Monday 31 December 2018

2019 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

2019 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்  கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான்.

புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது.

1.பத்து நிமிடங்கள் முன்னதாக:
காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

2.பத்து நிமிடங்கள் மௌனமாக:

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.

3.முப்பது நிமிடங்கள்:
ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.

4.உணவிலும் ஒழுங்கு:
வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.

5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:Day Task.

6.அடைசல்கள் அகற்றுங்கள்:
அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது.

7.மனிதர்களை நெருங்குங்கள்:
இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:
வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

10.நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:
ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:
உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:
உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:
இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:
மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

நல்வாழ்த்துக்கள்...புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!
அன்புடனும் நட்புடனும்...

Best regards,

Sunday 30 December 2018

ஒரு சிறு வேண்டுகோள். ஏற்பதும், மறுப்பதும் உங்கள் உரிமை...

ஒரு சிறு வேண்டுகோள்.
ஏற்பதும், மறுப்பதும் உங்கள் உரிமை...

 2019 முதல் நாமும், நம் குடும்பத்தாரும், பாலிதீன் பைகளில் பொருள் வாங்குவதையும்.... பயன்படுத்துவதையும்... நிறுத்துவோம்

நாம் பங்கேற்கும் ஒவ்வொரு WhatsApp  குழுவிலும் இந்த வேண்டுதலை வைக்கலாமே?

சிலரேனும் செவிமடுத்து மாற வாய்ப்புண்டு அல்லவா?

உதவுங்கள் உறவுகளே!!
நாம் விட்டுச்செல்லும் உலகம் நஞ்சாகிவிடாமல் , வரும் சந்ததியும் வாழவேண்டுமல்லவா?

நமது இளமைக்காலம்,
எவ்வளவு இனிமையானது...
இயல்பானது.....
நமது முன்னோர்களை வாழ்த்தி வணங்குவோம்..

பாலிதீன் பைகளை ஒவ்வொரு தனி நபரும் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என சிந்தித்து,  சிறு முயற்சியை துவங்குவோம்.

👉 காய்கறி, மளிகை பொருள்கள், பழங்கள் வாங்க செல்லும் போது துணிப் பைகளை கொண்டு செல்லுங்கள்

👉 மீன் , இறைச்சி, டீ, காபி, பழச்சாறு, வாங்க செல்லும் போது ஒரு பாத்திரத்தை கொண்டு செல்லுங்கள்

👉 நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு பொருளை வாங்க நேரிடலாம் அப்போ வேறு வழி இல்லாமல் பாலிதீன் பைகளில் பொருளை வாங்க நேரிடும் அதை தவிர்க்க எப்பொழுதுமே உங்கள் வாகனத்தில்  ஒரு துணிப் பையை வைத்து கொள்ளுங்கள்

நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி நபரும் முயற்சி செய்யுங்கள் உங்களில் இருந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்,

ஒரு நாளைக்கு ஒரு நபரிடமாவது இந்த நாட்டின் பசுமையை காத்திட விழிப்புணர்வு கொடுங்கள்

வருங்கால சந்ததிகளை  நலவாழ்வு வாழ வழி செய்வோம்.
 முதலில் நாம் மாறுவோம்....,  இனி துணிப்பையை கையில் எடுப்போம்.
இந்த பதிவை படித்து உறுதிஎடுத்து மற்றவருக்கும் எடுத்து  கூறிவோம்.

Best regards,

Saturday 29 December 2018

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது? How to function in a WhatsApp group?

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?
How to function in a WhatsApp group?

1. குரூப்பின் நோக்கம்/காரணத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
1. Know the purpose/ reason for the formation of the group and act accordingly.


2. ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள் உண்மையானதா என உறுதி செய்து அனுப்புங்கள்.
2. Confirm the validity of the news you wish to share in your group before circulating it.


3. உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை எனில் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். குழுவுக்கும், உங்களுக்கும் பெருமை.
3. If the news you circulate is true, you will be respected by the members. It brings honour to you and your group.


4. கலந்துரையாடல் -தனிப்பட்ட நபரிடம் தேவைப்பட்டாலன்றி தனியாக விவாதிக்கவும்.
4. Discussion - unless necessary, deal individually with a member.


5. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள்.  உங்களை தரம் உயர்த்தி காட்டும்.
5. Post only useful news. This will elevate your status.


6. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விஷயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்.
6. Since we are in more than one group, there is a tendency to repeat the postings. Delete a video or picture immediately after viewing it once.If you receive the same material, delete it at once.


8. ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா, ஏற்கனவே பகிரப்பட்டது தானா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.
8. Before sharing a video or picture with the others, consider carefully if it's worth sharing or if it has been shared previously ; then, go ahead and share.


9. தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம். வதந்திகளுக்கு துணைப் போகாதீர்கள்.
9. Don't share incorrect medical notes. Don't support rumours.


10.கொலை செய்வது, கையை வெட்டுவது போன்ற கொடுரமான, ஆபாசமான, கோரமான  படங்கள்/வீடியோவை அனுப்ப/பகிர வேண்டாம்.
10. Don't share violent or gruesome pictures/videos e.g.murder, chopping of hands, indecent pictures


11. காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.
11. Refrain from sending morning, afternoon and evening/night greetings in the chat group.


12. நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.
12. Conduct yourself such that the group admin is not affected or hated by our postings.


13. குழுவில் சில தேவைகளை பதிவிடும் பொழுது நாள் மற்றும் தங்கள் பெயருடன் பதிவிடுங்கள். மற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும்.  பல மருத்துவ அல்லது கல்வி தேவை குறித்த செய்திகள், வருட கணக்காக பரிமாரப் படுகின்றன.
13. When posting about needs in the group, specify the day and type your name in the message.The others in the group will come to know your name. Several medical or educational needs are being shared for many years.


14. எப்பொழுதும் குரூப்பில் அமைதியாக இருக்காதீர்கள்
14. Don't remain silent in a group all the time.


15. வீடியோ/படங்கள் பதிவிடும் போது அதில் என்ன உள்ளது/எதைப் பற்றி என்பதைக் குறிப்பிட எக்காரணம் கொண்டும் மறவாதீர்கள். நம்மில் பலர் இதைச் செய்வதே இல்லை.
15. When forwarding videos/pictures, don't forget to indicate the content of the material. Many of us fail to do this.

Best regards,

வாழ்க்கை ஒன்று தான்

வாழ்க்கை ஒன்று தான்
────●●●────
●உலை அரிசிக்கு தெரிவதில்லை
அது உருமாறி பலரின்
பசியாற்றப் போவது...!
●ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை
அது அரைபட்டு பின் அடுப்புக்கு
போவது...!
●அட்சதை அரிசிக்கு
தெரிவதில்லை அது மங்கலப்
பொருளாகி ஆசிர்வதிக்கப்
போவது...!
●வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை
அது சந்ததிகள் கையால்
சவத்தின் வாய்க்கு போவது...!
●ரேசன் அரிசிக்கு தெரிவதில்லை
அது ஏழை வீட்டில் மட்டுமே
உணவாகப் போவது...!
●அரிசி ஒன்று தான் ஆனால்
பயன் வேறு வேறு....!
●வாழ்க்கை ஒன்று தான் அது
வாழ்பவனையும் வாழும்
விதத்தை பொறுத்தது....!

Best regards,

Friday 28 December 2018

கண்ணீர்......!

கண்ணீர்......!

