Friday 24 January 2020

INCOME TAX 2019-2020

INCOME TEX 2019-2020

அனைவரும்  நினைவில் கொள்ள வேண்டியவை
இந்த ஆண்டு முதல்
Rs.5lakhs வரை(Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால்
உங்களுக்கு Nil tax(means tax is zero)
Section 87a இல்
 Rs.12,500 rebate தரப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால்
சென்ற ஆண்டு மீதமுள்ள
.Rs10000(12,500--2500)நாம் income tax ஆக கொடுத்து இருப்போம்.
For example
1)இந்த ஆண்டு தனி நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000)
Minus Standard deduction =₹50,000
Minus minimumNps or GpF
Deduction=₹24,000(12×
2000)
Total deduction=₹74,000
Tax payable income
₹5,64,000--74,000=
₹4,90,000 less than or equal to 5lakhs
So tax - nil
2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000
ஆக ஆண்டு வருமானம்
₹8,40,000
Minus standard deduction ₹50,000
Minus Maximum Home loan interest=₹2lakhs
Under section 24
Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand under section 80C+80CCD(1)
NPS 80CCD(1B)=₹50,000(for only NPS EMPLOYEES)
ஒருவேளை NPS பிடித்தம் ₹80,000ஆக இருந்தால் ₹50,000 under sec 80ccd(1b)யிலும் மீதமுள்ள₹ 30,000under sec 80ccd(1)யிலும் 1lakh 50 thousand savings இல் சேரும்.
ஆக மொத்தம்
【50thousand+2lakh+
1lakh 50 thousand+50thousand】
4lakh 50 thousand
Tax payable income
₹8,40,000--₹4,50,000
=₹3,90,000 is less than or equal to 5 lakhs
Tax-zero
3,ஒருவரின் மாத  வருமானம்₹60,000
ஆண்டு வருமானம்
₹7,20,000
Minus standard deduction =₹50,000
Minus under NPS=₹40,000
 Minus savings=₹40,000
Total is ₹1,30,000
Tax payable income
₹7,20,000--₹1,30,000
=₹5,90,000 is more than 5 lakhs
Tax must be paid to the government
Up to 5 lakhs=₹12,500
5lakh to 5lakh 90 thousand=₹18,000
Total=₹30,500
Cess4%on 30500=₹1220
ஆக மொத்தம்=₹31,720
Net payable tex=₹31,720
4,tax payable income ₹5,00,001*(5 இலட்சத்தை விட ₹1 கூட வந்தாலும்)*
உங்களுடைய
Payable tax=₹12,500
Cess 4%=₹500
Net payable tax=₹13,000
எனவே அனைவரும் இந்த 5 lakhs வரை tax இல்லை என்பதை சாதுர்யமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்

2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.
[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

✍ நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.

✍ housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍ மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍ housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

✍ housing loan - அசல் தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.

✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

✍ School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍ LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]

✍ மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

✍ கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 ✍ நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.
 Ji
✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%

✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

✍ Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.Best regards,

Thursday 23 January 2020

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

முதல் மாமனிதர் :

150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”. அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”. இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்” என்றார். அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.

இரண்டாம் மாமனிதர் :

 ஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால்  அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை  “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்”  என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”. சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் “மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.

நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”. இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.

மூன்றாம் மாமனிதர்:

 ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் “ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா “நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்” என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். அந்த சிறுவன் தான் 1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.

உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் - நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.

புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர் என்னும் ஞானமாய் மலர்ந்தது. ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம் என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.

இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.

ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் “7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அறை டிக்கெட்”. அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார் உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார் “உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அறை டிக்கெட் கொடுத்திருப்பேன்”. அதற்கு அந்த தந்தை கூறினார் “நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு தெரியும்”.

நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா.

உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.

