Thursday 28 February 2019

மக்களும், கோழியும் 2 ஆயிரம் ரூபாயும்!

ஒரு குட்டி கதை :

மக்களும், கோழியும் 2 ஆயிரம் ரூபாயும்! 👇👇👇

ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து, அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது. துடிதுடித்தது.

முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார். பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,.. மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி... அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.

அப்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறினார், "இதுதான் அரசியல், மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு, கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள்" என்று.

இதைத்தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. பல குளறுபடிகள் செய்து , தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மெரீனா போராட்ட காரர்கள் மீது தாக்குதல்,இப்படி பல வகையில் தமிழக மக்களை வஞ்சித்து தற்போது 2000 ரூபாய் கொடுத்து மக்களை தன்பக்கம் திருப்பி வரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ஆதலால் சிந்திப்போம். 2000 ரூ பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அது மக்கள் பணம். அதே வேளை இப்போது எதற்காக தரப்படுகிறது என புரிந்து தேர்தலை சந்திப்போம்.

மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும்.

Best regards,

Wednesday 27 February 2019

இடம் மாறிப் பார்ப்போம்...

இடம் மாறிப் பார்ப்போம்...

- *இறையன்பு*IAS_

ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.

 ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார்.

நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது.

அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார்.

 அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார்.

தாகூர் தொடர்ந்து எழுதுகிறார்.  "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள்,

எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் ?
என்பது நமக்குத் தெரியாது" என்று.

தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும்,

 கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும்,

 சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ?

 எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.

 நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.

எத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ,

 எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ,

எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ,

 எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனையையும், நுரையீரல் தளர்ச்சியையும், வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ?
யார் கண்டது.

ஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்...

 நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

 அப்படிப்பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம்.

 அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும்,

 நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

 அது எவ்வளவு போலியானது, என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.

கொஞ்சம் இடம்
 மாறிப் பார்ப்போம்
இடம் மாறி யோசிப்போம்...

Best regards,

Sunday 24 February 2019

இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🌷
நம் நாட்டில்  நேற்று, நொய்டா வணிகர்கள் நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல் 150 மில்லியன் சீன பொருட்களின ஆர்டர் ரத்து செய்து விட்டனர். இன்று மாலை கணக்கின்படி
 இந்த  பொருட்களின்  NCR மதிப்பின் படி  சுமார் 1500 கோடி மட்டுமே, ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக் கண்டால், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டதுப் போலத் தெரிகிறது.
அதனால் தான், இன்று சீனாவின் அரசு  சின்ஹூவா பத்திரிகை    நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம் சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
 2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால் 62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து  செய்யப்பட்டால் என்ன ஆகும்?
NSG மற்றும் Masood Azar போன்றவர்களை  வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த  சீனாவை  நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட வைத்திருக்கின்றனர் அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே.... ஒரு வேளை, நாம் அனைவரும்  சீன  பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டால், பின்னர் வியாபாரிகள் அதை விற்க மாட்டார்கள். சீன பொருட்களை புறக்கணித்த எல்லாத்  தொழிலதிபர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இப்போது,
நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதின் விளைவாக, நம் நாட்டின் வலிமை உலகிற்கு உணர்த்தப்படுகிறது, இப்போது தான்  ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பாரதம் காட்சியளிக்கிறது ... உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் இச் செய்தியை அணைத்துக் குழுவிற்கும் அனுப்ப வேண்டும். ஒரு வேளை, நாளை இந்தியா சீனாவால் கைப்பற்றப்பட்டால், அதற்கு நாம்தான் பொறுப்பாளிகளாவோம்.
இந்தியாவில் வர்த்தகம் செய்ததன் மூலம் பிரித்தானியர்களும் நம்மை அடிமைகளாக ஆக்கினர், அப்போது நாம் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தோம். ஆனால் இன்று நன்கு கற்று அறிவுள்ளவர்களாக உள்ளோம்.
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை வளப்படுத்துவோம். நாம் அடுத்த  90 நாட்களுக்கு எந்த ஒரு
வெளிநாட்டு பொருட்களையும்
வாங்கவில்லை என்றால் ...பாரதம்
உலகின் இரண்டாவது மிக
பணக்கார நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின்
2 ரூபாய்  1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.

நாம் எவ்வளவோ ஜோக்ஸ் அனுப்புகிறோம் இந்த செய்தியை அனுப்புங்கள் இது ஒரு இயக்கமாகி விடும். கடந்த ஆண்டு, தீபாவளியின் போது செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை வாங்கவில்லை, இதனால் சீனாவின்  20% பொருட்கள் வீணாகி விட்டது.  சீனா கொதித்துப் போய் விட்டது.
நண்பர்களே !  நம் நாடு மிகப்பெரியது.  இந்த முக்கியமான செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள்..

வாழ்க பாரதம்

Best regards,

Saturday 23 February 2019

கண் கலங்க வைத்த வரிகள்

கண் கலங்க வைத்த வரிகள்

எங்கோ
யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்

இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்


ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்

காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்

இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்

மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்

ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள்  சொல்லி
மார்பில் சாய்ந்தால்

பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்

அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்

ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்

இப்போது
அவள் அருகில் நான்

கத்தினால்
கதறினால்
ஏதேதோ செய்தால்

வலியால்
அவள் துடிப்பதை பார்த்து

என்னால்
தாங்க முடியவில்லை

அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை

ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை

சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது

அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது

பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்

வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதால்

எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பால்
என்று நினைக்கும் போது

நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்

ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்

ஒரு சில
நிமிடங்களில்

குழந்தையை கையில்
கொடுத்தார்கள்

நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்

அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்

மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும்  மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்

இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்

நன்றிகள்
கோடி பெண்களே...

Best regards,

Friday 22 February 2019

அருமையான #பதிவு

அருமையான #பதிவு👌🏽

மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.

'அப்படியா... ஏண்டி?'

'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.

மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.

'என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்... 'எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; நான் தனியா உட்கார்ந்திருக்கணும். உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, 'அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...'
இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர, பதில் என்னமோ மறுப்பு தான்; பதில் என்னவோ அலுப்பு தான்.

முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழஅழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?

வங்கி, தபால் நிலையம்...

'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!' 'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!'

எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும், ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!

பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.

'எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.

அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
'என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...' என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.

'எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்; நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க...' என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?

தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.

இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.

எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

'எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.

'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா...' என வேண்டுபவனே நடைமுறையாளன்.

Most valuable lesson for parents and children

Best regards,

Thursday 21 February 2019

30ஆயிரம் கோடி கடனை வெறும் 5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?