இயல்பான

இதயத்திலிருந்து
பீரிட்டு பொங்கி எழும்
உணர்வுகளின் வெளிப்பாடு

பெண்கள்
ஆண்களை வீழ்த்த
கையாலும் ஒப்பற்ற
ஆயுதம்

தண்ணீர்
மட்டுமல்ல
பெண்களின்
கண்ணீரும்தான்
வீணடிக்கப்படுகிறது என்று கூவும்
பெண்ணிய வாதத்தின் சின்னம்

இனி.....

கண்கள்
அச்சு மற்றும் இலத்திரனியல்
ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை தாங்கள் வாழ்வியலோடு
ஒப்பீட்டு அழுகிறது.அழுவது உருதியான
நிலையே! என்கிறது ஆய்வு

மன
தைரியம்
அதிகம் இருப்பதால்
அவர்களால் மற்றவர்களின்
விஷயங்களைப் பார்த்து அதில்
இருக்கும் கஷ்டங்களை சிந்திக்க
முடிகிறது

இதனால்
நிஜத்தையும்
கற்பனையையும்
பிரித்தறிய முடிகிறது

வார்தையால்
வெளிப்படுத்த முடியாததை
கண்ணீரால் உணர்த்த முடிகிறது

துக்கத்தின்
வடிகால் என்றால்
அது மிகையாகாது

கண்ணீர்
கிருமி நாசினியாக....
கண்ணில் எற்படும்
பக்றிரீயாக்களை கட்டுப்
படுத்தி விடும்

உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தினால்
உடல் நல கேடு விளைவிக்கும்
தன்மையை தடுக்கும் அரும் மருந்து

கண்ணீர்
உடல் நலத்திற்க்கும்
மன நலத்திற்க்கும் நல்லது

ஆணோ
பொண்ணோ
அழுத பின்னரே
சம நிலை பேணப்படுவதை
நன்றாக உணர்கின்றார்கள்

உப்பு
கரிக்கும்
கண்ணீரே
வாழ்கைக்கு சுவை
(கவிக்கோ)

நான்
அழும் போது
மழையில் நனைய
ஆசைப்படுகிறேன் என்பவராலேயே
உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிந்தது

பிறப்பு முதல்
இறப்பு வரை...
அழுகையானது
சாபமல்ல
வரம்!!!


Best regards,

Thursday 27 December 2018

ரிங்கா, ரிங்கா ரோசஸ்' நாட்டுப்புற இழவுப் பாடல்...

"ரிங்கா, ரிங்கா ரோசஸ்' நாட்டுப்புற இழவுப் பாடல்...

எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது.

ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தற்செயலாக நான் படித்த, "மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்...

கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, "பிளேக்!' அந்த நோய் கண்டவர்களின் முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து  காணப்படும் தடிப்புகள்.

அதாவது, "ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, "பாக்கட் புல் ஆப் போசீஸ்' அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், "போஸி' என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், "பிளேக்' நோயை விரட்டும் என்ற
நம்பிக்கையோடு!

மூன்றாவது அறிகுறி, "அ டிஷ்யூ... அ டிஷ்யூ...' ஏதாவது புரிகிறதா? அட... தும்மல் ஒலிங்க! அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால்,” வி ஆல் பால் டவுன்!' இப்போது புரிந்திருக்குமே...

ஆம்! அவர் விண்ணகத்திற்கு, "டிக்கட்' வாங்கியாயிற்று என்பது பொருள்.

இனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா?..

வெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு? ....


Best regards,

Wednesday 26 December 2018

இல்லற தர்மம். .

இல்லற தர்மம். .

கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்
தவம் செய்ய தேவை இல்லை

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்

 96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே

அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு
துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி

தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.

ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.

சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது

சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே

மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை

ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தி யோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்

சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலும்
உற்சாகம் தானே......!!!

ஆனால்
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை

ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது உண்மையே

ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்கவும்
ஒரு வழி உள்ளது
உலகம் அறியாதது.

சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு
சொந்தம் சுமை இல்லை.

நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவனுக்கு
பதற்றம் இல்லை

எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே என
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி
எதிரி இல்லையே

உனது எதிரியும் நீயே

உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது என நீ
உணரும் போது

உன் எதிரி முகத்தில்
உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்

எதிரி
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்காலே

பழைய கணக்கு புரிந்தால்
பந்த பாசம்
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று வைத்து
பிறவி கடமை வெல்லலாம்

கர்மாவின் கணக்கு புரிந்தால்
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும்
மனைவி
யார் என்றும் புரியும்

தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்

உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
உபகாரமாக உதவி வந்தால்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உனது
ஏழு ஜென்ம
சமுதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

கோயில் போனாலோ
மகா குளத்தில்
குளித்தாலோ
ஒன்றும் மாறாது

சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே

ஆனால்
ஒரே ஒரு உறவை
நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது
மனைவியே.

மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல
அது தான்
உலகிலேயே
சிறந்த
தவம்

தவம் என்பது
சாமான்யன்களுக்கு சிரமமே

கட்டிய மனைவியை யும்
உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே
உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்

தாய் தந்தை யை
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க.

உறவுகளை மதித்தால்
கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை
இடைக்காடரை
தேட தேவை இல்லை
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை

மனைவியை
பெற்ற பிள்ளையை நேசித்தால்
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்
கர்ம விமோசனம் தேட
அகத்தீசனை தேடி
பாபநாசம்
போக தேவை இல்லை

இதற்கு தான்
இல்லற வாழ்க்கை அமைத்தான்
நமது
முப்பாட்டன்
ஆதி யோக வம்சம்.

மனைவி அழும் வீடே
நரகம்.

மனைவி சிரிக்கும் வீடே
பிரபஞ்ச சொர்க்கம்.

சக்தி உணர்ந்தாலே மட்டுமே
சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!

திருச்சிற்றம்பலம்.

