Saturday 28 December 2013

மரணம் பற்றிய மா்மங்கள்



உடலும் உயிரும்

நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன. அவற்றை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. குண சரீரம் 4. கஞ்சுக சரீரம் 5. காரண சரீரம் என்பா். இவற்றை 1. அன்னமய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும் சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள்.

1. அன்னமய கோசம்
நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது! பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள்.

2. பிராணமய கோசம்
வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம்.

3. மனோமய கோசம்
ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும்.

பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும்.

4. விஞ்ஞானமய கோசம்
ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும்.

5. ஆனந்தமய கோசம்
பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும்.

யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள்.

வேதாந்திகள் சொல்வது

மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து.

தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம்

காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம்.

விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை.

மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது.

உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை!

அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம்.

எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம்.

மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம்.

மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான்.

கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான்.

ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான்.

கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது.

காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா்.

சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா்.

தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா்

மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது.

அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது.

சூக்கும சரீரம் – விளக்கம்

தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலைஅடிகள்.

ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது. அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அவா்.

அருள்திரு அடிகளார் அனுபவம்

ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள்.

அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன. சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது.

இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு.

புலவா் சொக்கலிங்கம் அனுபவம்

ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார்.

“ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்தபோது என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது. எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான். அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது. இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி! இது சற்றே வித்தியாசமான அனுபவம்” என்றார்.

பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும்.

இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார்.

இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள்.

இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள்.

உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள்.

இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.
fax:
your@email.com
http://www.yoursite.com

Friday 27 December 2013

உடல் மொழி


உடல் மொழி

1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.
2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

fax:
your@email.com
http://www.yoursite.com

Saturday 21 December 2013

இதற்கு பதில் தர முடியுமா..?

இதற்கு பதில் தர முடியுமா..?

தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நிலைமையா..?

அமெரிக்கா அரசு "தேவ்யாணி " ஆடை அகற்றி சோதனை செய்த அமெரிக்கா மீது "காங்கிரசு" (மத்திய அரசு) இவ்வளவு அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்.

எனது ஈழ சகோதரியை இலங்கை இராணுவம் ஆடை கழற்றி கற்பழித்தது.இதற்கு இலங்கை மீது கண்டனம் கூட இல்லை.

காங்கிரசு அரசே..! மனம் கொதிக்கராது.ஐம்பது மயிலில் இருக்கும் இலங்கையில் இருந்து எனது சகோதரி கதறல் மட்டும் உனக்கு கேட்க வில்லை.ஆயிரம் மயிலில்அமெரிக்காவில் இருக்கும் தேவ்யாணி கதறல் கேட்கிறாதா..?

இந்த பதிவு எனது குமுறல் " எனது தமிழ் சகோதரிகளுக்கு உயிர்களுக்கு மதிப்பு இல்லையா..? "

எனது தமிழ் சகோதரின் நிலைமை நினைத்து எனது "கண்ணீர் உடன் " இந்த பதிவு.

காங்கிரசு அரசே..! உனக்கு காலம் தான் பதில் தரும்.

Friday 20 December 2013

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை இப்படியும் பெண்களா? உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் !!

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை இப்படியும் பெண்களா? உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் !!
நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்(25) என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை, அமந்தீப் சிங்குக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர் குறுஞ்செய்தி மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது. ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை, அமந்தீப் சிங் உறவுக்கு அழைத்தார். முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல், திடீரென்று அமந்தீப் சிங்கிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளளார்.

அதில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். “கெய்ட்டி கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம்” என்று அமந்தீப் சிங்கிடம் கிரிஸ்டல் கூறவே அமந்தீப் சிங், 2 பெண்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில் அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த பொலிசார், கெய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப் சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அமந்தீப் சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அவரை கிரிஸ்டலும், அவரது தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் கிரெடிட் கார்டு மற்றும் காரை இருவரும் திருடிச் சென்றதையும், அந்த கிரெடிட் கார்ட் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2 பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிசார், கிஸ்போர்ன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பொலிஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங் மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 குறுஞ்செய்திகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விபச்சாரத்திற்காக அந்த வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும், கிரெடிட் கார்டையும் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்துள்ளார்

Thursday 19 December 2013

ஒபாமாவத் தாக்கறோம்... தேவ்யானியத் தூக்கறோம்!