நன்றி!Best regards,

Tuesday 14 January 2020

*வெண் பெங்கல் & வடை*

*வெண் பெங்கல் & வடை*
*தேவையான பொருட்கள்:*
பச்சரிசி – 3/4 உழக்கு
பாசிப்பருப்பு – 1/4 உழக்கு
நெய் -75 மிலி
வறுத்த முந்திரி-15
மிளகு-20
இஞ்சி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிது
பெருங்காயத்தூள்-சிறிதளவு
தண்ணீர்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பையும்,அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்குகலையவும். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி,சிறிதளவு சீரகம்,ஐந்தாறு மிளகுடன் ,அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
1 பங்கு அரிசி பருப்பு கலவைக்கு 4 பங்கு தண்ணீர் வைக்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை குறைக்கவும்.[இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும்]10 நிமிடத்தில் இறக்கி விடலாம்.
அடுத்து இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து,நெய் ஊற்றி,சிறிது கடுகு போட்டு பொறிந்ததும்,தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,சிறிதளவு பெருங்காயம்,கறிவேப்பிலை,வறுத்த முந்திரி,பொடித்த மிளகு போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வெண் பொங்கல் தயார்
வெள்ளை உளுந்து – 3/4 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிகை
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – பொறிக்க
செய்முறை
உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, குளிர்ந்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்.
அரைக்கும் பொழுது, அருகிலே நின்று, ஓரங்களை வழித்து விடுதல் வேண்டும். வழு வழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைக்கவும். வடை மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும்.
எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 3-4 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம்.
பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்Best regards,

*பால் சர்க்கரை பொங்கல்*

*பால் சர்க்கரை பொங்கல்*
*தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 1 கப்
பால் - 4 கப்
தண்ணீர் - 4 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
செய்முறை :
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும். அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி வெந்து நன்கு குழையும் வரை வேக விடவும்.
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, கொள்ளவும்.
அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை கரைசலை ஊற்றி தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போடவும்.
சூப்பரான பால் சர்க்கரை பொங்கல் ரெடி.Best regards,

பழைய பொருட்களை கொளுத்தி சூற்றுசூழலை மாசு படுத்துவது #போகி அல்ல..

பழைய பொருட்களை கொளுத்தி சூற்றுசூழலை மாசு படுத்துவது #போகி அல்ல..

நமக்கு வந்திருக்கிற
#துன்பம் போ(க்)கி, #துயர் போ(க்)கி,#கஷ்டம் போ(க்)கி, #அல்லல் போ(க்)கி, #நோய் போ(க்)கி, #மனத்தாங்கல் போ(க்)கி, #வறுமை போ(க்)கி, #பசி போ(க்)கி, #பஞ்சம் போ(க்)கி, #வறட்சி போ(க்)கி, #பொறாமை போ(க்)கி,#வஞ்சம் போ(க்)கி, #அறியாமை போ(க்)கி,#இல்லாமை போ(க்)கி, #மாயை போ(க்)கி, #ஏழ்மை போ(க்)கி, #பயம் போ(க்)கி, #கல்லாமை போ(க்)கி, #இருள் போ(க்)கி

 #பழையன #கழிதலும் #புதியன #புகுதலுமே #போகி

 எனவே  தை 1 முதல்  #பொங்கல் பொங்குவதை போல அனைவரது வாழ்வில் எல்லா வளமும் நலமும்  (பொங்கி)பெற்று பல்லாண்டு பலநூறாண்டு வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்., தமிழனின் இனிய போகி&பொங்கல்  நல்வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...

---------------------------------------------
பழைய சுமைகளை தலை மீது நாம் சுமக்கிறோம். நேற்று நடந்து முடிந்த வி‌ஷயங்கள் கூட இன்று நமக்குள் நடந்து கொண்டே இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் கூட இன்று நம்மை பாதிக்கின்றன. இந்தச் சுமைகள் நம் மீது பெரியபாரமாகி நம் உயிரை வாட்டுகின்றன. இந்தச் சுமையுடன் நம்மால் பொங்கிப்பெருக முடியாது. இதனால் தான், பொங்கலின் முதலாவது நாள் போகித் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

போகி என்றால் நமக்குள் அடைந்திருக்கும் தேவையில்லாத சுமைகளை போக்குவது. நம் வீட்டுக்குள் சேர்ந்திருக்கின்ற பழையவை மட்டுமல்ல, அவற்றை எரித்தால் மட்டும் போதாது. நமக்குள் முடங்கியிருக்கும் தேவையில்லாத வி‌ஷயங்களையும் இந்த தினத்தில் நாம் எரித்திட வேண்டும்.

