Monday 20 July 2020

சிந்தி..

சிந்தி..

ஊர் முழுவதும் ஒரு அறிவிப்பு !
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்..

இதைக் கண்டு பலர் வியந்தனர்.. இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது..

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா..?

அவ்விடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000.. அப்படி ஏதாவதா? என்று..

400 ரூபாய் மட்டுமே என்றான்..

வரிசையில் ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்..

அங்கே ஒருவன் நாற்காலிகளை விற்றுக் கொண்டு இருந்தான்..

"வாங்க சார்...வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்.. சீக்கிரத்துல உடையாது சார்..
400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்.."
என்று கூவினான்..


நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது..

நல்லா யோசிக்கணும்..?

சாத்தியமான்னு பார்க்கணும்..?

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது..

ஆசையே துன்பத்திற்கு காரணம்

Best regards,