Thursday 21 March 2013

சன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு !

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?

மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.

ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட
ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி
செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.

அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி,
திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.

சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல்,குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.

சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து,
கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில்
பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு
மாற்றப்பட்டார்.

வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன்,செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால்
புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து,
தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு
மாற்றப்பட்டு உள்ளார்.

இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.

முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.

இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.விழுப்புரம் மாவட்டம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினருக்கு விழுப்புரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சன் டிவி கும்பல் அடிக்கும் கூத்து...
தொடரும்...

படங்கள் மற்றும் செய்தி: மக்கள் செய்தி மையம்
20.3.13 மாலை 5.30 மணி

நன்றி
அன்பு செல்வன்