30ஆயிரம் கோடி கடனை வெறும் 5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?

'Alok textiles' எனும் கம்பெனிக்கு
பதினைந்து 'பேங்க்' சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்கிறார்கள்.

30 ஆயிரம் கோடி ரூபா கடனை வாங்கிவிட்டு  கம்பெனிக்காரர்கள்  வட்டியும் கட்டாமல்,
அசலும் கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் செம காண்டான நம்ம 'பேங்க்' ஆட்கள்,
டேய் வாங்கின கடனுக்கு வட்டி கட்டாமல் ஏமாற்றுகிறீர்களே நீங்களெல்லாம் உருப்படுவீங்களடா என்று கேட்டதிற்கு,
தோ! பாருங்க சார் கம்பெனி நட்டமா போய் விட்டது, வட்டியெல்லாம் கட்ட முடியாது, உங்களால முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள்.

ரொம்ப 'டென்சன்' ஆன நம்ம பேங்க்காரங்கள்
நேரா NCLT என்ற தீர்ப்பாயத்திடம் போய் கடன் வாங்கி விட்டு திருப்பி கட்டாமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்களென பிராது கொடுக்கிறார்கள்....

அந்த பிராதை பார்த்து விட்டு 'செம டென்சனான' NCLT, அந்த
கம்பெனிக்காரர்களை கூப்பிட்டு,
யோவ், கடனை கட்ட முடியுமா முடியாதா என்று கேட்கிறார்கள்.
அவர்கள், ஏய் ச்சீ ப்பே கட்ட முடியாது என்று சொல்லி NCLTயையும் அசிங்கப்படுத்துகிறார்கள்.

வேறு வழி இல்லாமல் NCLT யும், அதுதான் இவ்வளவு அடக்கமா நட்டம் ஆகிவிட்டது,
கடன் கட்டமுடியாது என்று சொல்கிறார்களே,
அவர்கள் என்ன வைத்துக் கொண்டா இல்லை என்று  சொல்கிறார்கள்?
நாம் வேண்டுமென்றால்,  இந்த 'கம்பெனியை' திவால்னு அறிவித்து ஏலம் விடலாம்.....
ஏலத்தில் வரும் பணத்தை வைத்து, கடனை கட்டிடலாம் என்று ஒரு 'மாஸ்டர் ப்ளான்' போடுகிறார்கள்.

அதே மாதிரி மறுநாள், ஏலத்தை நடத்துகிறார்கள். அந்த ஏலத்தில், இந்தியாவின் பரம ஏழை அம்பானி அந்த 30 ஆயிரம் கோடி‌ கடனை,
5000 கோடிக்கு வாங்கிக் கொள்கிறேன் என
பெருந்தன்மையாக சொன்னார்.

NCLT ஆபிசர், எல்லா 'பேங்க்' ஆட்களையும் கூப்பிட்டு, என்னப்பா
5000 கோடிக்கு கொடுத்து விடலாமா? எனக் கேட்டு வோட்டெடுப்பு நடத்துகிறார்...

வோட்டுப்பதிவில்,  குறைந்தது 75 சதவீதம் ஆதரவு இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.
ஆனால், கிடைத்தது என்னமோ 72 சதவீத ஆதரவுதான்.
அதானால், அம்பானி வெறும் கையோடு
வீட்டுக்கு போய் விட்டார்.

வீட்டுக்கு போன நமது பரம ஏழை, நாட்டாமை தீர்ப்பை
மாற்றி சொல்லு என்று கத்திக்கொண்டே, நமது ஏழைத்தாயின் மகனுக்கு 'கால்' பண்ணி,
நீதி செத்து விட்டது,
நியாயம் புதைந்து போய் விட்டது என அழுகிறார்.

இதைக் கேட்டு, இரத்தக் கண்ணீர் வடித்த நமது
ஏழைத்தாயின் மகன்,
உடனே அந்த NCLT 'ஆபிசர்க்கு ஃபோன்' பண்ணி, யோவ்!! 75 சதவீத ஆதரவெல்லாம் தேவையில்லை.
66 சதவீதமே போதும் என்று 'ரூல்ஸ' மாற்று என்று
கோபமாக சொல்கிறார்.

மறுநாள் நம்ம பரம ஏழை அம்பானி,
NCLT ஆபிசரிடம் போய்,
அது தான் 66 சதவீதம் என்று மாற்றி விட்டார்களே
கொடுடா கம்பெனியை என்று, 5000 கோடிக்கு அந்தக் 'கம்பெனியை' வாங்கி விட்டார்.

5000 கோடியை பதினைந்து 'பேங்கிற்கும்' சண்டை போடாமல் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்,
25000 கோடி ரூபாயை காந்தி கணக்கில் எழுதுங்களென நம்ம NCLT 'ஆபிசர்' கடையை சாத்தி விடுகிறார்.

இதுலே 'ட்விஸ்ட்' என்னவென்றால்,

30 ஆயிரம் கோடி கடன் வாங்கினவனும்,
(அனில் அம்பானி)
5000 கோடி கொடுத்து அந்த கடனை அடைத்தவனும்
(முகேஷ் அம்பானி)

ஒரு தாய் பிள்ளைகள்....

ஆகமொத்தம் 25000 கோடி மக்கள் பணம்...
கோவிந்தா, கோவிந்தோ.


நாட்டாமை ஏழைத்தாயின் மகன் யார் என்று தெரிகிறதா ??

தெரியாதவர்கள்,  தெரிந்தவர்களைப் பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள்..!!!

தெரிந்தவர்கள் தெரியாத மாதிரி இருந்து கொள்ளுங்கள், அதுதானே பலருக்கும் பழகி விட்டதே!!!

Best regards,

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

அதிலிருந்து சில வரிகள்.(வழிகள்)

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது

முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..
 #நான்படித்தபுத்தகத்தில்

Best regards,

Wednesday 20 February 2019

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை 

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

படித்து விட்டு பகிர்ந்து விட்டால் நலம்.... கடைப்பிடித்தால் மிக்க நலம்...

Best regards,

Tuesday 19 February 2019

தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

#தீர்க்கசுமங்கலிபவா என்றல் என்ன?  -  அறிந்துகொள்வோம்.

🌼 தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼  80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !

#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼  பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு

⚜ சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜ செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
⚜ சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜ புதனுக்கு ஒரு வருடமும்,
⚜ வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜ வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜ சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
⚜ ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
⚜ கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼  ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84  கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி, ⚜சூரியன்,
⚜சந்திரன்,.  ⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜ *நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

Best regards,

Monday 18 February 2019

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து
கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.
இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது
சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய
படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு
பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?
அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த
விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

 இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி I am Really, Really Sorry...

