Monday 29 August 2016

பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்

பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்
* வீடும் செல்வமும் தந்தையின் பரிசு, புத்தியுள்ள மனைவி கடவுளின் பரிசு.
* ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும்.
* தெரிந்தது குறைவாக இருந்தாலும் அதை நீ நேசித்தால் உன்னை உயர்த்தும் அதுவாக.
* தெரிந்ததை விட தெரியாததில் ஈர்ப்பு சக்தி அதிகம் நீ அறியாமலேயே அதன் வலையில் விழுவாய்.
* தெரியாததை நம்புவதில் எந்த நன்மையும் இல்லை. தெரிந்த பின் நம்பிக்கையே வேண்டாம்.
* கோபம், பொறாமை, பொறுமையின்மை தன்னறிவற்ற மனிதன் தகுதியற்ற வெளிப்பாடு.
* தெளிந்தால் தெளிவு வரும், தெளிந்தபின் மகிழ்ச்சி வரும், மகிழ்ச்சியே நேசிக்கும் மனநிலை.
* பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம், அலட்சியம் செய்தால் எதிரியை விட உயர்ந்தவர்களாவோம்.
* பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் நிறைகளில் உங்களுக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு .
* பலவீனம், பயம், துக்கம், அறியாமை ஆகியவை மூட நம்பிக்கையின் உற்பத்தி ஸ்தானங்கள்

Best regards,