ஒபாமாவத் தாக்கறோம்... தேவ்யானியத் தூக்கறோம்!
**********************************************
Aatika Ashreen's photo.
அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள தேவ்யானியை மீட்டு, இந்திய நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன். தேவ்யானியை மீட்காமல் நான் மீண்டும் பார்லிமெண்டுக்குத் திரும்பி வர மாட்டேன். - சல்மான் குர்ஷித்.

# அமெரிக்கா போறோம்.... ஒபாமாவத் தாக்குறோம்..... தேவயானியத் தூக்குறோம்...... அசால்ட் ஆறுமுகம் அடுத்த ஆப்பரேசனுக்கு ரெடி ஆகிட்டான். எல்லாம் வழிவிட்டு நில்லுங்கப்பா.... ஆவேசத்தைப் பாத்தா, அவங்களே வரலைன்னு சொன்னாலும் இவுரு தரதரன்னு புடிச்சு இழுத்துக்கிட்டு வந்துருவாருபோல.....

# திடீர்னு என்னங்க சார் இவ்வளவு ரோசம்? இந்த ரோசம், ஆத்திரம், வேகம், சபதம் எல்லாம்..... எல்லையில் நமது ராணுவத்தினரின் தலையை வெட்டிப் போட்டபோது வரவில்லை, அந்நிய நாடுகள் அத்து மீறும் போது வரவில்லை, ஒரு இனனமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டபோது வரவில்லை, எங்களின மீனவர்களுக்காக வரவில்லை..... இப்போது மட்டும் ஏன்.... அமெரிக்கா சோனியாவுக்கு சம்மன் அனுப்பியதுதான் காரணமா?

# கச்சத்தீவை மீட்காமல் வரமாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தால்.... வெளியுறவுத்துறைக்கு வீரம் பொங்கி விட்டது எனலாம். தேவயானியை மீட்காமல் வரமாட்டேன் என்றால்?....

எலக்சனுக்கு அப்புறமா அந்த நாட்டில போய் செட்டில் ஆகிறதுக்காக.... இப்பவே வீடு பாக்கப் போகிறார் போல!
செம ஐடியா தான்... கலக்குற சந்துரு!

Wednesday 18 December 2013

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்! ! ! !

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்! ! ! !
காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும்.நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும்கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது.

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

>எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக
PDS 01 BE014
என்ற தகவலை
9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக்குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும்.

உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.

இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்குமேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள்பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள்ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

நண்பர்களே இதை அதிகம் ஷேர் செய்யுங்க...!

Friday 13 December 2013

திருநங்கைகள் பற்றி தெள்ளத்தெளிவோம்!


காவல் பணிக்கு சிறப்பான தகுதியுடையவர்கள் திருநங்கைகளே என்ற முடிவுக்கு வந்து, பணி நியமணம் செய்திட அரசுக்குப் புரிந்துரை செய்கிறேன்.

திருநங்கைகளின் சிறப்பு தகுதிகள்!

பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிக்கவர்கள்.

மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும்.

காவல் பணியில் உள்ளோருக்கு ஆணைப் போல உடல் வலிமையும், பெண்ணைப் போலவே இரக்கக் குணமும் அவசியம்தானே!

தகுதியின் அடிப்படையில் அனைத்து திருநங்கைகளுக்கும் காவல் பணி என்னும் போது வாரிசு, சொந்த பந்தங்களுக்காக வருவாய்க்கு மிஞ்சிய சொத்தைக் கையேந்தி பிச்சை எடுத்து சேர்க்க வேண்டிய அவசியமேதும் இல்லை.

இதனால், பணத்தைக் கொடுத்து அல்லது பாசத்தைக் காட்டி பணிய வைப்பதும் சாத்தியமல்ல.

திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்னும் சுமை இல்லாததால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்பட முடியும்.

சாதி, மத உணர்வுகள் இருக்காது. இன உணர்வு இருக்கும். ஆனாலும், அதனால் ஆபத்து எதுவும் இல்லை.

காவல்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி. இல்லையென்றால்…?

பெண் காவலர்களைப் போல, இவர்களைப் பாதுகாக்க ஆண் காவலர்கள் தேவையில்லை.

மனைவி, வாரிசு போன்ற பந்தங்கள் இல்லாததால், திருநங்கைகளின் இறப்புக்குப் பிறகு பெருமளவிலான ஓய்வூதியம் அரசுக்கு மிச்சம்.

காவலர் என்பதால் சட்ட அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைத்து விடும். பணத்திற்காக பாலியல் தொழிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை.

இதனால், திருநங்கைகளால் ஏற்படும் பாலியல் தொழில் முற்றிலும் ஒழிந்து விடும். ஒட்டு மொத்தத்தில் பாலியல் தொழில் உடனடியாக பாதியாக குறைந்து விடும்.