Best regards,

Monday 13 January 2020

பொங்கல் பண்டிகையின் வரலாறு

பொங்கல் பண்டிகையின் வரலாறு
பொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகைகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, இது தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 காலகட்டத்தில் கொண்ட துவங்கப்பட்டது. பொங்கல் என்பது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகை என கூறப்பட்டாலும், இந்த பண்டிகை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றி பார்க்கலாம்.
#பொங்கல் வரலாறு
சங்க காலத்தின் போது கொண்டாடிய சில கொண்டாட்டங்களே, இன்றைய பொங்கலாக நாம் கொண்டாடி வருகிறோம். சங்ககால கொண்டாட்டத்தில், தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரத முறையை பின்பற்றினர். பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இருந்தது. தமிழ் மாதமான மார்கழியின் போது இதை கொண்டாடினார்கள். நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டும் என பெண்கள் வேண்டுதல்கள் வைப்பார்களாம்.
இந்த மாதத்தில் பால் பொருட்களை தவிர்த்து, தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து, மண்ணால் செய்த விநாயகரை வணங்குவார்களாம். தை மாதத்தின் முதல் நாள் வரை அவர்களின் விரதத்தை தொடர்வார்கள். இந்த வழக்கமே தற்போது பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
#திருப்பாவை மற்றும் திருவெம்பாவை
தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையின் போது குலோத்துங்கன் என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலைத்தை பரிசாக அளிப்பார் என்பதை திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#புராணக்கதைகள்
பொங்கல் பண்டிகையுடன் சில புராணக்கதைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது.
#சிவபெருமானின் சாபம்
புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்ணவும் மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு.
#கிருஷ்ணர்
இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்து வந்த இந்திர தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர தேவனை வணங்க வேண்டாம் என கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திர தேவன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார் இந்திர பகவான்.
#பொங்கல் கொண்டாட்டங்கள்
இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் உருக்கமான அறுவடை திருவிழாவாகும். பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.
#நான்கு நாள் பண்டிகை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும்.Best regards,

Monday 6 January 2020

நிஜம்❗நிஜம்❗

நிஜம்❗நிஜம்❗

சிட்டிசன் திரைப்படத்தில் வருகிற அத்திப்பட்டி கிராமம் போல இதோ ஒரு உண்மையான சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா,
 வத்தலக்குண்டு அருகே உள்ளது
""எழுவணம்பட்டி""எனும் கிராமம்.

ஊரையே அடிச்சு உலையில போட்டதற்கு உதாரணமாகி ரணமாகிப் போனது இந்த ஊர்

ஊர் குடிக்கும் தண்ணீரில் வேர்பிடித்தது விஷம்.

என்ன நடக்கிறது அங்கே❓

 இந்த கிராமத்தில் தான் 5 வருடமாக  விவசாய குடிநீர் கெமிக்கலாக முற்றிலும் மாறிவிட்டது.

 நெல், கரும்பு கடலைப்பயறு, தென்னை, வாழை, என அனைத்தும் விளையாமல் நாசக்கேடு ஆகிவிட்து, இதற்கு காரணம் திருப்பூரில் அடியோடு அடித்து விரட்டப்பட்ட சரவணா கெமிக்கல் ஆலை(Ssm fine yarns).