Best regards,

Tuesday 25 December 2018

*நாப்கின் - குல நாசம் 😱*

*நாப்கின் - குல நாசம் 😱*
----------------------------------------------
*மனித குலம் தன் உயிரை காத்துக்கொள்ள உலகில் உள்ள ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும்.*
*16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு இரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசி உள்ளார்.*
*இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன இரசாயனம் ? அவர் என்ன பேசி உள்ளார் ? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.*
*அவர் பேசிய இரசாயனத்தின் பெயர் Dioxin !*
*Chemical Name : 2,3,7,8 - TETRACHLORODIBENZO-PARA-DIOXIN*
*Molecular formula : C12H4CL4O2*
*Dioxin என்னும் இரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals ல் ஒரு வகையை சேர்ந்தது.*
*இவர் தனது உரையை, Dioxin - The Terrorist Chemical என்றே துவங்குகிறார். ஒரு நாட்டில் இராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் இரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார்.*
*இந்த Dioxin இரசாயனம் எங்கிருந்து வருகிறது ? எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.*
*Dioxin என்னும் இரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், இதோ.*
*காட்டு விலங்குகளுக்கு நேர்ந்த பாதிப்புகள் !*
------------------------------------------------------------------
*௧ - சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள்.*
*௨ - குறைந்த கருவுறுதல்.*
*௩ - மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது.*
*௪ - பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது.*
*௫ - மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது.*
*௬ - நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு.*
*௫ - பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது.*
*௬ - ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது.*
*௭ - முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது.*
*௮ - ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய்.*
*௯ - கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது.*
*௧० - எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது.*
*Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்சனைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார்.*
*இதில் இத்தனை கெடுதல் உள்ளதா என்று வியந்துபோன இவர், Dioxin இரசாயனத்தை மேலும் ஆராயத்துவங்குகிறார்.*
*Dioxin மிகக்கொடிய நஞ்சு*
-------------------------------------------------
*௧ - Dioxins are highly toxic and can cause reproductive and developmental problems, damage the immune system, interfere with hormones and also cause cancer. Dioxin அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது இனப்பெருக்கத்தில் பிரச்சனை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது, ஹார்மோன்களில் பிரச்சனை உருவாக்கி புற்றுநோய் வரவழைக்கிறது.*
*௨ - Dioxin புற்றுநோயை உருவாக்கும் என்று Environment Protection Agency 1985 ல் கண்டுபிடித்தது. பின் 1991 ல் Dioxin ஆல் ஆயிரத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தது. பின் இந்த தகவல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டது.*
*௩ - 1971 ல் Missouri என்ற இடத்தில் தூசை(Dust) குறைப்பதற்காக கழிவு எண்ணெய் Spray செய்யப்பட்டது. அதில் Dioxin இருந்துள்ளது. எண்ணி பன்னிரண்டே வருடத்தில் 1983 ல் அந்த நகரமே அழிந்து போனது.*
*௪ - Dioxin எந்த அளவு நச்சு என்றால் CYANIDE ஐ விட 130 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. CYANIDE destroyes human cells and amount others lead to heart respiratory systems & Central nervous system failure. 900 மடங்கு ARSENIC ஐ விட நச்சானது. இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும்.*
*௫ - Killer cell செயல்திறனை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஒடுக்குகிறது.*
*௬ - Dioxin ஐ இவர் Endocrine disruptors என்கிறார். அதாவது Dioxin நாளமில்லா சுரப்பிகளின் குறுக்கீடு என்கிறார். சில முக்கியமான நாளமில்லா சுரப்பிகள் Hypothalamus, pineal, pituitary, Thyroid, Parathyroid, Thymus, Pancreas, Adrenal, Ovaries & Testes.*
*௭ - தவறான நேரத்தில் ஹார்மோன்களை செயல்படுத்தவும், முடக்கவும் செய்கிறது.*
*௮ - இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளை தடுக்கிறது.*
*௯ - தவறான நேரத்தில் தவறான ஹார்மோனை தூண்டுகிறது அல்லது சரியான ஹார்மோனை தவறான நேரத்தில் தூண்டிவிடுகிறது.*
*௧० - எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், Respiratory system, Reproductive system, Immune system, Digestive system என ஒட்டு மொத்த மண்டலத்தையும் பாதிக்கிறது.*
*இத்தனை ஹார்மோன் பாதிப்புகளை உருவாக்கும் இந்த Dioxin மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடுகிறார். இதோ.*
*Dioxin ற்கு Exposure ஆன மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்*
--------------------------------------------------------------------
*ஆண்களுக்கு*
---------------------------
*௧ - விந்தணு உற்பத்தி குறைகிறது என்று பல்வேறு நாடுகளுடைய 61 ஆராய்ச்சிகள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.*
*௨ - 1938 ஆம் ஆண்டுகளில் 113 மில்லியன் per ml இருந்த விந்தணு, 1990 களில் 66 மில்லியன் per ml ஆக குறைந்துள்ளது. US ல் 50% விந்தணு குறைபாடு ஏற்பட்டுள்ளது.*
*௩ - டென்மார்க்கில் 1945 ல் இருந்து விதைப்பை புற்றுநோய் 1990 ல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே பல்வேறுநாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது.*
*௪ - ஆண்உறுப்பு மற்றும் விதைப்பை அளவு குறைந்துள்ளது.*
*௫ - De masculinization, ஆண்மை அழிப்பு வேலை நடக்கிறது.*
*பெண்களுக்கு*
----------------------------
*௧ - மார்பகப் புற்றுநோய் 339 நாடுகளில் இது அதிகரித்துள்ளது*
*௨ - மார்பகத்தில் Fibroid கட்டிகள்*
*௩ - Polycystic ovary, கரு முட்டைப்பையில் நீர்கட்டிகள்*
*௪ - கருப்பை Fibroid கட்டிகள்*
*௫ - Endometriosis, Pelvic Inflammatory diseases*
*௬ - குறுகிய மாதவிடாய் காலம்*
*௭ - கருவுருதலில் தாமதம்*
*௮ - முன்கூட்டியே பூப்பெய்தல்*
*௯ - Masculinization என்னும் ஆண்தன்மை அதிகரிப்பு*
*காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை மனிதர்களுக்கும் ஊடுருவியுள்ளதை கண்டு அதிர்ந்து போனார்.*
*ஆதாரங்கள்👇🏽*
----------------------------
*இதோ 2002 ஆம் ஆண்டு இவர் கிட்டதட்ட ஒரு மணி நேரம் பேசிய காணொளியின் link 👇🏽*
*இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த DIOXIN எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.*
------------------------------------------------------------------
