Sunday 31 January 2021

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!!

2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி வாரான்.. பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!!

3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா இருக்கே'னு சொன்னா.. அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுறாங்க..!!

4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்..ன்னு அமுக்கி வைப்பாங்க..!!

5, ஏதாச்சும் அழுதோம்..ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு'னு சொல்லுவாங்க..!!

6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இறக்கம் இல்லாத அரக்கன்'னு வாருவாங்க..!!

7, பொண்டாடியை கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு எடுக்க தெரியாத.. முட்டாள்'னு பட்டம் கட்டுவாங்க..!!

8, சரி'னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை'ங்கற அதிகாரம்..ன்னு திட்டுறாங்க..!!

9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டு போய் கொடுத்தா.. என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி'னு ஒரு நக்கல்..!!

10, ஒன்னுமே வாங்கிட்டு போகலை'னா.. ஒரு முழம் பூவு'க்கு கூட.. நான் விதியத்து போய்டேனா..ன்னு மூக்கை சிந்திட்டு.. விக்கல் வேற..!!

11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி.. ன்னு ஒரு ஏசல்..!!

12, சரி'ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டு போனா.. அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்'ங்க.. எப்படி உழைச்சி முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களா..? ன்னு.. ஒரு பூசல்..!!

13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்பு தன்மை வந்து.. வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து கொள்ளலாம்'னு முடிவெடுத்தா.. இத பாரு.. வாழ்வதற்கு பயந்து கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பய.. ன்னு சொல்லுவாங்க..!!

14, சரி'ன்னு இது போல.. பூசல்களை கேட்டும் கேக்காமல் தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்.. இவன் ஒரு மானாங்கெட்ட பய.. ன்னு சொல்லுவாங்க..!!

அன்பு நண்பர்களே...
இத பார்த்து நல்லா இருக்கு'னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம் அப்படி'னு சொல்லுவாங்க..!!

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்'னு எழுதினா.. உலகம் தெரியாத பைத்தியகாரன்..ன்னு சொல்லுவாங்க..!! 

பொதுவா ஆண்களுக்கு பிரச்சினை.. இருந்து கொண்டே தான் இருக்கு..!!

Best regards,

மாரடைப்பால் மரணம்

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக
இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/41/43/46
இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்.
தயவு செய்து யாரும் புரோட்டாவும்
முட்டையும் அதிக அளவில் தினமும்
உட்கொள்ள வேண்டாம்... பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு
பாதிப்பு அதிகம்.
திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு/)
தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர் தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.
புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!
புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.
இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.
ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.
புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.
மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். 
ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்ஜையில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம்.
உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.
கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.
இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்...புரோட்டாவும் முட்டையை சேர்த்து சாப்பிட கூடாது. புரோட்டாவை புரந்தள்ளுவோம் 🤝🏼🤝🏼🤝🏼🤝🏼அனைத்து குரூப்பில் பகிரவும் அப்பாவி மக்கள் ஏமாற வேண்டாம்

Best regards,

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

 பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே

Best regards,