Thursday 30 June 2016

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !

போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள்...)
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல் குழந்தைகளை கூட்டி வரும் பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள்
பாதுகாப்பு சம்மந்தமான இந்த இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....

எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்
தமிழ்நாடு காவல்துறை.... plz share
Best regards,

Wednesday 29 June 2016

கஞ்சி_தொடர்பான_பழ_மொழிகள்_சில‬

‪#‎கஞ்சி_தொடர்பான_பழ_மொழிகள்_சில‬
1. ஆறிலும் நோன்பு கஞ்சி நூறிலும் நோன்பு கஞ்சி
2. ஐந்து வயதில் பள்ளிக் கஞ்சி குடிக்கப் பழகாதவன் ஐம்பதில் குடிப்பானா ??
3. கஞ்சிட்ட பள்ளியாரை உள்ளவும் நினை
4. கஞ்சி உதவுவது போல கந்தூரி சோறு புரியாணியும் உதவாது
5. நோன்பு திறக்கும் பிள்ளை கஞ்சி குடிக்கும்
6. அளவுக்கு மிஞ்சினால் கஞ்சும் நஞ்சே
7. பள்ளி கஞ்சிதான் குடிக்க போறவனுக்கு மொக்க கஞ்சென்ன, சப்பக் கஞ்சென்ன
8. ஆசை 365 நாள் , கஞ்சி கிடைப்பது வெறும் 30 நாள்
9. ஒரு கோப்பை கஞ்சென்றாலும் ஒரு நாளைக்கு பிடிக்கும்
10. குடிக்காதவனுக்கு தெரியுமா கும்புக்கந்துர கஞ்சி டேஸ்ட்டு
11. குண்டு சட்டில குதிரை ஓடுவது போலதான் கஞ்சி கோப்பைக்குள்ள இறைச்சி கெடக்கிறது
12. ஓசி கஞ்சி குடிக்கிற நாய்க்கு இறைச்சிக் கஞ்சென்ன, உப்பில்லா கஞ்சென்ன
13. நடுக்கடலுக்க போனாலும் நோன்பு திறக்கிறவனுக்கு கஞ்சிட எண்ணம்தான்
14. கஞ்சின் அருமை நோன்பு திறந்ததும் புரியும்
15. நிறை கஞ்சிவயிறு தளம்பாது
16. கஞ்சிக்கிம் முந்து கடா சோறு பிரியாணி கொடுக்கும் சஹருக்கும் முந்து
17. பார்பதெல்லாம் இறைச்சிக் கஞ்சென்று நினைத்து விடாதே
18. காய்ச்சிறவன் காய்ச்சினா நல்ல கஞ்சி குடிக்கலாம்
19. கஞ்சின் ருசி மணத்தில் புரியும்
20. குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு கஞ்சி கத பேச்சு நோன்போட போச்சு!!!
‪#‎கஞ்சி_பேசும்_பொருள்‬ 
Best regards,

Tuesday 28 June 2016

5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
*
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*
தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
*
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.
உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
*
1. Axis bank-------------------- 09225892258
2. Andra bank------------------ 09223011300
3. Allahabad bank-------------09224150150
4. Bank of baroda-------------09223011311
5. Bhartiya Mahila bank----- 09212438888
6. Dhanlaxmi bank----------- 08067747700
7. IDBI bank-------------------- 09212993399
8. Kotak Mahindra bank--- 18002740110
9. Syndicate bank------------ 09664552255
10. Punjab national bank---18001802222
11. ICICI bank----------------- 02230256767
12. HDFC bank-------------- 18002703333
13. Bank of india------------- 02233598548
14. Canara bank------------- 09289292892
15. Central bank of india-- 09222250000
16. Karnataka bank-------- 18004251445
17. Indian bank-------------- 09289592895
18. union bank of india---- 09223009292
19. UCO bank---------------- 09278792787
20. Vijaya bank--------------- 18002665555
21. Yes bank------------------ 09840909000.
22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800 23. Corporation bank------- 092-688-92688. 24. South Indian Bank----- 092 23 008488
Best regards,

விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்....