*௧ - Bleaching process in industries*
*௨ - இரசாயனம் தயாரிப்பு தொழிற்ச்சாலை*
*௩ - குப்பைகளை எரிக்கும் போது*
*௪ - பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள்*
*௫ - Plastic பொருட்களை சூடு செய்யும் போதும் எரிக்கும் போதும்*
*௬ - அசைவ உணவுகள் (Dioxin stick to fatty tissues)*
*௭ - சில கழிவு எண்ணெய்களை எரிக்கும் போது*
*௮ - Dismantling and recycling electronic products*
*௯ - மருத்துவக்கழிவுகளில் இருந்து*
*நாப்கின்*
-----------------
*என்னடா, நாப்கினை பற்றி சொல்கிறேன் என்று ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினை பற்றி பார்ப்போம்.*
*இந்த பகுதியை தொடங்குவதற்கு முன் இரண்டு கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.*
*நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்து பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்துவிடுவார்கள்.*
*அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.*
*ஆனால் அரசும் சில தனியார் NGO க்களும் என்ன சொன்னது ? துணி பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படும், Infection ஆகிவிடும், கிருமி தொற்று ஏற்படும், பிறப்பு உறுப்பு பகுதியில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும், கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் என கிராமம் கிராமமாக தண்டோரா போட்டார்கள்.*
*பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் வசிப்பிடங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு என்ற பெயரில் இவர்கள் செய்த நாப்கின் விளம்பரத்திற்கு அரசு broker வேலை பார்த்தது.*
*சரி என்னுடைய கேள்வி இது தான்*
*துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா ?*
*அல்லது*
*நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா ?*
*இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது நாப்கின் என்னும் நஞ்சு இம்மண்ணிற்கு அறிமுகமாகியதோ, அப்பொழுதுதான் கருப்பை பிரச்சனைகளும் நம் பெண்களுக்கு அறிமுகமாகியது என்ற உண்மை புலப்படும்.*
*சரி அரசும் NGO க்களும் என்ன சொன்னது துணி பயன்படுத்தினால் கருப்பை புற்றுநோய் வரும் என சொல்லி, நாப்கின் பயன்படுத்துங்கள் இது பாதுகாப்பானது என சொன்னதல்லவா ! இவர்கள் பேச்சை கேட்டு அப்படி நாப்கின் பயன்படுத்திய 100 ல் 99 பெண்களுக்கு இப்பொழுது கருப்பை தொடர்பான பிரச்சனை இருப்பதை நீங்கள் அறிவீர்களா ?*
*சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினின் மூலப்பொருள் என்ன ? அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.*
*நாப்கின் மூலப்பொருள்*
--------------------------------------------
*௧ - கச்சா எண்ணெய் (petroleum product)*
*௨ - குப்பை காகிதங்கள்*
*௩ - பழைய அட்டைகள்*
*௪ - மரக்கூழ் (Wood pulp)*
*௫ - நெகிழி (plastic)*
*௬ - Nylon, Non Oven product*
*௭ - SUPER ABSORBANT POLYMER (SAP)*
*௮ - CHLORINE DI OXIDE*
*௯ - பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லி*
*௧० - நறுமணப்பொருட்கள் (Fragrances)*
*௧௧ - Deodorant, Rayon*
*௧௨ - Bleaching Agents*
*பெண்களே இதை அனைத்தையும் சேர்த்துத்தான் உங்கள் உடலிலேயே Sensitive ஆன பகுதியில் வைக்கிறீர்கள். சரி வாங்க இதன் தயாரிப்பு முறைக்கு செல்வோம்.*
*தயாரிப்பு முறை*
-------------------------------
*நாப்கினை தயாரிப்பதற்கு முன் அதனுள் வைக்கப்படும் பஞ்சை முதலில் தயாரிப்பார்கள். Cotton னு நினைக்கறீங்களா ? அது தான் இல்லை. வாங்க பார்க்கலாம்.*
*பழைய காகிதங்கள், அட்டை பெட்டி சாமான்கள், மரக்கட்டைகள், இதை எல்லாம் பிரம்மாண்ட கலன்களில் நீர் மற்றும் சில இரசாயனங்களை சேர்த்து கொதிக்க வைத்து கூழாக்குவார்கள். பிறகு இந்த கூழில் பல்வேறுவிதமான இரசாயனங்களை கலந்து அதை பஞ்சு போல் மாற்றுவார்கள்.*
*இந்த பஞ்சு, பழுப்பு (Brown) நிறத்தில் இருக்கும். வெள்ளையா இருந்தாத்தான இப்ப நீங்க எந்த பொருளையும் வாங்குவீங்க, அரிசி முதல் திருமணம் முடிக்கும் பையன் வரை.*
*இந்த பஞ்சை பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாற்ற பல Bleaching Agent Chemical களை பயன்படுத்துவார்கள், அதில் குறைந்த விலையில் கிடைப்பது CHLORINE DI OXIDE. இதன் ஒரு லிட்டர் விலையே ரூ.10 ற்குள் கிடைக்கிறது. இருப்பதிலேயே இது தான் Cheapest Bleaching agent (நாம் உடுத்தும் துணி British வருகை முதல் 2009 வரை இந்த CHLORINE DI OXIDE ஆல் தான் Bleach செய்யப்பட்டது என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்)*
*இந்த CHLORINE DI OXIDE ஆல் Bleach செய்தவுடன், அந்த பஞ்சு பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். இதன் பின் மிகப்பெரிய பூதம் ஒளிந்துள்ளது. பின் சொல்கிறேன்.*
*இப்பொழுது நாப்கினை தயாரிக்க முதல் layer ஆக Non Oven ஐ எடுத்துக்கொள்வார்கள், பிறகு வெண்மை ஆக்கிய பஞ்சை எடுத்து அதில் SUPER ABSORBANT POLYMER (SAP) என்னும் இரசாயனத்தை கலப்பார்கள். இது எதற்கு என்றால் உதிர திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றிவிடும்.*
*எந்த அளவு ஈர்க்கும் என்றால், இந்த SAP தன்னை விட 30 to 60 மடங்கு திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றது. இன்னும் Absorbing Capacity ஐ அதிகரிக்க மெலிசான நாப்கின்களில் Rayon chemical பயன்படுத்துவார்கள்.*
*பிறகு கடைசி layer ஆக Plastic பயன்படுத்துவார்கள். அப்பொழுதுதான் உதிர திரவம் நாப்கினைத்தாண்டி வெளி வராது.*
*மேலும் இதில் உதிர நாற்றம் சிலருக்கு பிடிக்காது என்பதற்காக அந்த வாசனையை மாற்ற இரசாயன நறுமணப்பொருட்கள் Fragrance, Deodorant சேர்க்கப்படுகிறது.*
*வெண்மையா இருக்க CHLORINE DI OXIDE, வாசனையா இருக்க Chemical Fragrance, மரம் வளர்க்க பூச்சி பூஞ்சானகக்கொல்லி (Pesticides & Herbicides) என பல நச்சு இரசாயனங்கள் இதில் சேர்த்து ஒரு வழியாக அந்த மூன்று layer களும் தயாராகிறது.*
*பிறகு இந்த மூன்று layer களும் chemical gum கொண்டு ஒட்டப்பட்டு அழகான முறையில் பேக் செய்யப்பட்டு உங்கள் இல்லங்களில் கண்களுக்கு விருந்தாய் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. பணத்தை மட்டும் வாழ்கையாக நினைத்து அதன் பின்னால் ஓடும் நம் மக்களுக்கு இதெல்லாம் தெரியுமா ? வாய்ப்பே இல்லை, தெரியாது வாங்கி பயன்படுத்துவார்கள்.*
*சரி இதன் பின் ஒரு பூதம் ஒளிந்துள்ளது என்று சொன்னேன் அல்லவா ! வாங்க அது என்ன பூதம் எங்கு ஒளிந்துள்ளது என்று பார்ப்போம்.*
*அப்பஞ்சை CHLORINE DI OXIDE கொண்டு Bleach செய்தார்கள் அல்லவா, அனைத்தும் வெண்மையாக வாங்கி பழக்கப்பட்ட உங்களுக்கு, அதன் பரிசாய் Bleaching process யின் by product ஆக ஒரு CHEMICAL தங்கிவிடுகிறது.*
*அந்த Chemical பெயர் என்ன தெரியுமா ? முன் ஒரு CHEMICAL எங்கிருந்து வருகிறது என்று பார்க்கலாம் வாங்கன்னு சொல்லி, அதன் முதல் வரியாக Industrial Bleaching process போட்டிருந்தேன் அல்லவா. இதிலேயே அது என்ன இரசாயனம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.*
*அது தான்*
*அது தான்*
*அது தான்*
