவரும் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமான உடல்நிலை மட்டுமல்ல மனநிலை மற்றும் நற்பண்புகள், நற்குணங்கள், தெளிவாக பேசும் தன்மை, தெளிவாக முடிவு எடுக்கும் தன்மை, போன்ற மாற்றங்கள் குடும்பத்தினரிடம் ஏற்படுவதை உணரலாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Best regards,

Sunday 4 October 2020

தலைமுறை இடைவெளி(வேலி) 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

படித்ததில் பிடித்தது...
********
தலைமுறை இடைவெளி(வேலி)
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் 

சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,😥

டேய் உனக்காவது இது கிடைத்தது ,
நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு
 வசதியில்லை என்று சொன்ன 

என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!😉😉

 இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது 

150ரூபாய் மதிப்புள்ள   examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி 
இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,, 

 என் மகளிடம் பொருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன்,, 

 ink பாட்டில்  வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,

, சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம்  இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

 bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; 

என்று  என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

 நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!

 நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா)  சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்

 இன்று  அப்பா filter water கேன் வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (2 std படிக்கிறாள்) பார்க்கிறேன் 🤔

, இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு  கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டு விட்டு 

தாகம் எடுத்தால்  ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி

( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு  தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)  

அக்கா குடிக்க கொஞ்சம் தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்

  நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) ; 

 இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?

 என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் ,

 ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!! 

 இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான்  ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

 இன்று
ஒரு லிட்டர்  gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி  கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்) 

  boost is secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;

 இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது; 

நான்  சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔

 வாழ்கையில்  பட்டது...

Best regards,

கொரோனா பற்றி ஒரு மும்பையை சேர்ந்த மருத்துவரின் குறிப்பு

கொரோனா பற்றி ஒரு மும்பையை சேர்ந்த மருத்துவரின் குறிப்பு

அனைவருக்கும் முக்கியமான தகவல்

நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது.  ஆனால், கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசல் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைந்து கொள்கிறது.  நாம் குடிக்கும் இந்த சூடான நீர் அங்கு எட்டாது.  4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு மூக்கின் பரணசல் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது.  நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுத்தும்.
அதனால்தான் நீராவி எடுப்பது மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது.  இந்த வைரஸை மூக்கில் நீராவியால் கொல்ல வேண்டும்.
40 ° C இல், இந்த வைரஸ் முடங்கிப்போகிறது.  60 ° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி விடுகிறது, எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும்.  70 ° C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது.

இதைத்தான் நீராவி செய்கிறது, இது நமது முழு சுகாதாரத் துறையினருக்கும் தெரியும்.  ஆனால் எல்லோரும் இந்த கொரோனாவைப் பயன்படுத்தி, தங்கள் தனிப்பட்ட பொருளாதார அமைப்பை மேம்படுத்த விரும்புகிறார்கள். அதனால் இதுபற்றி விளம்பரப்படுத்த விரும்பவில்லை.  சீனா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் நீராவி முறை பயன்படுத்தப்படுகிறது.

வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி எடுக்க வேண்டும்.  காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால் இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.  சிலரைச் சந்திக்கும் அல்லது அலுவலகத்திற்குச் செல்லும் எவரும் 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.  மேலும் COVID நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் பிறகு நீராவி எடுக்க வேண்டும்.  இதை நான் செய்கிறேன், எனது ஊழியர்கள் இதைச் செய்கிறார்கள், இதுவரை ஒருவர் கூட நேர் மறையானவர்களாக (Positive) கண்டறியப்படவில்லை.  எனது வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் (ஸ்டீமர்) நீராவி பிடிக்கும் இயந்திரமங்களை வைத்துள்ளேன்

நான் 600 க்கும் மேற்பட்ட ஸ்டீமர்களை எல்லா இடங்களிலும் விநியோகித்தேன். சியோன் மருத்துவமனை, சதாப்தி மருத்துவமனை, சாண்டா குரூஸ் காவல் நிலையம் போன்றவை, அங்கு ஏராளமான பாஸிட்டிவ் நபர்கள் வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் நீராவி சிகிச்சையளிப்பதன் மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளனர், அங்குள்ள ஊழியர்கள் நேர்மறையாக மாறவில்லை.

சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் நேர்மறையாகக் காணப்பட்ட 11 பேர்களுக்கு நீராவி கொடுத்து சரிசெய்தோம். இதிலிருந்து அவர்களுக்கு நிறைய நிவாரணம் கிடைத்துள்ளது.

நானே ஒரு கோவிட் வார்டைக் கையாளுகிறேன், எப்போதும் 2 மணி நேரத்திற்குப் ஒரு முறை நீராவி பிடிக்கிறேன்.  அப்படித்தான் என்னால் இன்னும் என்னைப் பாதுகாக்க முடிந்தது.

உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

Best regards,

Saturday 3 October 2020

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?....

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்?  அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?....
நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆயுவு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாவன.  
----------------------------------------------------------

இந்தியர்களின்  ஹோபிசியன்   hobbesian -  சுயநலத்தின் கலாச்சாரம்.

இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும்.  ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை.  ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.

ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள். 

இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.

முதல்:  மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும்.  ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை.‌ தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம்  கொடுத்து   வெகுமதியை   கேட்கிறார்கள்.

கோவில் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகில், அத்தகைய பரிவர்த்தனை  "லஞ்சம்" என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பணக்கார இந்தியர் கோயில்களுக்கு பணம் மட்டுமல்ல, தங்க கிரீடங்கள் மற்றும் ரத்தினக் கற்களையும் நன்கொடையாக வழங்குகிறார். அவருடைய பரிசுகள் ஏழைகளுக்கு அல்ல, கடவுளுக்கு தான்.

ஜூன் 2009 இல், கர்நாடக அமைச்சர் ஜி. ஜனார்தன் ரெட்டி திருப்பதிக்கு ரூ .45 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர கிரீடம் வழங்கினார் என்று The Hindu  பத்திரிகை சொல்லுகிறது.

இந்தியாவில் உள்ள கோவில்களில் செல்வம் குவிந்துள்ளது, பில்லியன் கணக்கான ரூபாய் வீணடிக்கப்படுகிறது, அதை என்ன செய்வது என்று தெரியாமல் பெட்டகங்களில் தூசி பட்டு கிடக்கிறது.

சிந்தனைமிக்க, ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது பள்ளிகளைக் கட்டினர்.  * ஆனால் இந்தியர்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்லும்போது, ​​அவர்கள் அங்கு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுகிறார்கள் *.

ஆசீர்வாதம் கொடுக்க கடவுள் கூட பணத்தை ஏற்றுக்கொள்ளும்  போது, அதே போல லஞ்சம்  பெறுவதில் தவறல்ல என்று இந்தியர்கள் நம்புகிறார்கள் .  இதனால்தான் இந்தியர்கள் இவ்வளவு எளிதில் ஊழல் செய்கிறார்கள்.

இந்திய கலாச்சாரம் இத்தகைய பரிவர்த்தனைகளை மேன்மை ஆக தழுவுகிறது

1: மக்கள், முற்றிலும் ஊழல் நிறைந்த அரசியல்வாதியை நிராகரிக்கவில்லை, மாறாக அவரை ஏற்றுக் கொண்டு  அடுத்த ஆட்சியை செய்ய  வைக்கிறார்கள்.  மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற ஒரு விஷயத்தை ஒருவர்  கூட யோசிக்க முடியாது.

2: ஊழலை நோக்கிய இந்திய அறநெறி அதன் வரலாற்றில் தெளிவாகக் காணப்படுகிறது.  நுழைவாயில்களைத் திறக்க காவலர்களுக்கு பணம் செலுத்திய பின்னர் நகரங்களும் தேசங்களும் பிடிக்க பட்டதாகவும் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய வரலாறு கூறுகிறது.  புராணங்களை பார்த்தால் சொல்லவே வேண்டாம்.. 

இது இந்தியாவில் மட்டுமே உள்ள ஒரே அம்சமாகும்.

இந்த வகை ஊழல் இந்திய துணைக் கண்டத்திற்கு தனித்துவமானது.

பழைய  க்ரீக் தேசத்திலும் நவீன ஐரோப்பாவிலும் இருந்ததை விட இந்தியர்கள் மிகக் குறைவாகவே போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் போர் தேவை இல்லை, இராணுவத்தை  அடிபணிய வைக்க லஞ்சம் மட்டுமே போதுமானதாக இருந்தது.( விதிவிலக்கு:தமிழ், பல்லவ மன்னர்கள்)

இந்திய கோட்டைகளை கைப்பற்றிய வரலாற்றில் எப்போதும் நிதி பரிமாற்றம் இருந்தது.

முகலாயர்கள், மராட்டியர்களையும், ராஜபுத்திரர்களையும்  வெற்றி கொள்ள  லஞ்சம்  கொடுத்த வரலாறு உள்ளது.

ஸ்ரீநகர் மன்னர், லஞ்சம் வாங்கியபின், பரோஷிகோவின் மகன் சுலைமானைக் கொல்ல அவுரங்கசீப்பிற்கு விடுவித்தார்.

லஞ்சம் காரணமாக, தேசத் துரோகத்திற்காக இந்தியர்கள் பெரிய அளவில் கைது செய்யப்பட்டதாக பல வழக்குகள்  பழைய காலம் முதலே உள்ளன.