2 நிமிஷம் இதப் படிச்சுப் பாருங்க
Pls pls pls..
.
தேவை இல்லாதத எல்லாம்
fb,whatsapp ல ஷேர் பண்றோம். ஆனா இதப் பத்தி நாம ஏன் பேசுறதில்ல
.
‪#‎கத்தி‬ படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது
.
# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?
.
# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...
.
‪#‎சமீபத்துல‬ டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.
.
‪#‎ஒவ்வொரு‬ 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.
.
‪#‎சராசரியா‬ வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க
.
# போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க
.
1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203
.
‪#‎இப்படியே‬ போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?
.
‪#‎சாப்பாட்டுக்கு‬ எங்க போவாங்க?
.
‪#‎இதப்‬ படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..
.
# நிறைய ஷேர் ஆச்சுன்னா வாட்சப்பில் இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும்.
.
‪#‎குறைஞ்சது‬ 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.
.
‪#‎நாம‬ இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்
.
‪#‎விவசாய‬ இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?
.
‪#‎கொஞ்சம்‬ வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க.
.
‪#‎நாமல்லாம்‬ இவ்வளவு நாள் வாட்சப், பேஸ்புக்கில இருந்து என்னதான் சாதிச்சோம்?
.
‪#‎இத‬ ஷேர் பண்ணினா நல்லது
.
‪#‎இது‬ விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. நம்மளப் பத்தினது
.
#கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
.
‪#‎Pls‬ share it...
🌾
🌾
🌾
நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....
.
உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....
.
பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....
.
.சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....
.
விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....
.
நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....
.
கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....
.
ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....
.
நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
.
iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?
.
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.
.
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்....

Best regards,

Sunday 26 June 2016

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?
-அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கன்ணதாசன் !

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

`அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’

என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.

ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை

வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி

சேவை செய்வதில் தாசியைப் போலவும்,

யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,

அழகில் லட்சுமியைப் போலவும்,

மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,

அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,

மஞ்சத்தில் கணிகையைப் போலவும்

நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.

(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)

அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்.

`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப்பெண்களால் அது முடியும்.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.

`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.

கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்

முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி.

அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.

`தாயைப் பார்த்துப் பெண்ணெடு

தரத்தைப் பார்த்து வரவிடு

நிலத்தைப் பார்த்துப் பயிரிடு

நேரம் பார்த்து முடிவெடு’

என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.

“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.

இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி

முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்

அவசரத்தில் கல்யாணம்

என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)

குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,

ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:

“விற்பெரும் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத்த ளாய

நங்கையைக் கண்டே னில்லை;

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்

ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே

வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்

தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்

எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்

கூறா மற் சந்நியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்

போல்வடிவு

கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே

- தொண்டா

செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

என்றாள் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை

எடுத்(து)

அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)

அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்

பின்வந்(து)

உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா

கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்

தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.”

இதுவும் மூத்தோர் மொழி.

“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!

இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு

ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.

Best regards,

Thursday 23 June 2016

நண்பர்களே உஷார்! !!!!

நண்பர்களே உஷார்! !!!!
தூங்கும் போது போனில் ‪#‎சார்ஜ்‬ போட்டு ‪#‎ஏர்போனில்‬பாட்டுக்கேட்டு தூங்குபவர்களா நீங்கள் இழப்பது உங்கள் உயிராக இருக்கும் போனில் மின்சாரம் பூர்த்தி ஆன பின் அதிகபடியான மின்சாரத்தை காதில் மாட்டியிருக்கும் ஏர்போனின் சிறிய மின்காந்தத்தால் உடலில் பாய்ச்சுகிறது.
இதனால் நரம்புமண்டலத்திலிருந்து வரும் சிறிய நரம்புகளின் இரத்தம் உறைந்து முளையின் ஞாபகசக்தியை அதாவது மலட்டுதன்மை ஏற்ப்படுத்துகின்றது இதனால் சுயநினைவை இழந்துவிடுகிறோம் பின்னர் மத்திய நரம்புமண்டலத்தின் இரத்தத்தை உறையவைக்கிறது அப்போது சில நரம்புகள் வெடிக்கின்றது இதனால் இதயத்திலிருந்து கழுத்திற்க்கு மேலே செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு உயிர் இழப்பு ஏற்ப்படுகிறது.
கண்டிப்பாக நண்பர்களுக்கு பகிருங்கள்
Best regards,

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா?