நாம் எவராக இருந்தாலும்
சரி நண்பர்களே,
நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்க்கே
ஒப்பாவோம்.


- படித்து மனம் வருந்தியது.

Best regards,

Sunday 17 February 2019

வா...! வீரனே..!

வா...! வீரனே..!

ரயில் பெட்டியில் உயிரோடு சென்ற நீ....!
மரப்பெட்டியில் உயிர் இன்றி திரும்புகிறாய்.!

பணக்குழியில் படுத்து உறங்கிய ஆட்சியாளன் அல்ல நீ...!

பதுங்கு குழியில் படுத்து உறங்கிய உன் குடும்பத்தின் மீட்சியாளன் நீ...!

உன் மனைவி அப்போது தான் குளித்துவிட்டு, மூஞ்சி நிறைய மஞ்சள்பூசி, நெற்றி நிறைய பொட்டுவைத்தாள்...

வச்ச பொட்டு காய்வதற்குள் குண்டு வெடித்ததாக வந்ததய்யா ஒரு சேதி....

தலையில் வைப்பதற்கு எடுத்த பூவை தரையில் வீசிவிட்டு கதறி அழும் உன் வீட்டுக்காரியின் கதறல் சத்தம் கேட்கின்றதா வீரனே.. கதறல் சத்தம் கேட்கின்றதா....

பள்ளிக்கூடம் போன உன் பிள்ளை பரபரப்பாய் ஓடி வந்தான், வந்தவன் அம்மா... அப்பா எப்ப வருவாரு என நீ செத்ததை அறியாமல் சேதி கேட்கின்றான்...!

வா... வீரனே...!

நீ பார்த்து வளர்த்த மாடும், நீ பார்த்து வளர்ந்த காடும், நீ உழுது பழகிய வயலும், நீ நீச்சல் பழகிய கண்மாயும்,நீ நடந்து பழகிய தெருக்களும், நீ சைக்கிள் ஓட்டிய சாலைகளும், நீ ஏறி விளையாடிய மரமும், உன்னைப் பெற்ற தாயும் தந்தையும், உன் ஊரும் உற்றாரும் காத்திருக்க...!

நாங்களும் உன் வருகைக்காக காத்திருக்கிறோம் வா வீரனே...!

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கு இந்த  சமர்ப்பணம்🙏🏼🇮🇳🙏🏼


Best regards,

Saturday 16 February 2019

கேவலமான ஒப்பீடுகள் ... ஆனால் விசித்திரமான உண்மைகள்!

கேவலமான ஒப்பீடுகள் ... ஆனால் விசித்திரமான உண்மைகள்!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிதம். ஆனால் கல்விக் கடனுக்கான வட்டி 12 சதவிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அமரர் ஊர்தியும் (Ambulance), தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக் கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக் கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக் கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice, Orange juice etc... இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எலுமிச்சையில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரி என்பது இல்லை. ஏனெனில் கோதுமை விளை பொருள் என்பதால். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்..!
             
11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்ட்டாகவும் அமைகிறது..

12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலைவாரி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், நமது வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

14. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்கள், பொருள் கொடுங்கள், உணவு கொடுங்கள், உடை கொடுங்கள்.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 

16. டாக்டரை மறந்துவிட்டு நர்சுகளை ஞாபகம் வைத்து இருக்கும் விசித்திரமான மாய உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20. கடவுளாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பதற்கு  கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக உட்கார்ந்து வாழத்தான் அதிக விவேகம் வேண்டியிருக்கிறது.!               

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலை ஓரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?


Best regards,

Friday 15 February 2019

பாலம் கல்யாணசுந்தரம்

பாலம் கல்யாணசுந்தரம்

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?

# 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

# உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

# தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.

# சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு  நன்றிகூரிவிட்டு திரும்பினார்.

# ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.

# ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.

# வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.

# கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

#  பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.

#  ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.

# பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.

# பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.

#  கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

# பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.

#  தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.

1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. 'தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்' என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.

Best regards,

Thursday 14 February 2019

ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம்

ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம்

எனக்கு 77 வயது!
மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...
அன்பின் நீரூற்ற மறந்த
எத்தனையோ முதியவர்களில்
நானும் ஒருவன்!
இருக்கின்ற நான்கு மகன்களில்
ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்!
இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்!
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது
கடைசி மகனிடம் செல்ல!
இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு
எண்ணிக்கொண்டு இருக்கிறேன்
கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக!
போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள்
வாங்கித்தந்த வெள்ளை வேட்டி
பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது!
முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி
உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது,
இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால்
என்ன சொல்வானோ என்று
பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு
வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு
இருக்கிறேன்!
கடைசி மருமகளிடம் சொல்லி தான்
மாற்றிக்கொள்ள வேண்டும்!
இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்
எல்லோரும் வேலைக்கு போனபின்பு
என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை
துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும்
என்னுடைய துணிகளை தனியாகத்தான்
போடவேண்டும் என்று சொல்லி
அவர்களின் ஆடையோடு கூட
ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள்!
கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட
எதுவும் சொல்வதில்லை,
மருமகளும் சொல்லவிடுவதில்லை!
இன்னும் நான்கு நாட்கள்தானே என்று
ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு
வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்
கடைசி மருமகளின் வீட்டு போக
என்னுடைய உடைகளை நானே
ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன்!
கடைசி மகன் மற்றவர்களை போல்
கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை,
வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும்
இரண்டு மோட்டார் பைக்குகள்
இருக்கிறது!

நான் ஊருக்கு போகும் போதல்லாம்ம மறுமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு
பஸ் ஸ்டேண்டு வருவாள்!
அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு
போவதில் அப்படி என்ன ஆனந்தமோ
எனக்கு தெரியாது

