Friday 30 September 2011

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள்: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது: சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன்.
இப்போதும் மக்ளோடுதான் கூட்டணி அமைத்து உள்ளேன். இப்போது தே.மு.தி.க.வை நம்பி 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் வந்து உள்ளன.
சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிறது. மக்களிடம் வீட்டு வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூல் செய்கின்றனர். ஆனால் இன்னும் சாலை, குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அதை பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் கவலைப்படவில்லை.
மக்களுக்காக போராடும் பிரதிநிதிகளை தேர்ந்து எடுப்பது மக்களின் கடமையாகும். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஜாதிக்கட்சிகள் இன்று திராவிடக் கட்சிகளோடு இணைந்து பணம் சம்பாதித்து விட்டு தேசிய கட்சிகளும் தேவை இல்லை என்று கூறுகின்றன.
அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கூறும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் அவரது கட்சியில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்து உள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை. நான் கட்சி தொடங்கியபோது 71வது கட்சியாக இருக்கும் என்று கூறினார்கள். தற்போது 7வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் தே.மு.தி.க 1வது கட்சியாகி விட்டது.
எனவே உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அரியலூரில் விஜயகாந்த் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். இதில் சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டால் அதை நான் பார்த்து கொள்கிறேன்.
படித்த இளைஞர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 67 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில்தான் புரட்சி உருவாகும்.
தே.மு.தி.க வெற்றி பெற்றால் படித்த படிக்காத ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மக்கள் மாறி மாறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும். மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள்.



மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!


மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும்? என்கிற ஆராய்ச்சியில் சுயம் ஈடுபட்டு உள்ளார் அமெரிக்கர் ஒருவர். அவரின் பெயர் Curtis என்பது.
மூன்று குழந்தைகளின் தந்தை. கடந்த ஜனவரி மாதம்தான் மூன்றாவது குழந்தை பிறந்தது. முலைப் பாலை அவரது மனைவி கறந்து மிகவும் பத்திரமாக ஃபிரீஸருக்குள் வைப்பார். ஃபிரீஸருக்குள் வைக்கப்பட்ட பாலை கணவர் சுவைத்து இருக்கின்றார். மிகவும் நன்றாக இருந்தது. வழக்கப்படுத்திக் கொண்டார்.
அவரது அனுபவத்தின்படி பசுப் பாலைக் காட்டிலும் சுவையானது இம்முலைப் பால். தற்போது வித்தியாசமான சுய பரிசோதனை ஒன்றை ஆரம்பித்து உள்ளார். மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை நாட்கள் அவரால் உயிர் வாழ முடியும்? என்பதுதான் பரிசோதனை.



தேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜக் கழுதை

அரசியலில் நிறுத்தப்பட்டு உள்ளது கழுதை ஒன்று. நம் நாட்டில் அல்ல. பல்கேரியாவில். இங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற உள்ளது.
Varna என்கிற நகரத்தின் நகர பிதா பதவிக்காக இக்கழுதை போட்டியிடுகின்றது. கழுதையின் பெயர் மார்கோ. புதிய பல்ஜீரியாவுக்கான சமூகம் என்கிற கட்சிதான் முதல்வர் வேட்பாளராக கழுதையை நிறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளது.
தற்போதைய முதல்வர் Mayor Kiril Yordanov இற்கு எதிரான பிரதம வேட்பாளராக கழுதை போட்டியிடுகின்றது என்று புதிய பல்ஜீரியாவுக்கான சமூகத்தினர் அறிவித்து உள்ளனர்.
தற்போதைய முதல்வருக்கும் போட்டிக்கு நிற்கின்ற கழுதைக்கும் இடையிலான முக்கிய ஒற்றுமையாக எஜமானரின் சொல் கேட்டு நடப்பர் என்கிற அம்சம் இவர்களால் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

ஆனால் கழுதை மார்கோவுக்கும் தற்போதைய முதல்வர் உட்பட ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இடையிலான வித்தியாசங்கள் ஏராளம் என்றும் இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
மார்கோ மிகவும் தைரியசாலி, பொய் சொல்லாது, திருடாது, ஊழல் செய்யாது, வேலையை ஒழுங்காக செய்யும் போன்றனவே இவ்வித்தியாசங்கள்.
மார்கோ தேர்தலில் நிறுத்தப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் சிலவற்றையும் கூறுகின்றனர். நாய்க்கு அடுத்த படியாக மனிதனுக்கு மிகவும் நன்றி உள்ள மிருகம் கழுதை.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி மார்கோ பிறந்து இருக்கின்றது. அதாவது பல்கேரியாவில் Todor Zhivkov இன் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த நாள் அது.
அத்துடன் 20 வயதைப் பூர்த்தி செய்து இருப்பதால் அந்நாட்டு சட்டப்படி தேர்தலில் போட்டியிடுகின்ற அருகதையை உடையது. நகரத்தின் பச்சைப் பசேல் என்ற இடங்கள் அழிந்து போவதால் மார்கோவின் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்று இன்னொரு காரணமும் காட்டப்படுகின்றது.


இக்கழுதையை முன்னிறுத்தி புதிய பல்ஜேரியாவுக்கான சமூகத்தினரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு கழுதையை சக போட்டியாளராக கருதுகின்றமை முடியாது என்று கூறுகின்றார் தற்போதைய முதல்வர்.
இவர் முன்பு புதிய பல்ஜேரியாவுக்கான சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அண்மையில்தான் ஆளும் மத்திய அரசின் பக்கம் தாவிக் கொண்டார்.
இவருக்கு எதிராக கழுதை ஒன்று வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது மத்திய அரசை பரிகாசம் செய்கின்ற நடவடிக்கையாகவும் உள்ளது.