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா?
ஆண்களின் உடைகளுக்கும் பெண்களின் உடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்று கவனியுங்கள்.
மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
பெண் என்பவள் பலவீனமானவள்,
அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை.
அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.
தேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்).
இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம்.
நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்
பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம்.
காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை?
இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?

இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.
நாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும். அது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.
Best regards,

Wednesday 22 June 2016

பால் கதை..!

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்..!
தாங்க முடியல சாமி..! எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்..? என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்குவிடையளிக்கக் கூடும்.
கதை சொல்லப் போறேன்..! பால் கதை..!
பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.
இந்தக் கதை, நமக்கு சொல்ற பாடம் என்ன?
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகின்ற அம்சங்கள்..!
புரிஞ்சுதா..?
Best regards,

Tuesday 21 June 2016

அரைஞாண் கயிறு அறிவியலும் ஆய்வும் !!!

அரைஞாண் கயிறு அறிவியலும் ஆய்வும் !!!
*********************************************

ஏன் அரைஞாண் கயிறு கட்டினார்கள் தமிழர்கள் :
வெகுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள்.அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம்.
இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண்களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள் மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண்களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொள்ள அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில் பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்திருப்பதை உணர்ந்தனர் பின் அன்றில் இருந்து இன்று வரையும் எந்த ஒரு கனமான பொருட்களை எடுத்து வேலை செய்யும்போது துண்டையோ, கயிற்றையோ இடுப்பில் கட்டும் பழக்கம் நம்மோர்க்கு உண்டு. அந்த பழக்கம் பழக பழக வழக்கமாய் அரைஞாண் கயிறாக நின்று விட்டது…
அறிவியலாய் விளங்கிய இனம் நம் இனம் மறவாமல். அரைஞாண் கயிற்றை கட்டியிருப்போர் ஒவ்வொரு தமிழனும் இதை பகிருங்கள்…

Best regards,

முடி ஏன் நரைக்கிறது? சரியான மருந்து

முடி ஏன் நரைக்கிறது? சரியான மருந்து
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக லண்டனின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது.
பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது.
அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம் முடியின் இயற்கை வண்ணத்தை அதற்கு மீண்டும் அளிக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதி, அந்த வேதிப்பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கினார்கள். அதை பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்தபோது அவர்களின் உடல் முடி தனது பழைய நிறத்திற்கு மாறியதாக இவர்கள் கூறுகிறார்கள்.அதேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வாளர்களால் உறுதியான விடையை கொடுக்கமுடியவில்லை. இந்த குறிப்பிட்ட மருந்தை இவர்கள் கண்டுபிடித்த விதமே சுவாரஸ்யமானது.
விடிலிகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பின் ஒரு பகுதியாக இந்த ஆய்வாளர்கள் இந்த மருந்தை வடிவமைத்தார்கள். இயற்கையில் மனிதர்களின் தோலில் காணப்படும் மெலானின் என்கிற நிறத்துகள்கள் தோலின் சில இடங்களில் இல்லாமல் போவதால் இந்த வெள்ளைத்தழும்புகள் உருவாகின்றன.
தோல் மற்றும் கண்ணின் இமைகள், புருவங்களில் காணப்படும் வெள்ளைத்தழும்புகளை குணப்படுத்துவதற்காக இவர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட நோயாளிகளிடம் நல்ல பலனை தந்ததை கண்ட ஆய்வாளர்கள், இந்த மருந்தை கொஞ்சம் மாற்றி அதை பயன்படுத்தி மனிதர்களின் முடியில் உருவாகும் நரையை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தபோது அதுவும் சாத்தியம் என்பதை தாங்கள் கண்டறிந்ததாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுநாள்வரை நரைமுடியை மறைப்பதற்கான வழிகள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ சஞ்சிகையான பேசப் ஜர்னலின் தலைமை ஆசிரியர் ஜெரால்ட் வீஸ்மென், முதல்முறையாக, வெள்ளைமுடியை அதன் வேரிலிருந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறைக்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த மருந்து நரைமுடியையும் தோலில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் ஒருசேர குணப்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் இவர்.
Best regards,

Saturday 18 June 2016

‎பெண்கள்‬ ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?