என்னென்ன நடந்தது
என்று அவள் கேட்டுக்கொண்டே போக
நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை
பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும்
சொல்லாமல் நல்லதை மட்டுமே
சொல்லிக்கொண்டு போவேன்!
அவள் கெட்டிக்காரி என்பதால்
போகும் வழியில் எனக்கு பிடித்த
ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து
வேடிக்கை பார்க்கும்போது
கண்டுபிடித்து விடுவாள்!
வீட்டுக்கு போனதும் என்னுடைய
கட்டை பையை ஆராய்ச்சி செய்து
மருந்து மாத்திரைகளாவது சரியாக
வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று
தேடிப்பார்த்து திட்டுவாள்!
அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை
நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து
சிரித்துவிடுவாள்!
இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று
மீனாட்சியிடம் சண்டை போடக்கூட
அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால்
போய் சேர்ந்துவிட்டதில் நிறைய
வருத்தம் எனக்கு!
நான்கு நாட்கள் கழித்து
பஸ்ஸில் போய் இறங்கினேன்,
எப்போதும் போல் எனக்கு முன்வந்து
காத்திருந்தாள்!
ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,
ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார
வைத்துக்கொண்டாள்,
உங்களை ஷேவிங் பண்ண கூட
கூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா
அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா
ஆயிட்டாங்களா எனும்போதே
அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....
என்று ஆரம்பிக்கும்போதே
இப்படியே பேசி பேசி அவங்களை
காப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா
பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு
போவதற்குள் சவரக்கடைக்கு தான்
அழைத்து சென்றாள்!
கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள்,
பெயிலான மார்க் சீட்டை காட்டும்
குழந்தையை போல் தயங்கி தயங்கி
ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை
காட்டினேன்!
கோபத்தை வெளிக்காட்டாமல்
கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள்!
இதுக்கு தான் உங்களை
அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது
புரியுதாப்பா....என்று முறைத்தாள்
என்னிடம் பதிலில்லை!
ஊர் உலகத்துல யாரும் எதுவும்
சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு
கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை
கஷ்டப்படுத்தி அனுப்புறது.. இதே
வேலையா போச்சி எல்லாருக்கும்
என்று முணுமுணுத்துக்கொண்டே
கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள்,
துணியெல்லாம் சுத்தமா
துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க
பொய் சொல்லாம சொல்லுங்க
என்று டீச்சரை போல் முறைக்க
என்ன செய்வது என்று தெரியாமல்
பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,
அவளும் சிரித்துவிட்டாள்!
எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி
பையை நிரப்பிக்கொண்டு
வீட்டுக்கு அழைத்து சென்றாள்!
ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது
லேசா மயக்கமா இருக்கு
சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்
கொஞ்சதூரம் தான்பா போயிடலாம்
பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல
மெதுவாக சாய்ந்துகொண்டேன்!
உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை,
நான் பெறாத மகளின் மீது
சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,
அதனால் தான் பொய்சொல்லி
சாய்ந்துகொண்டேன்!
இன்னும் ஒரு மாதத்திற்கு
அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில்
காணாமல் போகும் என் முதுமையின்
ஊமைக்காயங்கள்!
ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம்...


Best regards,

Wednesday 13 February 2019

இறையன்பு*IAS_

இடம் மாறிப் பார்ப்போம்...

- *இறையன்பு*IAS_

ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.

 ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார்.

நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது.

அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார்.

 அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார்.

தாகூர் தொடர்ந்து எழுதுகிறார்.  "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள்,

எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் ?
என்பது நமக்குத் தெரியாது" என்று.

தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும்,

 கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும்,

 சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ?

 எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.

 நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.

எத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ,

 எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ,

எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ,

 எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனையையும், நுரையீரல் தளர்ச்சியையும், வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ?
யார் கண்டது.

ஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்...

 நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

 அப்படிப்பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம்.

 அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும்,

 நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

 அது எவ்வளவு போலியானது, என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.

கொஞ்சம் இடம்
 மாறிப் பார்ப்போம்
இடம் மாறி யோசிப்போம்...

Best regards,

Monday 11 February 2019

கணவன்_என்றால்...

#கணவன்_என்றால்...
••••••••••••••••••••••••••••••••••••••••••
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...

கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 65 வயது மதிக்கத்தக்க பாட்டி

அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!!

ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?

"ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....

நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....

வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....

இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
.
பெண் என்றால் அடிமையா என்ன..?

கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?

எனக்கே அசதியா இருக்கு.....

இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.

சும்மா கடுப்பேத்திகிட்டு"....

முதியவள் சிறு புன்னகையோடு,

"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!

ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....

ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...

ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....

பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...

நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...

என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...

தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!

இப்ப அவங்க இல்லை,....!

நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!

அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....!

அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...!

whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...!

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!

இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... !

சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், !

வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!..

கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!

விழியோரம் நீர் தேங்க..,

அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!

அதிகமாக போற்றணும்....!!!

கணவனின் வெற்றியோ தோல்வியோ,!

பெருமையோ அவமானமோ...!!!.

லாபமோ...
நட்டமோ...

*மனைவிக்கு அனைத்திலும்..
சம பங்கு உண்டு..*

தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....

வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....!

மிகவு‌ம் வேதனை படுத்தும்.!

எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..

பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....

இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!

பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!.

அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.!
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....

பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...

பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....!

எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"

இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!

சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !.

என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...

நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.!

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே,
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...!

இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...!

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..!

அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...

அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது....
ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"

*வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...?
மனைவியை கணவன் மதிக்கிறானா...???*

இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்...

கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,

ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு

மனைவியும் சொல்றதில்லை...

மனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்..
இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மே...

இதெல்லாம் சொல்லணும்...!!

அப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்.....

வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!!.

அகம் முகம் மலர்ந்த நட்பே..!! குழுவிற்க்கு

வந்த தகவல் பறிமாற்றப்பதிவு...

கணவனோ.... மணைவியோ...

மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால்...

கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... &
மணைவியோ தான்...

சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....

முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..

பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..

பின்னர் மகளோ... மகனோ.... நெருங்கியவர்கள் மட்டுமே...

வந்து போவார்கள்......

இறுதியில் கணவன் மனைவி மட்டுமே...

ஒருவருக்கொருவர்....
துணையாக இருப்பர்..

இறுதியாக ஒன்றுங்க...

நம்முடைய.
உறவு..... நட்பு... குலம்.... சாதி... பங்காளி... பகையாளி... இனம்...சனம்.... பணம்... முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே.....

ஞாபகமிருக்கட்டும்..!!!

கூடிக்கலையும் காக்கா கூட்டமே....

ஆக மனைவி... மகள்...மகன்... & இரத்த உறவுகளே...
நம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பா

Best regards,

Sunday 10 February 2019

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...???

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள்

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.

நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...??....!!!

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்......???

வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிப்பது;

புத்திசாலித்தனம் என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;

அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;

குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும்
தெரிவது;

தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;

பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;

நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;

நல்லவன் என்பது
கஷ்டப்பட்டு
நடிப்பது;

எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;

மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது...!!
பிறப்பது ஒரு முறை , வாழ்த்தட்டும் தலைமுறை 💐💐💐 வாழ்கை வாழ்வதற்கே ... வாழ்வோம் தாழ்வு மனபான்மையின்றி 💐 பிறர் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்க்காமல் , கண்ணாடியில் நம் முகத்தை பார்த்து , நம்மிடம் உள்ள குறைகளை பார்த்து , திருத்தி வாழ்வோம் .💐💐💐


Best regards,

Saturday 9 February 2019

புதிய விதிமுறையில் 100 சேனல்கள் தேர்வு செய்வது எப்படி?