 கடந்த 2004ஆம் ஆண்டு ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடத்தில் ஒரு நாள் இலவச வைத்தியம் எனக்கூறி  அப்பாவி மக்களிடம் கையெழுத்து வாங்கினார்கள், அதை டெல்லி ISOவில்                 இப்பகுதி ஏற்கனவே மாசு குடிநீர் வறண்ட பூமி, என ஒப்புக் கொண்டதாக பதிந்து  முதல் முதலாக 450 ஏக்கர் பரப்பளவு நிலத்தை அப்பாவி விவசாயிகளிடம் சொர்ப்ப விலைக்கு அடித்து பிடுங்கி சுற்றி மாங்கன்று நட்டு அதன் மறைவில் சாயப்பட்டறை ஆரம்பித்தனர்.
 இதில் உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை, நாட்கள் கடந்தன விவசாயம் முற்றும் பாதித்தது,       
கருவுற்ற பெண்களுக்கு குறைப் பிரசவம் , குழந்தைகள் மூளை வளர்ச்சி மனக்கோளாறு உடல் ஊனத்துடன் பிறந்தனர், பின்பு மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  தண்ணீரை ஆராய்ந்தனர், 97சதவிகிதம் கெட்டுப்போனதாக கூறி இதற்கு தீர்வாக சென்னை உச்ச நீதிமன்றத்தில் 3வருடமாக வழக்கு நடந்தது இதில் ஆலைக்கு சாதகமாக பிரபல வழக்கறிஞர் பெட்டிகளை வாங்கிக்கொண்டு வாதாடினார்,, இதன் மூலம் சென்ற மாதம் தீர்ப்பானது அதில் ஊர் மக்கள் ஏற்கனவே வறண்ட பூமி என ஆதரம் கொடுத்துள்ளதாகவும்    மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு வைத்து ISO ஆதாரம் கொடுத்ததால் ஆலையை மூட முடியாது எனவும் , விவசாயிகளுக்கு தண்ணீர் பிற்காலத்தில் மாறுபடும் எனவே நஷ்ட ஈடு எதும் தர தேவை இல்லை என உத்தரவிட்டது,,, சாதாரண விவசாய மக்கள் முன்னால் பணமே வெற்றியானது மாடுகள் ஆடுகள் தோட்ட  தண்ணீரை குடிப்பதில்லை,  எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள்  எங்களால் வாழ்க்கை  நடத்த முடியவில்லை. மாவட்ட அதிகரிகளும் கை விட்டனர்.

 ஏற்கனவே விவசாயிகளின் வயித்தெறிச்சலில்  Ssm fine yarns MD கிருஷ்ணசாமிகவுண்டர் கக்கூஸில் வழுக்கிவிட்டு இறந்துவிட்டார் இனி CE திண்டுக்கல் சாலையில் எப்போது இறப்பார் என்று தெரியாது. அதற்குள் ஆலைக்கு சீல் வைக்க வேண்டும், விவசாயத்தை அழிப்பவனை எவனையும் விடக்கூடாது எங்களுக்கு உங்களை விட்டால் வேறு வழி தெரியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை. எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர். மீதம் உள்ள மக்களை காப்பாற்ற உங்களை நாடி உள்ளோம் ..plz நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஷேர் மட்டுமே எல்லாருக்குமே தெரியும் இந்திய சட்டத்திட்டத்தின் படி whatsapp ல் 1,50,00,00 பேரால் ஒரு பதிவு ஷேர் செய்ய பட்டால்  போதும் மத்திய உளவு துறையில் ஒரு கவனத்தை திசை திருப்பும் அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் விவசாயதண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு நன்மையே இவை அனைத்திற்கும் நீங்கள் செய்ய வேண்டியது  ஒவ்வொருவரும் 3 பேருக்காவது share செய்வது மட்டுமே!!!

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி,
கண்டிப்பாக முடியும் உங்களால் எங்கள் தலை எழுத்தை மாற்ற plz🙏🏽🙏🏽🙏🏽

கடைசியில் தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

எதை எதையோ share செய்யும் நாம்

தமிழகத்தின் நன்மைக்காக ஒரு ஷேர் plz

தயவு செய்து share செய்யவும்...plz
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 இப்படிக்கு,
எழுவணம்பட்டி,
கோட்டார்பட்டி,
பொதுமக்கள், விவசாயிகள்.Best regards,

Friday 3 January 2020

அறிமுகம் இல்லாத பெண்ணின் கற்பையும் மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன்..