‪#‎பெண்கள்‬ ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.
மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.
சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள்,
ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
முக்கிய குறிப்பு:-
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்......
Best regards,

Friday 17 June 2016

இந்து மதத்தின் பெருமை!!!!!!

இந்து மதத்தின் பெருமை!!!!!!
வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை
பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
Best regards,

Thursday 16 June 2016

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்?

நெஞ்சில் ஈரம் இருப்பவர்கள் பகிருங்கள்..!!

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்?

என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது,
ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான், அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள்,
அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி "உங்களில் மோசமானவன் நான்தான்" என்றான் முதலாமவன்,......

அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஒரு அடி முன்னாடி வந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கற்பழித்து, அவளுடைய வயிற்றிலேயே ஏறி மிதி மிதி என மிதித்து உயிர் போகும் வரை மீண்டும் மீண்டும் அடித்து சாகடித்து விட்டான்,
பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி "என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை" என்று பெருமிதத்துடன் கூறினான்........

இரண்டாமவன்,
அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ இல்லை, இல்லை இவ்வளவுநேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தான் உங்கள் எல்லோரையும் விட மோசமானவன்,

ஏனெனில் இப்பெண்
"என் தங்கை" என்றான்
மூன்றாமவன்,
இதே சம்பவத்தை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்....

கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் - ஈழப்பெண்
முதல் மனிதன் - சிங்கள வெறியன் ,
இரண்டாவது மனிதன் - சர்வதேச நாடுகள் ,
மூன்றாவது மனிதன் - உலக தமிழர்கள் .
இங்கே தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களில் எத்தனை பேர் ஈழத்தில் நமது அக்காவும், தங்களையும் சிங்கள நாய்களால் கொல்லப்படும் போது இதே ;போன்று மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
நெஞ்சில் ஈரம் இருப்பவர்கள் பகிருங்கள்..! —

Best regards,

ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள்‪#‎கைது...

ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள்‪#‎கைது_செய்யப்படுவீர்கள்‬ ..!
.
குறிப்பிட்ட நாடுகளில் ஆன்லைனில் நீங்கள் 'என்னவெல்லாம்' செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதைப்பற்றிய தொகுப்பே இது..!
.
1 திறந்தவெளி வைபை :
பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
2 சேர்ச் ஹிஸ்ட்ரி :
ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம் ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.
கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.
3 போஸ்ட் அல்லது ட்வீட் :
மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.
.
4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :
வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) இணையவழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
5 வீடியோவில் நடனம் :
ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.
6 இன்டர்நெட் கமெண்ட் :
சிரியாவில் இன்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்.
.
7 மொழிமாற்றம் :
தடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
.
8 சூதாட்டம் :
உலகின் பல நாடுகளிலும் ஆன்லைன்னில் சூதாடுவது சட்டப்படி குற்றமாகும்.
.
9 ஃபைல் பரிமாற்றம் :
ஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய பிரச்சனையாகும். சில நாடுகளில் பாடல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் என எதையும் பரிமாறிக்கொள்ளமுடியும், சில நாடுகளில் இது முடியாது. மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்தது.
.
10 ஃபேஸ்புக்கில் பாடல் வரிகள் :
அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற்காகவும் ஒருமுறை கைது சம்பவம் நடந்துள்ளது.

Best regards,

Wednesday 15 June 2016

தயிரின் நன்மைகளும்,அதனை கையாலும் முறைகளும்...