புதிய விதிமுறையில் 100 சேனல்கள் தேர்வு செய்வது எப்படி?

ஏமாறாமல் இருக்க எளிமையான விளக்கம்..

கேபிள் டிவி மற்றும் DTH சந்ததாரர்களுக்கு:

இரண்டு வகையான 100 சேனல்கள் கொண்ட பேக்குகள் இதோ...

1. முதல் வகை:
கட்டண சேனல்கள் இல்லாத 100 சேனல்கள் பேக்:

விலை:
அடிப்படை  கட்டணமான ₹153.40: (₹130 + ₹23.40 (18%gst))

கிடைக்கும் இலவச தமிழ் சேனல்கள் எண்ணிக்கை-35-:

(இந்த 35 சேனல்களை கண்டிப்பாக தேர்வு செய்யுங்கள் அல்லது கேட்டு பெறுங்கள்)

1.கேப்டன்
2.கேப்டன் நியூஸ்
3.காவேரி நியூஸ்
4.ஹிஸ்டரி TV18 தமிழ்
5.இமயம்
6.சித்திரம்
7.இசையருவி
8.முரசு
9.கலைஞர்
10.கலைஞர் செய்திகள்
11.சிரிப்பொலி
12.மக்கள் தொலைக்காட்சி
13.மாலை முரசு
14.மீனாட்சி டிவி
15.MK டிவி
16.மூன் டிவி
17.நியூஸ் பிளஸ்
18.பெப்பர்ஸ்
19.பாலிமர்
20.பாலிமர் நியூஸ்
21.புதிய தலைமுறை
22.சத்தியம் நியூஸ்
23.சங்கரா டிவி
24.SVBC 2(திருப்பதி)
25.தமிழன் டிவி
26.தென்றல் டிவி
27.டென் கிரிக்கெட்
28.ட்யூன்ஸ் 6 மியூசிக்
29.வசந்த் டிவி
30.வின் டிவி
31.சாய் டிவி
32.சஹானா
33.ஏஞ்செல்
34.மாதா
35.நம்பிக்கை

இதனுடன் 25 கட்டாய தூர்தர்சன் சேனல்கள்( பொதிகை தமிழ்,DD ஸ்போர்ட்ஸ் உட்பட)

(குறிப்பு: இந்த 25ஐ வேண்டாம் என்று சொல்ல முடியாது)

மற்றும் உங்கள் விருப்பத்தில் மற்ற 40 சேனல்கள் (தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் இருந்து) நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

₹153.40

மொத்தம் 100 சேனல்கள்.
( 25(DD சேனல்கள்)+ 35(தமிழ் இலவசம்)+ 40(மற்ற இலவச சேனல்களில் உங்கள் விருப்பம்))

***********

2. இரண்டாவது வகை:

தமிழ் கட்டண சேனல்கள் சேர்த்த 100 சேனல்கள் பேக்:

விலை:
 ₹272.86

(₹130 + ₹101.24 (கட்டண சேனல்கள்) + ₹41.62 (18%gst))

நீங்கள் கீழே உள்ளபடி 100 சேனல்களை தேர்வு செய்யுங்கள்..

( 25 கட்டாய DD சேனல்கள் + கீழே உள்ள 37 தமிழ் கட்டணம் + முன்பு சொன்ன 35 தமிழ் இலவசம் + 3 பிற இலவசம் = மொத்தம் 100 சேனல்கள்)

₹272.86

37 தமிழ் கட்டண சேனல்கள்:

சன் டிவி குரூப் ( 7 சேனல்கள்) - ₹40

ஸ்டார் விஜய் குரூப் ( 8 சேனல்கள்) - ₹25

ஜெயா குரூப் ( 4 சேனல்கள்) - ₹10.50

ஜீ குரூப் ( 8 சேனல்கள்) - ₹10

ராஜ் டிவி குரூப் ( 4 சேனல்கள்) - ₹4.89

மெகா டிவி குரூப் ( 3 சேனல்கள்) - ₹3.60

டிஸ்கவரி தமிழ்( 1) - ₹4.00

நியூஸ்18 தமிழ்( 1) - ₹0.25

கலர்ஸ் தமிழ்( 1)- ₹3.00

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

^^ மேலே உள்ள குரூப் கட்டண சேனல்களை குரூப்பாக தேர்வு செய்வதே சிறந்தது. அதில் தனித்தனியாக தேர்வு செய்தால் கட்டணம் இதைவிட அதிகரிக்கும்.

^^ இந்த 100 எண்ணிக்கையில்  தூர்தர்சனின் கட்டாய 25 சேனல்கள் தவிர்த்து மீதம் உள்ள 75 சேனல்களை  உங்கள் விருப்பப்படி எந்த மொழி அல்லது எந்த வகையிலும் கூட்டி குறைக்கலாம்.

^^ஆனால்  மொத்த சேனல்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டினால் நெட்ஒர்க் கப்பாசிட்டி சார்ஜ் + வரி கூடும் என்பதை நினைவில் கொள்க!

*************
நன்றி🙏🏻
விழிப்புணர்வுடன் இருக்க பகிர்வோம்


Best regards,

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்


நாட்டு ⚖ நடப்பு

♨2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் : தமிழ்நாட்டில் மொத்த கருவுறு விகிதம் 1.6 ஆக குறைவு....

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறையும், ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்;

* விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்

* தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு

* மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி

* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

* புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு

* நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி

* நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு

* 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி

* தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு

* 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்

* கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்

* சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்

* உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி


* அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது

* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்

* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்

* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்ேபடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி

* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்

* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு

* ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்

* ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்

* முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

* ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

* ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

* குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்

* சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்

* பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்

* நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்

* ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

* தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு

* வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு

* ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க  ரூ.172 கோடி ஒதுக்கீடு

* வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு

* தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு

* 2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும்

* ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசின் திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது

* நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு

* சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியமர்த்தப்படுவர்

* வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்படும்

* பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,252 கோடி ஒதுக்கீடு

* பால் வளத்துறைக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு

* மீனவளத்துறைக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு

* 20,000 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கே.பரமத்தியில் 282 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்

* பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.235 கோடி ஒதுக்கீடு

* நீர் ஆதார அமைப்புகளின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.811.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் பாசனத்துறைக்கு ரூ.5,984 கோடி ஒதுக்கீடு

* கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் 1.97 லட்சம் வீடுகள் கட்ட பட்ஜெட்டில் ரூ.266.16 கோடி ஒதுக்கீடு

* 1986 கி.மீ. பஞ்சாயத்து சாலைகள் ரூ.1,142 கோடியில் மேம்படுத்தப்படும்

* அண்ணா பல்கலை கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு விரைவில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு

* மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும்.

* காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது

* கிராமப்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்ட 2276.14 கோடி மாநில அரசின் பங்காக ஒதுக்கீடு

* சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது

* ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்

* 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

* ஏழை மக்கள் எளிதில் வாங்கும் வகையில் விரைவில் குடியிருப்பு கொள்கை அறிவிக்கப்படும்

* மாநில நில பயன்பாட்டு கொள்கை விரைவில் உருவாக்கப்படும்

* முதல்கட்டமாக கோவை, மதுரை, மண்டலங்களில் அமல்படுத்தப்படும்

* அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு ரூ.250 கோடி நல்கை தொகை வழங்கப்படும்

* உள்கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* மருத்து காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,363 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாட்டில் மொத்த கருவுறு விகிதம் 1.6 ஆக குறைந்துள்ளது

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு

* அனைவருக்கு கல்வித்திட்டம் இடைநிலை கல்வி இயக்கத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை

* மத்திய அரசு ரூ.3,201 கோடி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் ஓ.பி.எஸ். புகார்

* பல்கலை கழகங்களுக்கு தொகுப்பு நல்கை தொகை வழங்க ரூ.538 கோடி ஒதுக்கீடு

* தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

* மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறைக்கு ரூ.12,564 கோடி ஒதுக்கீடு

* மாணவ, மாணவிகள் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு

* போக்குவரத்துறைக்கு ரூ.1,298 கோடி ஒதுக்கீடு

* 2023-க்குள் சூரிய சக்தி மூலம் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்

* விவசாயிகள் மற்றும் இதர மின் நுகர்வோருக்கு மின்மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு சுகாதாரத்துறை சீரமைப்பு என்ற புதிய திட்டத்திற்கு ரூ.2,686 கோடி ஒதுக்கீடு
Best regards,

Thursday 7 February 2019

ஒரு பெண்ணின் வலி

ஒரு பெண்ணின் வலி

மனதாலும் நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதை💃🏻

அம்மா... வேண்டாம் இந்த ஆறின இட்லி. சூடா எடுத்துட்டு வா'' அப்பா என் ஐ.டி கார்டு தேடிக் கொடு; என் சைக்கிளை துடைச்சு வை...'

மேலே நாம் கேட்டவை கல்லுாரிக்குச் செல்லும் பெண்ணின் வீட்டில் நடக்கும் உரையாடல்.

காட்சி மாறுகிறது. இப்போது அந்த கல்லுாரிப் பெண்ணுக்குத் திருமணமாகி விடுகிறது. மகளைக் காண வரும் பெற்றோர், மகள் அங்கே பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறாள். 'ஏங்க....இன்னொரு இட்லி வைச்சுக்கோங்க...' கணவனிடம் கெஞ்சும் மகள்.. அதற்குள் அத்தையின் குரல். 'இதோ வர்றேன் அத்தை..' பரபரவென ஓடும் மகளைக் கண்டு அதிசயிக்கின்றனர் பெற்றோர்.

பசி சற்றும் பொறுக்காத அந்த செல்லப் பெண், புகுந்த வீட்டில் காலை நேரத்து உணவை உண்ணவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

ஆத்மாவின் குரல்:

ஆம்... அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகள் தான், புகுந்த வீட்டின் பம்பரங்கள். இறக்கைகள் மட்டுமே இல்லை இந்த தேவதைகளுக்கு. வேரோடு பிடுங்கிய செடி வேறோர் இடத்தில் நடப்படும் போது அந்த சூழலையும் கிரகித்துக் கொள்கிறது. புதிய சூழலை அங்கீகரித்தும், சுவீகரித்தும் கொள்கிறார்கள். ஆனால் அங்கே அவளுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதே இல்லை பெரும்பாலும்.

மனைவி என்ற ஆத்மாவின் குரல் யாருக்கும் கேட்பதில்லை. பின் துாங்கி முன் எழும் பத்தினியாகவே பழக்கப்படுத்தி விட்டது சமுதாயம். 'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதை தவற விட்டால் துாக்கமில்லை மகளே' என்ற கவிஞனின் கானம் காற்றில் மெல்லத் தேய்கிறது. தனக்கென எதையும் யோசிப்பதில்லை மனைவி என்ற பாத்திரம். அம்மா வீட்டில் கதாநாயகி வேடம் தான் எப்போதும்.

கணவன் வீட்டில் குண சித்திர வேடம். மனைவிக்கு என்ன செய்து விட்டோம். இது ஆண்கள் அனைவருக்குமான கேள்விகள். இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள், மனைவியை நேசிப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? பிடித்த நிறம் எது?பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்கெல்லாம் பெரும் பாலும் விடை தெரியாது என்பது தான் உண்மை. சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகள் கொடுத்தால் கூட சொல்ல முடியாது என்பதே கூடுதல் சோகம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினமாய் இருந்தால் கேள்விகளைக் கேட்பவர்களாக இருங்கள். சாப்பிட்டியாமா? உடம்பு சரியில்லையா?ஏன் முகம் வாடியிருக்கு? உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

மனைவியின் மன வலிகள் எல்லாம் மறைந்து மட்டுமல்ல; மறந்து கூட போய் விடும். உடல் வலிகள்,மன வலிகளைத் தீர்க்கும் இடமாக புகுந்த வீடும் இருக்கட்டுமே.

நீக்கமற நிறைந்திருப்பவள்:

'என் மனைவி வீட்டுக்குச் செல்வதில்லை நான்...' பெருமித தொனியில் சொன்ன அந்த மனிதரின், உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார் அவர்மனைவி. உங்கள் வீட்டில் ரிமோட் யாரிடம் இருக்கும்?இது 'டிவி' ஒளிபரப்பில் கேட்கப்பட்ட கேள்வி...'அதுவா கணவர் கிட்ட இருக்கும். அவர் இல்லாதப்ப என் மகன் கிட்ட இருக்கும்..' வெள்ளந்தி தனமாய் பதில் வருகிறது அந்தப்பெண்ணிடம். உடல் சார்ந்த பார்வையை விடுத்து மனம் சார்ந்த பார்வையில் பெண்களை நோக்கும் போது மட்டுமே பெண் என்பவளின் பெருமை புரியும்.