அறிமுகம் இல்லாத பெண்ணின் கற்பையும் மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன்..

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்வு காட்சி ஊடக வெளிச்சத்தையும் பெறவில்லை.
அதனால், அரசியல்வாதிகளின் கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. ஒரு சாமானிய, அடித்தட்டு கிராமத்து இளைஞனின் பொறுப்புணர்வும், கடமையுணர்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த இளைஞரின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் அவரின் மறைவு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதுபோல, சரித்திரமாகப் போற்றப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் நரசிங்கபுரம் செல்வதற்கு சாலையில் காத்திருந்தார்.

அந்த வழியாக ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். ஏனைய பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார்.
அந்த  வாகனம் நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக விரைந்தது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல் விரைந்தபோது, அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார்.

கொண்டஞ்சேரியில் 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர்.
தனது வாகனத்தை சில இளைஞர்கள் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த ஆட்டோ ஓட்டுநர், மேலும் வேகமாக விரைய முற்பட்டார். ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துவிட்டார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் விரைந்தது. இதற்குள் மூன்று கி.மீ. தூரம் அந்த ஷேர் ஆட்டோ
பயணித்திருந்தது.

தனது ஏனைய நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்துவிட்டு, யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார்.
அதனால் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யாகேஷ், சனிக்கிழமை இரவு உயிர் நீத்தார்.

பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஷேர் ஆட்டோ ஓட்டுநரை மப்பேடு போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட பெண், பெரிய அளவில் காயமில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்த சம்பவம்.

இதே நிகழ்வு தேசியத் தலைநகர் தில்லியிலோ, மாநிலத் தலைநகர் சென்னையிலோ நடந்திருந்தால் நேற்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாகி இருக்கும். காட்சி ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் யாகேஷின் மீதும், சம்பவத்தின் மீதும் குவிந்திருக்கும். அந்தப் பெண், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியராகவோ அல்லது நகர்ப்புறவாசியாகவோ இருந்திருந்தால், பெண்ணிய அமைப்புகள் எல்லாம் அவருக்காகக் குரல் எழுப்பியிருக்கும். யாகேஷின் தியாகம் சமூக ஊடகங்களில் "டிரெண்டிங்'காக மாறியிருக்கும்.

ஆனால் என்ன செய்வது? இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடந்த நிகழ்வாக இருப்பதால், இது குறித்து ஊடகங்களும் கவலைப்படவில்லை, அரசியல்வாதிகளும் வரிசை கட்டி நின்று யாகேஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து இழப்பீடுகள் வழங்கி விளம்பர வெளிச்சம் பெறவில்லை.

தமிழகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டுதோறும் 20,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2% அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 15 நிமிஷத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகச் சுட்டிக் காட்டுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.
காவல் துறையினரால் மட்டுமே இதைத் தடுத்துவிட முடியாது.

மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வால் மட்டும்தான் பாலியல் குற்றங்களுக்குத் தீர்வு காண முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி இருந்தும்கூட, யாகேஷ் போன்று துணிந்து தவறைத் தட்டிக் கேட்கவும், போராடவும் நமது இந்தியச் சமூகம் தயாராகாமல் இருப்பதுதான், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம். யாகேஷ் போன்ற 100 இளைஞர்களைத்தான் இந்தியாவை மாற்றியமைக்க சுவாமி விவேகானந்தர் கேட்டார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார் மறைந்த கொண்டஞ்சேரி யாகேஷ். பெண்மையின் கற்பையும் மானத்தையும் பாதுகாக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கும் யாகேஷின் துணிவுக்கு "தினமணி' தலைவணங்குகிறது என்று தினமணி நாளிதழ் பதிவு செய்துள்ளது.Best regards,