தயிரின் நன்மைகளும்,அதனை கையாலும் முறைகளும்...
தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..?
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
Best regards,

Friday 10 June 2016

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
உணவருந்தும்போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ. இதைப் படித்துபார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும்:
வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் (Metabolism) இது பயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை கூலாக்க உதவும்.
அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பும் தேங்கிபோவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
எச்சில் அளவை குறைக்கும்:
செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும்போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்திவிடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
செரிமான குறைவை உண்டாக்கும்:
அசிடிட்டியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின்மீது பழியை போடலாம். உண்ணும்போது தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போகும், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன்பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர் பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உணவை நன்கு மென்று விழுங்கவும்:
உணவை அப்படியே விழுங்காதீர்கள் நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் தொப்பை மற்றும் உடல் இடை கணிசமாக குறையும். மேலும் நம் எச்சில் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனால் உண்ணும்போது தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.
விதிவிலக்கு:
உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடித்துவிடுங்கள்.
உணவில் காரமோ அல்லது உப்போ அதிகமாகிவிட்டால் மட்டும் தேவையான அளவு தண்ணீரை மெதுவாக வாய்வைத்து குடியுங்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் அன்னாக்க நீர் அருந்த கூடாது. அப்படி அருந்தினால் அளவுக்கு அதிகமாக நீர் உள்ளே சென்று நம் இரைப்பையை பாதிக்கும்
Best regards,

வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?

வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?
வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும்.
வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும்.
ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா..?
அதற்கான விடை தான் இந்த கட்டுரை.
நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை.
அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது.
முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட.
கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.
காரணம் #1
ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம்.
இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.
காரணம் #2
ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காரணம் #3
மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.
காரணம் #4
மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது.
ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.
காரணம் #5
ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம்.
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.
வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்
காரணம் #6
சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது.
அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில்.
இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.
காரணம் #7
மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது.
ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர்.
அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை.
எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.
Best regards,

Thursday 9 June 2016

உங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. ??

உங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. ??
நிகழ்விற்கு வரும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தாம்பூல பைகளில் என்ன கொடுக்கலாம் என எண்ணுகின்றீர்களா..??
தாம்பூலப்பைகளில் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து தருவது நம் வழக்கம்.. இதை வெறுமனே கொடுக்கவில்லை.. தேவைகள் கருதியே கொடுத்தார்கள். உணவிற்கு பிறகு வெற்றிலை பாக்கு உணவிற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், அதிக தூர பயணத்திற்கு தேங்காய் தண்ணீரும் தேங்காயும் பயன்படும். அவ்வாறான தேவைகளின் அடிப்படையில் இந்த கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நாமும் தாம்பூல பைகள் கொடுப்போம் என இறங்கினோம்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என எண்ணினோம்.
அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.
விவசாயகளிடமும் இன்று நம் நாட்டு ரக விதைகள் பாதுகாக்கப்படவில்லை. அவர்களுக்கு கிடைத்தால் தன் தேவைக்கு பயன்படுத்த தொடங்குவார்கள்.
இளைய தலைமுறையினர் விவசாயம், வீட்டுத்தோட்டம் என வருகின்றனர். அவர்களுக்கு விதைகள் கிடைத்தால் நிறைய பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.
இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக தாங்கள் வருவாய்காக பயிர் செய்து வந்த ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி நாட்டு்ரக விதைகளை பயிர் செய்து விதைகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு வருவாய் கிடைக்கும்.
தங்களுக்கு இந்த செய்தி பயனாக இருந்தால் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தக்காளி,கத்தரி,மிளகாய்,வெண்டை, கீரை வகை, கொடி காய்கறிகளின் விதைகள் அடங்கிய விதைப்பொட்டங்களை தாம்பூல பைகளில் தருகின்றோம்..
நன்றி.
Best regards,

Wednesday 8 June 2016

பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்

பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம் Share செய்யுங்கள்
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல....
கலக்கலான தகவலுக்கு (அறிந்ததும் அறியாததும் பக்கம்)
Best regards,