ஒரே ஒரு நாள் ஊருக்குச் சென்று விட்ட மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை. வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவள் மனைவி.அதனால் தான் ஔவைப் பாட்டி

'தாயோடு அறுசுவை போம்தந்தையோடு கல்வி போம்சேயோடு தான் பெற்ற செல்வம் போம்மாய வாழ்வு உற்றாருடன் போம்உடன் பிறப்பால் தோள் வலி போம்பொற் தாலியோடு எவையும் போம்'என்று பாடியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணை போன பின்னால் சகலமும் போய் விடுவதாக குறிப்பிட்டு இருப்பார். சமீபத்திய சர்வே ஒன்று கூட இதைத் தான் கூறுகிறது.யாதுமாகி நிற்பவள்மனைவி இழப்பிற்குப் பின்னாலான கணவனின் வாழ்நாள் இருப்புகள் குறைந்து விடுகிறதாம். காரணம் என்ன தெரியுமா? எல்லாமுமாகிப் போனவள் ஏதுமற்று போய் விடுவதால் தான்.

'நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்பது உண்மை தானே?அதிகாலையில் இருந்து அரக்க பரக்க வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகள் பற்றி யாரேனும் கேட்டால் அவ வீட்டில் சும்மா தான் இருக்கா என்று வாய் கூசாமல் சொல்லமுடிகிறது பிறரிடம். உலகிலே அதிக சம்பளம் தரக்கூடிய பணி எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மாவின் பணி தான். அதற்கு ஈடு இணையே இல்லை என்பதான பதிலே மானுஷியை உலக அழகியாக ஆக்கியது. மனைவியே தாயாக,மனைவியே தோழியாக,ஆண்களின் கோபங்களின் வடி காலாக என யாதுமாகி நிற்கிறாள்.

அம்மாவிடம் கூட கணவனை விட்டுத் தர முடியாது அவளால் ஒரு போதும்! 'குழம்பு நல்லா இல்லை...இத மனுசன் சாப்பிடுவானா' என்று எரிந்து விழும் கணவனைப் பற்றி கூறிய பக்கத்து வீட்டு பெண்மணியிடம், 'குழம்பு நல்லா இருக்கிறப்ப என்ன சொல்வார் உங்க கணவர்' என்ற என் கேள்விக்கு 'அது அவர் ஒண்ணும் சொல்லாம சாப்பிடறத வைச்சு கண்டு பிடிச்சுக்கலாம்' என்ற பதிலில் மவுனமானது மனது.

'அவர் சொன்னா சரியா இருக்கும்' என்ற நம்பிக்கை வார்த்தைகள், 'அவள் சொன்னா சரியாகத் தான் இருக்கும்' என்று அந்தப் பக்கமும் இடம் பெயர்வது எப்போது? தன் துன்பத்திற்கான தீர்வைத் தரும் மனிதர்களாக கணவரை எதிர் பார்ப்பதில்லை. அப்படியாம்மா..என்று கேட்கும் கணவர்களாக இருந்தால் கூட போதும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

புதைந்த தனித்திறமை:

பள்ளிப் பருவத்தில் பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிய பெண்கள், பேச்சு, ஓவியம் என சிறந்து விளங்கிய தோழிகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் தனித் திறன்களை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள். இந்த சமூகம் கூட அப்படித் தான் பெண்ணை வடிவமைக்கிறது. கணவனுக்கு நன்றாக சமைத்துப் போடத் தெரிந்திருத்தலே மிகச்சிறந்த இல்லத்தரசி என்றே பழக்கப் படுத்தி விட்டது. கல்லுாரி படிக்கும் போது பட்டி மன்றம் பேசும் அக்காவை,ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. அறிவாற்றலும், அழகும் நிறைந்த அவளிடம் இப்பவும் 'பேச போவீங்களாக்கா' என்றதற்கு அவள் ரகசிய குரலில் 'அவருக்கு இதெல்லாம் பிடிக்காது..வீட்டில கூட மெதுவா தான் பேசுவேன்' என்றதும்.. மனம் கனத்துப் போனது. இந்த தேவதைகளின் கனவுகளுக்கான முடிவு காலம் பிறந்த வீட்டிலேயே முடிந்து போனதா? விதி விலக்கான ஆண்களும் இருக்கிறார்கள் என்றாலும் விதிகளோடே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்

தானே? பண்டிகை காலங்களில் புதுத் துணி உடுத்தி, பண்டிகை கொண்டாடும் பெண்களை எப்போது காண்பது? 'சமைக்கவே சரியாப் போயிடும்...எங்க புதுசு கட்ட' என்ற அந்தப் பெண்ணின் குரல் தானே கேட்கிறது. இந்நிலை எல்லாம் மாற வேண்டும்.அன்பு, நம்பிக்கை, காதல் என இழைத்துக் கட்டப்பட்ட குடும்ப பந்தத்தினை மகிழ்வாக்க மனைவியின் வலுவான கரம் தேவை.ஆதலினால் காதல் செய்வீர் உங்கள் மனைவியை. நேசிக்கப்படுதல் மட்டுமல்ல நேசித்தலுமே வாழ்வை மேலும் அழகாக்கும். பல வித கனவுகளுடன் வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தேவதைகளை அன்புக் கரங்களால் வலுவூட்டம் கொடுங்கள். நம்பிக்கை கொடுக்கவும், நம்பி கை கொடுக்கவும் கணவனின் கரங்கள் இருக்கட்டும்.

மனதாலும், நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதைகளைக் கொண்டாடுவோம். நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது உலகு.

Best regards,

Tuesday 5 February 2019

நீ ஆசிரியனாய் 9 அம்ச பணிகளை மட்டும் செய்

நீ ஆசிரியனாய் 9 அம்ச பணிகளை மட்டும் செய்

1. காலையில் பள்ளிக்கு சரியாக செல்

2. அட்டெண்டன்ஸ் சரியாக போடு

3. செல் பயன்படுத்தாதே விதிகளில் இடமில்லை

4. உன் காசில் வாங்கிய செல்லிலிருந்து உன் டேட்டா விலிருந்து அட்டடெண்ஸ் போடதே அதற்கு அரசு இண்டர்நெட் வசதி கொடுத்தால் மட்டும் செய்யுங்கள்

5. அரசியல்வாதிகளை வைத்து எந்த விழாவையும் நடத்தாதீர்கள்

6. பள்ளியை தரம் உயர்த்துகிறேன் என்று எக்காரணத்தை முன்னிட்டும் செலவு செய்யாதே அரசுக்கே நிதிநிலை சரியில்லாத போது நீ எம்மாத்திரம்

7. புயல் , வெள்ளம், மழை நிவாரண நிதி வழங்காதே அதை அரசு பார்த்து கொள்ளும் உன் ஆசிரியர் வேலையை மட்டும் பார்

8. வருங்கால இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு இல்லை என கோஷம் போடாதே அதை உன்னைப் பற்றி கவலைப்படாத பொது ஜனம் பார்த்துக் கொள்ளும்

9. விருதுகளுக்காக வாழதே ஏனென்றால் அது விலைக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரியும் . அதற்காக கூட பணிபுரிபவனை அடகு வைக்காதே

ஆசிரியராக மட்டுமே இரு போதும் உனக்கும் குடும்பம் இருக்கிறது

Best regards,

Monday 4 February 2019

அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? The Hindu தலையங்கம்

 நன்றி தி இந்து நாளிதழ்/
அனைத்து ஊடகமும் இப்படி நடுநிலையாக மாறுங்கள்.

அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? - The Hindu தலையங்கம்

அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.

அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும், திட்டமிடுதலும், நிதி ஒதுக்குதலும் மட்டுமே அரசின் உயர்மட்டத்தில் நடைபெறுகின்றன. அமல்படுத்தும் முழுச் சுமையும் ஊழியர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. உதாரணமாக, சுகாதாரத் துறையில் பல்வேறு அடுக்குகள் இருந்தபோதும், இறுதியாக ஒரு பகுதியைச் சுகாதாரமாக வைத்திருப்பது அங்குள்ள குப்பைகளையும், சாக்கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களே. அந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கண்காணித்தல் என்கிற எந்த அடுக்கினாலும் பலன் இல்லை.

ஊழியர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேவையின்றி இருப்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கும் ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே அந்த நாடு மேம்பட்ட சேவையை வழங்குகிறதா என்பதற்கான அளவுகோல். 2011-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1,622.8 அரசு ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7,681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். மத்திய அரசுப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 24.63 லட்சம் பேர். மாநில அரசு ஊழியர்கள் 72.18 லட்சம் பேர். இந்த எண்ணிக்கையில் ரயில்வேயில் பணிபுரியும் 14 லட்சம் பேரும் அடங்குவர். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.
சமூக மாற்றத்தில் அரசின் சேவையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திறன் மிக முக்கியமானது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நாடுகள் அல்லது மாநிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால், அவற்றின் ஊழியர் விகிதம் அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ 8 கோடி. தமிழகத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். அதாவது, ஒரு லட்சம் பேருக்கு வெறும் 1,500 ஊழியர்கள் மட்டும்தான்.

நேரடியாக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானால் மாநிலங்களின் வளர்ச்சி, மனிதவளக் குறியீடு இவை உயர்ந்துவிடும் என்பதல்ல இதன் பொருள். அதேசமயம், இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அரசின் அறிக்கைகள் பல நேரங்களில் மக்களைத் தூண்டும் வகையிலும், படித்தவர்களைக்கூடத் திசைதிருப்பும் வகையிலும் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, போராட்டங்கள் நடைபெறும்போது கொடுக்கப்படும் புள்ளிவிவரங்கள், போராடுபவர்களுக்கு எதிரான பகையையும், வன்மத்தையும் உருவாக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்படுகின்றன.

பொய்ப் பிரச்சாரம்

தமிழ்நாடு அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் 71% ஊழியர்களின் சம்பளத்துக்கே கொடுக்கப்படுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. உண்மையில், இந்தத் தொகை 50%-க்கும் குறைவாகும். 7-வது ஊதியக் குழு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-மாவது இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதியன்று அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வர் பழனிசாமி புதிய சம்பள விகிதத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.77,000-லிருந்து ரூ.2,25,000ஆகவும் உயரும் என்றும் அறிவித்தார்.

அதாவது, உயரதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத ஊதிய உயர்வு, கீழ்நிலையில் உள்ள 15.4 பேரின் உயர்வுக்குச் சமமாகும். அதேபோல கீழ்நிலையில் உள்ள ஒருவரின் மாதச் சம்பளத்தைப் போல, மேல்நிலையில் உள்ள ஒருவருக்குக் கிடைத்த மாத உயர்வு மட்டும் 9.42 மடங்காகும். இந்த ஒரு உதாரணம் மட்டும் ஒட்டுமொத்த நிலைமையை உணர்த்துவதாக இருக்கும். ஆரம்ப நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும் 1:14.33 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுதான் ஒட்டுமொத்தமான சம்பள விகிதம் மிக அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதைப் பயன்படுத்தியே அதிகாரப் பணி நிலையில் உச்சத்தில் இருப்பவர்கள், கீழ்மட்டத்தில் இருப்பவரது நியாயமான கோரிக்கைகளை மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அந்தச் சம்பள உயர்வில் குறிப்பிட்ட பகுதியை மறுப்பது ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும்போது ஜெயலலிதா தொடங்கியது. இதைத்தான் வழக்கம் என்று சொல்லி அமைச்சர் ஜெயக்குமார் நியாயப்படுத்துகிறார். ஊதிய உயர்வு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுவாக அறிவித்துவிட்டு, பல மாதங்கள் அந்த உயர்வுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றமாகும். ஆரம்பத்தில் தனியார் முதலாளிகள் செய்த இத்தகைய நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அரசுகள் இப்போது தாங்களும் அதே காரியத்தைச் செய்வது கொடுமையானது.

மறுக்கப்படும் நிலுவைகள்

கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்போது 12 மாதங்கள் அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையைத் தர மறுத்த அரசாங்கம், அதே நடைமுறையை இந்த முறை 21 மாதங்களுக்கு நீட்டித்து நியாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் இந்த 33 மாத நிலுவைத் தொகையையும் பெற்றுவிட்டார்கள். தனியார் நிறுவனங்கள் போதுமான சம்பளம் தரவில்லை என்பதைத் தட்டிக்கேட்டுச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கம், அவர்கள் குறைவாகக் கொடுக்கிறார்கள், நாங்கள் அதிகமாகத் தருகிறோம் என்ற வாதத்தை முன்வைக்கிறது. போராடும் ஊழியர்களுக்கு எதிராகப் பொதுமக்களையும், இதர வேலை தேடும் பிரிவினரையும் தூண்டிவிடுகிறார்கள்.

இப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், இதற்கு முழுக் காரணம் அரசு மட்டும்தான். உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களோடு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். மாநில அரசின் இன்றைய நிதிநிலைக்குக் காரணம் மத்திய அரசு வரிவருவாயைப் பெரும் பகுதி அள்ளிக்கொண்டு போனதுதான். அதைக் கேட்பதற்கும், பெறுவதற்கும் செய்யாமல், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

Best regards,

Sunday 3 February 2019

தப்பு கணக்கு போடாதீங்க

தப்பு கணக்கு போடாதீங்க

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

நான் பொறுமையாக காத்திருந்தேன்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

Best regards,