கேள்வி என்னவென்றால்: பிற 'நாகரிக' நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத பரிவர்த்தனை கலாச்சாரம் ஏன் இந்தியர்களுக்கு மட்டும் வந்தது ? 

3: எல்லோரும் தார்மீக ரீதியாக நடந்து கொண்டால், எல்லோரும் உயரலாம் என்ற கோட்பாட்டை இந்தியர்கள் நம்பவில்லை, ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கையைச் சார்ந்தது அல்ல.

அவர்களின் சாதி அமைப்பு அவர்களைப் பிரிக்கிறது. 

எல்லா மனிதர்களும் சமம் என்று அவர்கள் நம்பவில்லை. 

இது அவர்களை பிற மதங்களுக்கு இடம்பெயர வழிவகுத்தது.

எனவே, பல இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்தமத விசுவாசிகள்  ஆனார்கள்.  பலர் கிறிஸ்தவத்திற்கும்  இஸ்லாத்திற்கும் மாறினர்.

உண்மை என்னவென்றால், இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நம்புவதில்லை.

இந்தியாவில் இந்தியர்கள் இல்லை, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்கள் மட்டுமே.

இந்த பிரிவு இந்தியாவில் ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.  சமத்துவமின்மை ஊழல் நிறைந்த சமூகத்திற்கு வழிவகுத்தது.  இந்தியாவில், கடவுளுக்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு விஷயங்கள் வந்தன. 
லஞ்ச குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைத்தால் தான் மக்களுக்கு லஞ்ச லாவண்யம் இல்லாத சமூக கட்டமைப்பில் நம்பிக்கை வரும்.

(உலகின் மிகக் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாகும்.)


Best regards,

Friday 2 October 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... அலோபதி மருத்துவ மரணம்... ஒரு பார்வை...

Forward message..

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... அலோபதி மருத்துவ மரணம்...
ஒரு பார்வை...

2020 ஆகஸ்ட் மாதம், லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவுதான்…

மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போனவரை இவ்வுலகில் இல்லாமல் செய்து விட்டார்கள்...

மருத்துவமனையில் கல்யாணநாள் கொண்டாடினார், இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார்...

2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்துட்டு 
51நாள் கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல கோடி பணம் பெற்றுக் கொண்டு பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்…

யாரும் கேள்வி கேட்க கூடாது…

ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது...

இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்… 

அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது...

யாரையும், ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது...

எந்த ஊடகமும் வாயை திறக்காது... 

ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ செய்திருந்தால் இன்று உலகமே பொங்கி இருக்கும்...

ஒரு மாதத்துக்கு அதுதான் மீடியாவில் டிரண்டிங்காக இருந்திருக்கும்... 

அதுக்கு அப்புறம் அந்த சித்த வைத்தியர் வாழ்க்கை அவ்வளவுதான்... 
சூன்யம்...

ஆனானப்பட்ட அம்மாவையே அமரர் ஆக்கியவங்ககிட்ட பாலு மாத்திரம் எம்மாத்திரம்… 

இவங்க நிலையே இப்படி இருக்கும் போது, சாதாரண ஜனங்கள் மக்களின் நிலை ?

இந்த அலோபதி மருத்துவர்களால் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. 

அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது… 

பண வெறி பிடித்தவர்கள்…

சரி போகட்டும்…
உங்ககிட்ட ஒரு சந்தேகம்…

நம் பாரம்பரிய சித்த வைத்தியரிடம், சித்த வைத்தியம் பார்த்து இதுவரை எத்தனை மரணங்கள் நீங்கள் கண்ணால் பார்த்திருக்கீங்க ?

இல்லையென்றால் உறுதியான ஆதாரத்தோட கேள்வி பட்டிருக்கீங்க ?

அதுபோல் ஆங்கில அலோபதி மருத்துவம் பார்த்து ஒவ்வொரு நாளும் மரணம் இல்லாத உங்கள் ஊர் அரசு/தனியார் பெரிய மருத்துவமனைகளை காண்பிக்க முடியுமா ? 

கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், நேர்மையான ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை கொண்டு சித்த வைத்தியம் பார்த்து இறந்தவர்களை கணக்கு எடுக்க வேண்டும்.

அதே போல் அலோபதி ஆங்கில மருத்துவத்துவம் பார்த்து கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிகழ்ந்த மரணங்களை கணக்கு எடுக்க வேண்டும்...

அப்புறம் தெரியும் ஆங்கில அலோபதி மருத்துவத்தின் கோர முகம்...

