Tuesday 12 January 2021

விவசாய குடும்பத்தில் பிறந்த என் உறவுகளே...!

விவசாய குடும்பத்தில் பிறந்த என் உறவுகளே...!

தயவு செய்து முழுவதும் படியுங்கள்...

தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்...
வாக்களியுங்கள்...
தவறில்லை அது உங்கள் விருப்பம்..

ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள *வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக  தெரியாமல் பதிவு செய்யாதீர்கள்....

டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள்...

போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம்...

தவறில்லை...

ஆனால் போராடியவர்களின்  நோக்கத்தை பாருங்கள்...

மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள்...
 தவறில்லை...

ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும்   ஆதரிக்காதீர்கள்...

அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும்,  விவசாயிகளுக்கும்  எதிரானது...எட்டு சுற்று பேச்சுவார்த்தை*
நடந்தும் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள்? என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா?

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாதவரை எங்கள் சடலங்கள்கூட வீடு திரும்பாது என்று விவசாயிகள் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் போட்ட சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனும் அரசாங்கம் போராடும் விவசாய சங்கத்தை உடைக்கப் பார்க்கிறது

இரண்டு தரப்பும் இப்படி விடாப்பிடியாக முரண்டு பிடிக்க காரணம் என்ன?

Contract Farm சட்டத்தை ஆதரிக்கின்றவர்கள் சொல்கிற இரண்டு  விசயங்கள்...

1.கஷ்டப்பட்டு விளைய வைத்த பொருளை இனி நஷ்டத்துக்கு இடைத்தரகர்களிடம் அள்ளிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை

2.ஏதோ ஒரு கம்பெனியுடன்
Contract Farm சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் விதை,உரம் மற்றும் விவசாய செலவுக்கான பணம் மட்டுமல்ல விளைந்த பொருளை கம்பெனியே எடுத்துக்கொண்டு காசை கொடுத்துவிடும்.
இதைக் கேட்பதற்கு என்னவோ திகட்டிபபோன தேனும் பாகும் கடைவாயில் வழிகிற மாதிரித்தான் இருக்கும். ஆனால்... அதற்குள்ளிருக்கும் விஷம்?

ஆளை மயக்கும் விளம்பரத்துக்கு அடியில் *Coditions apply என்ற சுருக்குகயிறு வைத்த மாதிரி...

#முதலில் நிலம்#

1). விவசாயத்திற்கு முன் பணம் கொடுப்பார்கள் என்பது உண்மைதான். எவ்வளவு தெரியுமா?

வெறும் பத்து சதவிகிதம் மட்டும்தான்.

உதாரணமாக ஒரு போகம் விளைச்சலுக்கு ஒரு இலட்ச ரூபாய் செலவாகுமென்றால் பத்தாயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாக  தருவார்கள்.
 பாக்கி 90 ஆயிரம் ரூபாயை விவசாயி தன் பாக்கெட்டிலிருந்துதான் போடணும். 

ஒரு தடவை விளையவில்லை என்றால் அடுத்த தடவையும் விவசாய செலவுக்கு பணம் கொடுப்பார்கள்
ஆனால் முன்பணமாக பெற்ற அந்த ரூ.10,000 பணம் அப்படியே நிலுவையாக  தொடரும்.

தொடர்ந்து பத்து நிலுவைத்தொகை  பாக்கி நிற்குமானால் ஒப்பந்தம் செய்து கொண்ட நிலம் ஒப்பந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடும்

அந்த விவசாயி அந்த ரூ.1,00,000 பணத்தை வேறுவழியில் தயார் செய்து கொடுத்தாலும் அந்த Contract Company அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விவசாயிக்கு தரவேண்டியது  அந்த  Contract Company விருப்பத்தைப் பொருத்தது.

#அடுத்தது விதை#

2.)விதை எப்படிப்பட்ட விதை தெரியுமா?

ஒரு முறைக்கு மேல் மறு முறை கருத்தரிக்காத மலட்டு விதை.

காரணம்?

எந்த விவசாயியிடமும் எந்த விதையும் தங்கி விடக்கூடாது எப்போதும் தன்னை (Contract Company) சார்ந்தே இருக்க வேண்டுமென்ற சூழ்ச்சி.

கான்ட்ராக்ட் விவசாய ஒப்பந்த சட்டப்படி கம்பெனி என்ன விதைபொருள்கொடுக்கிறதோ அதை மட்டுந்தான் விளைவிக்க முடியும்.

* ஒரு உதாரணத்திற்கு, ஐம்பது அரளிக்கொட்டையும் குண்டுமணியும் விதைத்து விடு என்று Contract Company சொன்னாலும் விதைத்துத்தான் ஆக வேண்டும்.

