Saturday 4 July 2020

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு_மருந்தாக இருக்கும் 🌟

ஆறுதலே கூற முடியாத சில
கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு_மருந்தாக இருக்கும் 🌟
~~~ 🐝🐝 ~~~~
அருமையான வாக்கியங்கள்....
உங்களுடன் பகிர்கிறேன் அன்புடன்...🐝🐝

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை...

🐝 பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

🐝 இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்..ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

🐝 நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

🐝 நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

🐝 நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

🐝 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மன அமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்து விடப்போவதில்லை...

🐝 அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

🐝 சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ..15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

🐝 கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

🐝 வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

🐝 வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

🐝 மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்..அவன் தான் உலகின்
பெரிய பணக்காரன் ஆவான் ...

🐝 எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

🐝 இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

🐝 பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

🐝 தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!

🐝 #சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனைசீரழிக்கும் துரோகியைவிட ...
முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் ! 

🐝 அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை..பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

🐝 உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண்ணோ, ஆணோ கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

🐝 அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...

🐝 பேரின்பம் வேண்டாம்..சிறு சிறு
சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க...

🐝 நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......

🐝 வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

🐝 புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

🐝 அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.உணர்ச்சி உள்ள மனிதனையும்
அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

🐝 வாழ்வோடு போராடிச்சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
Best regards,