*"DIOXIN" என்னும் மிக்கொடிய நஞ்சு. DIOXINS ARE EXTEREMELY PRESISTANT VERY DANGEROUS HIGHLY POISONIOUS CHEMICAL IN THE WHOLE WORLD.*
*எந்த அளவு கெடுதல் என்றால், Dioxin ஹார்மோன்களை ஏமாற்றி உடலில் ஒரு Cell லினுடைய NUCLEUS ற்குள் நுழைந்து DNA sequence ஐ தூண்டிவிட்டு, ஜீன்களையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.*
*Chemical Name : 2,3,7,8 - TETRACHLORODIBENZO-PARA-DIOXIN*
*Molecular formula : C12H4CL4O2*
*ஆதாரங்கள் 👇🏾*
-----------------------------
*Dioxin நச்சுத்தன்மை குறித்து UNITED STATES OF AMERICA நாட்டினுடைய Official website ல் ENVIRONMENTAL PROTECTION AGENCY வெளியிட்ட தகவலின் link இதோ 👇🏽*
*Dioxin நச்சுத்தன்மை குறித்து 7, April, 2017 ல் MEDICAL NEWS TODAY என்னும் இணைய செய்தி வலைதளத்தில் வெளியான செய்தியின் link இதோ 👇🏽*
*இப்பொழுது SANITARY NAPKIN பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பேராபத்துக்களை பார்ப்போம்.*
*நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்*
-------------------------------------------------------------------
*கட்டுரை தொடக்கப்பகுதியில் DIOXIN ஐ பற்றி கூறினேன் அல்லவா. அதே Dioxin தான் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN னிலும் உள்ளது.*
*ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும் ?*
*இப்பொழுது தெரிகிறதா ஏன் உலகவல்லாதிக்க தீய சக்திகள் இப்பொருளை தயாரித்து வியாபாரம் செய்கிறார்கள் என்று !*
*Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.*
*பிறகு என்ன ? DIOXIN ற்கு expose ஆன காட்டு விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலமைதான் நம் பெண்களுக்கும்.*
*௧ - இப்படி உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.*
*௨ - ஹார்மோன்களுடன் விளையாடத்துவங்கும் (Hormonal Imbalance)*
*௩ - சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது*
*௪ - இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி*
*௫ - சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)*
*௬ - கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)*
*௭ - கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)*
*௮ - கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)*
*௯ - தைராய்டு (Thyroid)*
*௧० - கல்லீரல் வேலையில் மாறுபாடு*
*௧௧ - ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு*
*௧௨ - வெள்ளைப்படுதல்*
*௧௩ - தோல் நோய்கள்*
*௧௪ - Toxic Shock Syndrome (திடீர் மரணம்)*
*௧௫ - நீரிழிவு (DIABETS)*
*௧௬ - மன அழுத்தம் (Depression)*
*௧௭ - கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)*
*௧௮ - Endomeriosis, Pelvic inflammatory disease*
*௧௯ - குழந்தையின்மை (Fertility problems)*
*௨० - மார்பக புற்றுநோய் (breast cancer)*
*௨௧ - கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)*
*இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. அனைத்தையும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது.*
*நீங்களே சிந்தியுங்கள், நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா ? அல்லது மதுப்பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா ? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும் ? ? ?*
*அனைத்திற்கும் காரணம் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN தான்.*
*இப்பொழுது நாப்கினால் Environment ற்கு ஏற்படும் ஆபத்துக்களை பார்ப்போம்.*
*நாப்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு*
-------------------------------------------------------------------
*Dioxins are a group of chemically-related compounds that are persistent environmental pollutants (POPs)*
*௧ - நாப்கினை தூக்கி எறிந்துவிடுகிறார்கள் ஆனால் இது மக்கிப்போக 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.*
*௨ - Highly toxic emission (தொடர்ந்து நச்சை வெளியேற்றும்)*
*௩ - 1 நாப்கின் 4 Plastic carry bag ற்கு சமம். ஒரு பெண் மாதம் 50 plastic bag ஐ வெளியேற்றுகிறார்.*
*௪ - நம் நாட்டில் பெண்கள் வருடத்திற்கு 7.020 மில்லியன் நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.*
*௫ - இதில் உள்ள SUPER ABSORBANT POLYMER சாக்கடையில் அடைத்துவிடும். இதை சுத்தம் செய்பவர்களுக்கு, ஆஸ்துமா, TB, தோல் நோய்கள், கண் பிரச்சனைகள் வருகிறது. சுத்தம் செய்யும் போது திடீர் மரணமும் ஏற்படுகிறது.*
*௬ - ஒரு பெண் தனது வாழ்நாளில் 6000 நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.*
*௭ - நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை 355 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்தினால் வருடத்திற்கு 58 பில்லியன் நாப்கின் Pads வெளியேறும்.*
*இது பல நூறு வருடங்கள் மண்ணில் இருந்து வியாதிகளை பரப்பி வரும். இதை எரித்தால், அதில் இருந்து கொடிய நச்சு Dioxin வெளியேறி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் சீரழித்து விடும்.*
*இந்த Dioxin fatty tissue வில் ஒட்டிக்கொண்டு உணவுச்சங்கிலிகளில் உலா வருகிறதாம். முக்கியமாக அனைத்து அசைவ உணவுகளில் இது இருப்பதாக ஆய்வு கூறுகிறது.*
*சரி இப்பொழுது எந்த கம்பனி Sanitary Napkin ஐ தயாரிக்கிறது என்று பார்ப்போம்.*
*நாப்கின் தயாரிக்கும் கம்பனிகள்*
--------------------------------------------------------------
*அதற்கு முன், நம் நாட்டில் எத்தனை பெண்கள் SANITARY NAPKIN பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 42.6 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு Survey கூறுகிறது.*
*நம் நாட்டை பொருத்தவரை நாப்கின் என்பது MULTI BILLOIN DOLLOR BUSINESS வாய்ப்பு உள்ள ஒரு மிப்பிரம்மாண்ட சந்தை.*
*தற்போது நீங்கள் பயன்படுத்தும் அத்தனை பிராண்டடு நாப்கின்கள் அனைத்தும் வெறும் இரண்டு, மூன்று கம்பனிகளுடையதுதான். அதுவும் இம்மூன்றும் அமெரிக்க கம்பெனிகள்.*
*உதாரணத்திற்கு பெரும்பாலும் நம் பெண்கள் பயன்படுத்தும் பிரபல நாப்கினை எடுத்துக்கொள்வோம். இந்த பிரபல பிராண்டான நாப்கினை தயாரிப்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கம்பெனி. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு முதல் நாப்கின் வரை பாதி அன்றாட பொருட்கள் இவர்களுடையதுதான்.*
*உங்கள் ஆரோக்கியத்தை பற்றி எல்லாம் இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. மாறாக உங்கள் பணத்தை வைத்தே உங்களை எப்படி கெடுப்பது என்று தான் பார்ப்பார்கள் இந்த உலக வல்லாதிக்க தீய சக்திகள்.*
--------------------------------------------------------------------
*நாம் உடுத்தும் துணி British வருகை முதல் 2009 வரை இந்த CHLORINE DI OXIDE ஆல் தான் Bleach செய்யப்பட்டது.*
*இதன் தீவிரத்தை உணர்ந்த உலக அரசுகள் இவ்வுலகில் இனி ஒருவன் கூட உயிர்தப்ப மாட்டானோ என பயந்து போய் CHLORINE DI OXIDE bleach ற்கு தடை விதித்தது.*
*அதன் வரிசையில் நமது அரசு, சாய ஆலைகள் துணிகளுக்கு இனி Chlorine di oxide ல் bleach செய்யக்கூடாது என்று 2009 ல் தடை விதித்தது.*