Because You are Contract With The Corporate Company

#அடுத்தது உரம்#

3).நம் வயலில் என்ன விதைக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல எந்த வகையான உரம் தெளிக்க வேண்டும் என்பதையும் ஒப்பந்தம் செய்து கொண்ட Contract Company தான் முடிவெடுக்கும்

அநத உரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியும் ஆபத்துமாக இருக்கிறது.

குறிப்பாக காலங்காலமாக நெல் பயிருடும் மண்ணில் அந்த மண்ணுக்கு எதிர்மறையான உரங்களை உபயோகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதால் நாளடைவில் மண் மலட்டுத்தன்மை அடைந்து விடும்.

காசும் விதையும் உரமும் கொடுத்து ஒப்பந்தம் போடும் Contract Companyக்கு மகசூல் முக்கியமல்ல.

மண்ணை மலட்டுத்தன்மையாக்கி அதன்மூலம் மகசூலை குறைத்து நாளடைவில் விவசாயியை கடனாளியாக்குதுதான்

4). இடைத்தரகர் இல்லாமல் ஒப்பந்தம் போட்ட கம்பெனியே விளைபொருளைவிலை கொடுத்து வாங்கிக்கொள்ளும்.

இதுவும் உண்மைதான். Contract Farm Actடின்படி வெளியில் தெரியாத Conditions Apply

ஒப்பந்த கம்பெனி விவசாயியிடமிருந்து எடுத்துச்சொல்லும்பொருளுக்கு தரமும் விலையும் நிர்ணயிக்கும் கால அவகாசம் 90 நாட்கள்.

உதாரணமாக குப்புசாமி என்ற விவசாயியிடமிருந்து 50 மூட்டை நெல்லை Contract Company எடுத்துக்கொண்டுபோகிறானென்றால் 90 நாட்கள் கழித்து

நெல் காய்ந்து போனதால் Quantityயும், கருக்காயாக இருப்பதால் Qualityயும் குறைந்து விட்டது என்று கூறி 25 மூட்டை நெல்லுக்கு மட்டும் காசை கொடுத்தால்

எங்காவது கோயில் குளத்துல போயி மண்ணை வாரி தூத்தலாமே தவிர ஏன் என்று கேள்வி கேட்க முடியாது.

Because You Contract With The  Contract Company. 

ஏதோ புதிய வேளாண் சட்டத்தால் கார்பரேட் கம்பெனிகள் அருவா கம்போடு வந்து நாளையே விவசாயிகளை அடித்து அவர்களின் நிலங்களை பறித்துக்கொள்ளும் என்று அர்த்தமல்ல

விவசாயியே வேண்டாம்டா சாமின்னு கார்பரேட் கம்பெனிக்காரன்கிட்டேயே நிலத்தை கொடுத்துட்டு கும்பிட்டு விழுந்துட்டுப் போகின்ற நிலை வரும்

என்பதை உலகெங்கும் பரவிக்கிடக்கும் பஞ்சாபிகள் அந்தந்த நாடுகளில் இந்த Contract Farm Act சட்டங்களின் மூலம் Contract Companyகள் எப்படியெல்லாம் நிலங்களை பறித்துக்கொண்டு விவசாயிகளை நடுத்தெருவில் விட்டது என்பதை பஞ்சாப் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொன்னதால் விழிப்படைந்த பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் ...
இழப்பதற்கு இனி எதுவுமில்லையென்று வீதிக்கு வந்து விட்டார்கள்..!!

இதை எல்லாம் விலாவாரியாக எடுத்துச்சொல்லி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தமிழக ஊடகங்கள்

ஒரு நாளைக்கு ரஜினிகாந்த் எத்தனை தடவை ஒன்னுக்குப் போறான், கமலஹாசன் இப்ப எவளை வைத்திருக்கின்றான், நடிகை வனிதா இப்ப லவ் பன்றது எத்தனையாவது லவ்னு பிரேக்கிங் நியூஸ் போட்டுக்கிட்டு இருக்கானுக...

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்

   ##நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான்,
நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்.##

   ##நாங்கள் ஒருவேளை உணவு உண்டால் தான்,
நீங்கள் மூன்று வேளையும்  உணவு உண்ண முடியும்.##

   ##நாங்கள் பழைய சோறாவது உண்டால் தான்,
நீங்கள் அறுசுவை உணவை உண்ண முடியும்.##

   ##விளைநிலம் இல்லையேல்
விவசாயம் இல்லை.##

   ##விவசாயம் இல்லையேல்
விவசாயி இல்லை.##

   ##விவசாயி இல்லையேல்,
உணவு இல்லை.##

   ##உணவு இல்லையேல்,
உலகமே இல்லை.##
 
    #இப்படிக்கு,#

###ஊருக்கே சோறு போடும் ஏழை விவசாயி### Please support our nation farmers.

Best regards,