* இதுவரை அலோபதி ஆங்கில மருத்துவத்தால் முழுவதும் குணப்படுத்திய அல்லது இனி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஒரு வியாதியைச் சொல்ல முடியுமா ? *

ஒரு சித்த வைத்தியரிடம் வந்து இந்த கஷாயத்தை குடித்தால் பக்க விளைவு வருமா என்று கேட்கும் தைரியமும், ஆம்பளைத்தனமும், எந்த ஆங்கில மருத்துவரிடமும் கேட்க துணிவு வருமா ? 

ஏன் அங்கே கேள்வி கேட்க ஆண்மை வருவதில்லை ?

சும்மா எதுக்கு எடுத்தாலும் அரசை மட்டுமே குறை சொல்ல கூடாது... 

அரசு என்பது நம்மால் நாமே ஆட்சி செய்வது... 

நாம் தேர்ந்து எடுத்தவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள்...

அவர்கள் சரியில்லை என்று சொன்னால், காரணம் நாம் சரியான ஆட்களை தேர்வு செய்யவில்லை என்று அர்த்தம்தானே தவிர அவர்கள் மேல் குறையில்லை...

முதலில் நாம் திருந்துவோம்...

குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 500ரூபாய் பணத்துக்கும், நம் மதிப்பில்லா வாக்கை விற்க்காமல், நல்ல ஆட்களை தேர்ந்து எடுப்போம்...

அடுத்து நம் அனைத்து வியாதிகளுக்கும் சித்த வைத்தியத்தை நாடிச் சென்றால் என்ன கெட்டு விடும் ? 

குறைந்த செலவில் அனைவரும் நலமோடு இருப்போம் தானே...

அலோபதி மருத்துவத்தை விபத்து நேரத்தில் மட்டும் ஊறுகாயைப் போல பயன்படுத்திக் கொண்டு மற்ற அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் சித்த வைத்தியம் பார்க்க ஆரம்பித்தால் நம்மை யார் தடுக்க முடியும் ?

நம் ஆரோக்கியம் நம் கையில்...

நாமே சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்வது மாதிரி நாமே அவர்களிடம் காசையும் கொடுத்து வேதனையையும் வாங்கி ஏன் இறக்கணும் ?
நன்றாக யோசியுங்கள்...

2,000ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சித்த வைத்தியத்தை தான் இனி பார்ப்போம் என்றால், இன்று அலோபதி மருத்துவமனையாக இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் 6வருடத்தில் சித்த மருத்துவமனையாக தானாக மாறி விடும்...

எப்படி என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் செக்குல ஆட்டின எண்ணை கிடைக்காது...

ஆனால் இன்றைக்கு ஊர் ஊருக்கு செக்கு இருக்கு, இயற்கை முறையில் ஆட்டிய எண்ணை கிடைக்குது...

அதேபோல் நாம் சித்த வைத்தியத்தை நாடினால் மட்டுமே, ஊர் முழுக்க உள்ள மல்டி ஷ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், இனி சித்த மருத்துவமனைகளாக மாறி விடும் சூழல் அமையும்...

இல்லை என்றால் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாட்டுக்கு பிணவரவு அதிகமாகிவிடும்...
அவ்வளவுதான்...
முடிவு உங்கள் கைகளில்...

பாடும்  நிலா பாலுவின் மருத்துவ போராட்டம் 
நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடமாக இருக்கட்டும்...

இனி இப்படி ஒரு சாவு 
எவர் வீட்டிலும் நிகழாமல் இருப்பது நம் கையில்...

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்.?

மரபுவழி தமிழ் மருத்துவர்.                                                                                                         சுந்தர்ஜி.

Best regards,

தாம்பத்யம்.

தாம்பத்யம்.

அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"என்னங்க ஆச்சு"னு கேட்டேன்.

"வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார்.

"வாங்க ... எனக்குத் தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்‌ஷனும் போட்டுக்கலாம்!" என்றேன்.

வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்துச் சென்றேன்.

எல்லாம் முடியவும்.... "மணி என்ன தம்பி.... நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே...!" என்று பறந்தார் பெரியவர்.

"அப்படி என்னங்க அவசரம்..?! என்றேன் நான்.

"என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டுப் போகணும்..!" என்றார்.

"என்ன பெரியவரே... உங்க காலுல அடிப்பட்டிருக்கு... இப்ப இட்லியா முக்கியம்...?! லேட்டா போனாத் தான் என்ன... திட்டுவாங்களா...?!" என்று சீண்டினேன்.

அதற்கு அவர் "அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னு கூட அவளுக்குத் தெரியாது...!" என

நான் "அப்படிப்பட்டவங்க உங்களை ஏன் லேட்டுன்னு எப்படிக் கேப்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலைப் படாதீங்க" என்றேன்.

அதற்கு அந்த முதியவர் புன்னகைத்தபடியே என்னைப் பார்த்து சொன்னார் "ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே தம்பி..!" 👌👌

இது தான் தார்மீகத் தாம்பத்யமோ..?!!


Best regards,