*2009 முதல் இப்பொழுது வரை Bleach ற்கு HYDROGEN PEROXIDE ஐ பயன்படுத்தி வருகிறார்கள். இதன் விலை ஒரு லிட்டர் 65 முதல் 70 ரூபாய் வரை கிடைக்கும். Chlorine di oxide விலை லிட்டர் ரூ.10 ற்குள் தான். எனவே விதி மீறி சில இடங்களில் அரசிற்கு தெரியாமல் இதை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.*
*British வருகை முதல் 2009 வரை Chlorine di oxide ஆல் Bleach செய்யப்பட்ட நமது ஆடைகளில் Dioxin தங்கி இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கும் போது கண்களில் இரத்தக்கண்ணீர் தான் வருகிறது.*
*நம் முன்னோர்கள் துணிகளை Bleach செய்ய என்ன பயன்படுத்தினார்கள் என்று தெரியுமா ? சுண்ணாம்பு, சாம்பல், பூந்திக்காய். இதனால் bleach செய்யப்பட்ட துணி ஓரளவு தான் வெண்மையாக இருக்குமே தவிர, இப்பொழுது உள்ளது போல் கண்களை பதம் பார்க்கும் அளவு வெண்மையாக இருக்காது.*
*சரி Dr.Edward.K.Fujimoto தனது நிகழ்ச்சியின் இறுதியில் மூன்று முக்கிய விடையம் சொல்லி இருக்கிறார். என்ன தெரியுமா அது ? அவர் சொன்ன வரிகள் இதோ*
*௧ - Plastics are used so much in packaging, Its so convenient that everything is in plastic, However if the plastic that containing food, that food have a high fat content to the high temperature, is there for long time, That food will absorb the plastic Bleaching out all of the container, that contains DIOXIN & if you eat that, You put it into your system.*
*சூடாக உணவை நெகிழிப்பையில்(plastic) வாங்கி வரும் போது அந்த plastic சூடான உணவுடன் வினைபுரிந்து, Dioxin என்னும் கொடிய நஞ்சு அதில் கலப்பதாக சொல்கிறார். இப்பொழுது தெரிகிறதா ஏன் சூடாக plastic cup களில் டீ குடிக்க வேண்டாம் என்று சொல்கிறோம் என்று.*
*இது எனக்கே அதிர்ச்சி தரும் தகவலாய் உள்ளது. நம் மக்கள் அழகான தூக்கு போசியை விட்டுட்டு, பேக்கரிகளில் plastic ல் தான் சுட சுட டீ காபி வாங்கி வந்து plastic டம்ளர்களிலேயே குடிக்கிறார்கள். இனி யாராவது plastic டம்ளரில் காபி குடிப்பதை நீங்கள் பார்த்தால் இந்த தகவலை அவர்களுக்கு சொல்லுங்கள்.*
*Avoid cooking, heating, microwaving, storing in plastics*
*ஜப்பான் நாட்டில் Microwaving ற்கு light weight glass மற்றும் ceramic பாத்திரங்கள் தான் பயன்படுத்துவார்களாம். Dioxin குறித்து ஜப்பான் நாட்டு மக்களுக்கு அதிக விழிப்புணர்வு இருக்கிறது என்கிறார்.*
*௩ - Don't burn plastics, I repeat, Don't ever burn plastic, Don't ever ever burn plastic, dioxin directly get into air and contaminate everything surrounded*
*நெகிழியை கொளுத்தாதீர்கள் என்று மன்றாடி கேட்கிறார். கொளுத்தினால் Dioxin காற்று மண்டலத்தில் நேரடியாக கலந்து தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்கிறார்.*
*அப்படி plastic எரிக்கப்பட்ட இடத்தில் உள்ள மண் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் அதை அப்படியே தோண்டி வெட்டி எடுத்து வேறு மண்ணை அந்த இடத்தில் நிரப்பச்சொல்கிறார்.*
*௪ - பூச்சிக்கொல்லி அடித்த உணவுகளை தவிர்த்து, இயற்கையில் விளைந்த உணவுப்பொருட்களை அதிகம் எடுக்கச்சொல்கிறார்.*
-------------------------------------------------------------------
*முடிவுரை*
------------------
*இந்த கட்டுரை மூலம் நம் பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkin எந்த அளவிற்கு ஆபத்தானது என்று அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.*
*இன்னும் எத்தனை வருடம் அனைத்தையும் கண்டும் காணாமல் வாழப்போகிறோம். பொறுத்தது போதும், இதில் இத்தனை பிரச்சனைகள் இருப்பதை தெரிந்து, போன வருடம் பூப்பு - 2017 என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம், அதில் தற்போதைய நச்சு Sanitary Napkin ஐ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை நாப்கினை கற்றுக்கொடுத்தோம்.*
*அதில் பலர் கற்றுக்கொண்டு தாங்கள் பயன்படுத்தி. பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்துள்ளார்கள்.*
*ஒரு பெண்ணிற்கு கருக்குழாய் அடைப்பு இருந்தது, நாப்கினை மாற்றி மூன்றே மாதத்தில் அந்த அடைப்பு காணாமல் போனது.*
*இன்னொரு பெண்ணிற்கு இரண்டே மாதத்தில் கருப்பையில் இருந்த கட்டி கரைந்தது போனது.*
*இன்னொரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் நாப்கினை மாற்றிய இரண்டே மாதத்தில் கரு உருவானது. இது போல் ஆயிரக்கணக்கான பெண்கள் பலன் அடைந்து வரும் இதே வேளையில்.*
*இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு இரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.*
*இதற்கெல்லாம் நிரந்த தீர்வை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூப்பு நிகழ்ச்சி உங்களுக்கு பரிசாய் வழங்கும்.*
*தன்னுடைய அடுத்த தலைமுறை இம்மண்ணில் வாழ வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.*
*நீங்கள் கடைகளில் செய்தித்தாள் சுற்றி வாங்கி வருவது நாப்கின் அல்ல உங்கள் வம்சத்தையே கூண்டோடு அழிக்கும் அணு ஆயுதம் என்பதை இனி ஒவ்வொருவரும் நினைவில்கொள்ள வேண்டும்.*
*உங்களுக்கு இன்னொரு செய்தி தெரியுமா ? நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு Diaper ஐ மாட்டிவிடுகிறீர்கள் அல்லவா ! அந்த Diaper உம் நாப்கினைப்போன்றே தான் தயாரிக்கப்படுகிறது. நாப்கினில் உள்ள அத்தனை இரசாயனங்களும் இந்த Diaper ரிலும் உள்ளது. நாப்கினை தயாரிக்கும் அதை அமெரிக்க கப்பெனி தான் இந்த Diaper ஐ யும் தயாரிக்கிறது.*
*நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை பாதிப்புகளும். இந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் ஏற்படும் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் ? ? ? சில உதாரணங்கள் இப்பொழுது பல குழந்தைகளுக்கு விதைப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது, விதை வீங்குதல், சுருங்குதல், காணாமல் போவது. விதைப்பை தாறுமாறான வளர்ச்சி.*
*சிறுநீர்கழிக்கும் உணர்வே இல்லாமல் போவது. பெரியவனாகும் போது மலட்டுத்தன்மை ஏற்படும். எந்த குழந்தைக்கு எல்லாம் நீங்கள் Diaper மாட்டிவிடுகிறீர்களோ அந்த குழந்தைக்கு, குழந்தை பிறக்காது. அதோடு அந்த வம்சமே அழியும்.*
*நீங்கள் உங்கள் குழந்தைக்கு மாட்டுவது Diaper அல்ல, தூக்குக்கயிறு *
*பெண்களே நீங்கள் வைப்பது நாப்கின் அல்ல அடுத்த தலைமுறைக்கு வைக்கும், கொள்ளி 🔥*
*பெற்றோர்களே ஒவ்வொருமுறை உங்கள் குழந்தைக்கு Diaper மாட்டும் போது, உங்கள் குழந்தையை தூக்கிலிடுகிறீர்கள் என்பது நினைவிற்கு வரட்டும்.*
*பெண்களே ஒவ்வொருமுறை நீங்கள் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறீர்கள் என்பது நினைவிற்கு வரட்டும்.*
*ஒட்டுமொத்த மனித இனத்தின் ஆரோக்கியமும் உங்கள் கையில் தான் உள்ளது 👈🏽*
*நாப்கினை தவிர்த்திடுங்கள் 🙅🏽‍♀*
*மனித குலத்தை காத்திடுங்கள். 👨‍👩‍👧‍👦*
*கையளவு காதிகப் பஞ்சிற்கு மனித இனத்தையே காவு கொடுத்துவிடாதீர்கள் !*
*இனி இரசாயன நாப்கினின் குலம் நாசமாகட்டும் 💥*
*மனித இனத்தின் குலம் செழிக்கட்டும் 🌱*
*நன்றி*

Best regards,

Monday 24 December 2018

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?

பெரியார் பல்கலை: எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.

அழகப்பா பல்கலை: எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

சென்னை பல்கலை: எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

பாரதியார் பல்கலை: எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.

எம்.எஸ்சி., படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

பாரதிதாசன் பல்கலை:
 எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை

அண்ணாமலை பல்கலை: எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்: எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.

இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.

 Ref . தினமலர் : டிசம்பர் 19,2018

Best regards,

Sunday 23 December 2018

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்!
சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்.
போலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.
அந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூர முடியவில்லை!
ஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது!
அவரது இரத்தத்தில் Rohypnol. என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது!
இந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது!
இந்த Rohypnol. உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை.
இது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது!
இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும்.அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூர முடியாது!
அதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் அதனால் கருத்தரிப்பதைத் தடுக்கிறது!
எனவே பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் 'paternity test ' மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்க இது. உதவுகிறது!
இந்த மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன!
இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.
Rohypnol
எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது! தனி சுவையோ, கலரோ கிடையாது. எனவே பானத்தின் கலரோ சுவையோ இந்த மாத்திரையைக் கலந்த பின்னும் மாறுவதில்லை!
அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரிய வருவது இல்லை!
அதனைக் குடிப்பதால் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறுநாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அவர்களது நினைவில் இருப்பதில்லை!
கயவர்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.அவ்வளது எளிதாகக் கிடைக்கக்கூடியது!
இன்டர்நெட் பக்கங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது எனத் தெளிவாக விளக்கிக்கூறும் வெப்சைட்ஸ் கூட இருக்கிறதாம்.
பெண்களே தயவு செய்து வெளியில் செல்கையில் அதிக கவனத்துடன் இருங்கள்!
பாய்ஃபிரண்ட் உடன் வெளியிலோ, டேட்டிங்கோ, ஒரு டின்னர் என்று எங்கு யாருடன் வெளியில் சென்றாலும் நீங்கள் குடிக்கும், சாப்பிடும் உணவுப் பொருட்கள், பானங்கள் இவற்றில் அதிக கவனம் வைத்திருங்கள்!
கேன் டிரிங்க்ஸ், பாட்டில் கூல் டிரிங்க்ஸ் இவை எல்லாம் சீல் உடைக்கப்படவில்லை என்பதை பருகும் முன் உறுதி செய்யுங்கள்!
வேறு அறிமுகமில்லாத நபர்கள் உங்களுக்கு காஃபியோ, கூல்டிரிங்க்சோ வாங்கிக் கொடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.
வேறு யாருடைய பானங்களை விளையாட்டிற்குக் கூட டேஸ்ட் செய்து பார்க்க வேண்டாம்.
ஆண்கள் அனைவரும் உங்களது குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், உறவினர் அனைவருக்கும் இந்த தகவலைத் தெரிவித்து எச்சரிக்கைப் படுத்துங்கள்!
முடிந்தவரை பகிருங்கள்!
எங்கோ ஒரு அக்கா , தங்கை அல்லது ஒரு மகள் இந்த தகவலைப் பகிர்வதால் உங்களால் காப்பாற்றப்படலாம் என்பதை உணர்ந்து வேகமாகப் பகிருங்கள்!
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது ஒரு சிறந்த ஆயுதம்.அதுவே பெண்களைப் பாதுகாக்கும்!
பெண்களை மதிப்போம்

Best regards,

Friday 21 December 2018

விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டுள்ள இந்திய கருப்பு பண முதலைகளின் முதல் 30 பேர் கொண்ட முதல் பட்டியல்... (பணம் கோடி கணக்கில்)

விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டுள்ள இந்திய கருப்பு பண முதலைகளின் முதல் 30 பேர் கொண்ட முதல் பட்டியல்... (பணம் கோடி கணக்கில்)

1.  அம்பானி ₹5,68,000
2. அதானி ₹7,800
3. அமித்ஷா ₹1,58,000
4. ராஜ்நாத்சிங் ₹82,000
5. அருண்ஜெட்லி ₹15,040
6. சுமித்ரிதி இரானி ₹28,900
7. எடியூரப்பா ₹9,000
8 . ரவிசங்கர் குருஜி ₹15,000
9. பாபா ராம்தேவ் ₹75,000
10. ஜனார்த்தன ரெட்டி ₹50,000
11. நளின் கோலி ₹5900
12. தேவேந்தர ஃப்ட்னாவிஸ் ₹2,20,000
13. லலித் மோடி ₹76,888
14. சுஷ்மா சுராஜ் ₹5,82,114
15. நரேந்திர மோடி ₹19,800
16. ஷர்ஷத் மேத்தா ₹1,35,800
17. கத்தான் பாரத் ₹8,200
18. கட்டா சுப்ரமணிய நாயுடு ₹14,500
19. லாலு பிரசாத் யாதவ் ₹28,900
20. ஜேஎம்.சிந்தியா ₹9,000
21. வையாபுரி கோபாலசாமி ₹35,000
22. வசுந்திரா ராஜ் ₹5,900
23. ராஜ் ஃபவுண்டேசன் ₹1,89,008
24. என்.சந்திரபாபு ₹1,68,009
25. ஜெ.ஜெயலலிதா ₹2,57,500
26. சோனியா காந்தி ₹3,00,089
27. சுப்ரமணிய சுவாமி ₹2,20,060
28. சசிக்கலா ₹1,54,700
29. டிடிவி.தினகரன் ₹12,870
30.கருணாநிதி குடும்பம் ₹ 8 ,46, 890


இந்தியர்களின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கியில் இருப்பது ₹358,679,863,300,000 (1.3 ட்ரிலியன் டாலர்; ரூபாயில் போட தெரிந்தவங்க போடுங்க!) இந்த பணம் 10 அமெரிக்காவுக்கு சமம். அடுத்த 100 வருடங்களுக்கு உலகில் சக்தி வாய்ந்த முதல் நாடாக இந்தியா இருக்கலாம்.

ஊழலுக்கு எதிரான போருக்கான ஆயுதம் இதோ..! இதுபோல் 2,000 இந்தியர்கள் இதுமாதிரி வரி ஏய்ப்பு நடத்தி திருட்டுத்தனமாக சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளனர்!

இதை விட்டுபுட்டு ஜிஎஸ்டியாம்; பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாம்; என்னடா கூத்து இது! யாரை ஏமாத்த இந்த டுமீல்!

இட்லிக்கு வரியா போட்டு இஸ்ரேல் போயிட்டரு நம்ம வெளிநாட்டு பிரதமாரு
மோடி

இப்படி ஒரு பிரதமர் இருந்த நாட்டுல பட்டினி சாவு இல்ல கெட்டி சட்டினி சாவு தான் வரும்

இது சிரிக்க அல்ல மக்களே சிந்திக்க....

 MLA க்களின் மாதசம்பள விபரம்

கர்நாடகா  Rs.60,000

சீக்கீம் Rs.52,000

குஜராத் Rs.47,000

கேரளா Rs.42,000

இராஜஸ்தான் Rs.40,000

உத்தரகாண்ட் Rs.35,000

ஒடிசா Rs.30,000

மேகலாயா  Rs.28,000

அருணாச்சல பிரதேசம் Rs.25,000

அசாம் Rs.20,000

மணிப்பூர் Rs.18,500

நாகலாந்து Rs.18,000

திரிபூரா  Rs.17,500

தெர்மாக்கோல் போன்ற திட்டத்தை மக்களுக்குதந்து தந்து அழியா புகழ் பெற்ற தமிழ்நாட்டு  MLA மாதசம்பளம் 

1,05,000

*கொஞ்சம் காரி துப்பி வாழ்த்தலாம் வாங்க

 இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

M.P யின் மாதச் சம்பளம்
                       ₹50000/-
இதர வருமானம்
                        ₹45000/-
மாத அலுவலகச் செலவு
                         ₹45000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
                          ₹48000/-
தினபடி(பாராளுமன்றம் கூடும்போது)
                           ₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.

டெல்லியில் தங்கும் அறை இலவசம்

மின்சாரக் கட்டணம்
50000 unit வரை இலவசம்

தொலைபேசி கட்டணம்.       (1,50,000 calls) இலவசம்.

ஆக ஒரு MP யின் மாதச் செலவு
                            ₹292000/-
வருடத்திற்கு. ₹35,04,000/-

5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-

மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
                             ₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
                         950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.

படிக்காத, பட்டம்பெறாத.....
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை....
நமக்கும்..........
 உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை....     
மனுஷனா இருந்தா ஷேர் பண்ணுங்க......

Best regards,

தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....

தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....

சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....

வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது.

100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும்,  இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து   
 கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை என்றும் எனவே நீதிமன்றம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 70 வயதான சகோதரன் வழக்கு தொடர்ந்தார்...

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. என்ன வந்தாலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பை யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் என்று அண்ணனும், கடந்த 40 வருடங்களாக அண்ணன் தந்தையை கவனித்து வருவதால் இனிமேலுள்ள காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் என்று தம்பியும் வாதம் செய்தனர்.

நீதிபதிக்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறினார். இருந்தாலும் ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டுமே....எனவே இனியுள்ள காலம் இரண்டு பேரும் தந்தையை மாறி மாறி கவனித்து கொள்ளலாமே என்ற கருத்தை சொன்னார். ஆனால் இதற்கு இரண்டு பேரும் உடன் படவில்லை.

நீதிபதி தந்தையிடம் கருத்து கேட்டார். தந்தை எனக்கு என்னுடைய மக்கள் எல்லாரும் சமம். அவர்களிடம் எனக்கு வேற்றுமை காண முடியாது என்று அழுது கொண்டே சொன்னார்.

நீதிபதி மீண்டும் குழப்பத்தில்.....
கடைசியில் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து தனது தீர்ப்பைக் கூறினார்.  கடந்த 40 வருடங்களாக தந்தை பெரிய மகனின் கவனிப்பில் இருந்து வந்துள்ளார். இப்போது பெரிய மகனுக்கு 80 வயதாகி முதுமை அடைந்துள்ளதாலும், மேலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பு மக்கள் அனைவரின் கடமை என்பதாலும் இனிவரும் காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை இளைய மகனிடம் ஒப்படைக்கிறேன்.

தீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பிய பெரிய மகன்  நீதிபதியைப் பார்த்து, “ நீங்கள் சொர்க்க வாசலில் இருந்து என்னை அகற்றியுள்ளீர்கள்..
என்னுடைய சொர்க்க வழியை நீங்கள் அடைத்து விட்டீர்கள்....”

பெரிய மகனாகிய முதியவர் அழுது புலம்பும் இந்த காட்சியுடன் கூடிய செய்தியை சவுதி செய்தித் தாள்களும் ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன...

இந்த வழக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேறுபட்ட வழக்கு என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு கூற தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நீதிபதி கூறினார்....
இதையும் செய்தித் தாள்கள் வெளியிட்டன.

தாய் தந்தையரை கால்பந்தைப் போல் அங்கும், இங்கும் தட்டி விளையாடுவதும், முதியோர் இல்லங்களில் அநாதைகளைப் போல் கொண்டு தள்ளுவதும் நடக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அபூர்வமான வழக்கு வந்ததை பார்க்கும் போதுதான் இந்த வழக்கு ஏன் இவ்வளவு பிரபலமடைந்தது என்று தெரியும்.

தாய் தந்தையருக்கு சேவை செய்து சுவர்க்கத்தை அடையும் நற்பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆமீன்!!
யா ரப்பில் ஆலமீன்!!!.

Best regards,

Saturday 15 December 2018

மௌனம்

மௌனம்

இந்த வார்த்தைக்கு பல
அர்த்தங்கள் உள்ளன.

கேள்வி கேட்கப்படும்
நேரத்தில் மௌனம் சம்மதம்.

நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது மௌனம் துன்பம்.

இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின் போது மௌனம் நம்பிக்கை.

நம் இதயத்தில் அமர்ந்த
அந்தக் காதலில் மௌனம் சித்ரவதை.

நாம் தோல்வி கண்டு
வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம் பொறுமை.

நாம் வெற்றி கண்டபோது
நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் அடக்கம்.

திருமணக்கோலத்தில்
உள்ள அமைதியின் போது மௌனம் வெட்கம்.

தவறுதலாக தவறு செய்த போது மௌனம் பயம்.

ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் எதிர்பார்ப்பு.

கோபத்தை குறைக்காமல்
அடக்கும் போது மௌனம் ரத்தக்கொதிப்பு.

இலக்கை அடைய நினைத்து
ஒருமுகப்படுத்தும் போது
மௌனம் சக்தி.

தீவிரமாகப் போராடும் போது மௌனம் வலிமை.

பிடிக்காத விஷயங்களை
ஒத்துக்கொள்ளாத போது
மௌனம் எதிர்ப்பு.

கல்யாணவீட்டினில்
கால் இடறி விழுந்தபின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது மௌனம் அவமானம்.

நம்மை விட்டு பிரிந்தவர்களை
பாசத்தோடு நினைக்கும் போது மௌனம் துக்கம்...!

நம் குடி கெடுத்தவர்களை
பழிவாங்க நினைக்கும் போது மௌனம் ஆத்திரம்.

கற்ற வித்தையை கையாளும் போது மௌனம் ஆனந்தம்.

அயர்ந்த வேளையில்
அமைதியான அந்த
மௌனம் உறக்கம்.

உறக்கம் என்று அனைவரும்
நினைத்திருக்க
உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க மௌனம் மரணம்...!

Best regards,

Friday 14 December 2018

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...
1. பதினான்கு ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?
2. ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
3. ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
4. ரூபாய் 25 க்கு அரிசி வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?
6. மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?
ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;
சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதி சகோதரி ஆக முடியும்;
நேரு மாமா ஆக முடியும்
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனால்....
மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது...
இவ்வளவு வெறுப்பு ஏன்?
உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.
உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.
ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.
இன்னமும் "அவன் திருடுகிறான்,
இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்*
உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.
இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*
நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்...
அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை பலப்படுத்தியதில்
*இன்று ஜீரோ மின்வெட்டு.*
60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.
ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு.... ஒவ்வொரு சாமானியனுக்கும்.
தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.
ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.
நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.
விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை. E-commerce மின் வர்த்தகம்.
இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*
காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்... துறை அறிவே இல்லாத பொழுதும் "ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..
உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.
அந்த கோபம் இப்போது மோடி மீது...
மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
இன்னுமொன்று...
அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா போகிறீர்கள்...?
வாக்குச்சீட்டு போலி என்றோ ,
வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்...?
முதலில் பார்வையை *முடிந்தால்* சரி செய்யுங்கள்.
தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.....
உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் " பச்சைத் " தமிழரல்ல இனி இவர்கள்...
என்ன நடந்திருக்கிறது?
எப்படி நடந்திருக்கிறது ?
என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் " மெச்சும் " தமிழர்கள் ...
உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.
"மோடி" *மந்திரி அல்ல.....!*
அவர் ஒரு
*கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்

Best regards,