Wednesday 8 May 2019

உலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூடிய 10 குணங்கள்!!!

உலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூடிய 10 குணங்கள்!!!👌

பெண்கள் என்றாலே சிறப்பு மிக்கவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பெண்கள் என்றாலே ஈர்ப்பு மிக்கவர்கள். பல இடங்களில் பெண்கள் நசுக்கப்பட்டு அடக்கி ஆளப்பட்டு வந்தாலும், அவர்களை எதிலும் அடைத்து வைக்க முடியவில்லை.

தண்ணீரில் அடைக்கப்பட்ட பந்தை போல் வேகமாக மேலேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் அவர்களின் பங்களிப்பும், வளர்ச்சியும் அசாத்தியமானது.

அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் சிறப்பான குணாதிசயங்களே.
பல சிறப்புகளை கொண்டதாலோ என்னவோ தான் அவர்களை தெய்வங்கள், நதிகள், மலைகள் என பல புனித ரூபங்களில் சித்தரித்துள்ளோம். இவை அனைத்திற்கும் மேல் உலகத்தில் சிறந்து விளங்கும் நம் தாய் என்பவளும் பெண் தானே.

அனைத்து மனிதர்களையும் கவனித்துக் கொள்ள கடவுளால் அனுப்பப்பட்ட இனிய, எளிமையானவர்கள் தான் அன்புள்ளம் கொண்ட பெண்கள். அவர்கள் சரிவர அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முடியாது. இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கும் சில அறிய குணங்களும் பெண்களிடம் மட்டுமே உள்ளது.

👌தியாகம்

பெண்கள் பல கண்ணோட்டத்தில் யோசிப்பார்கள். எப்போதும் உறவுகளை வலுப்படுத்த முற்படுவார்கள். பெரியதாக பொருள் சார்ந்து இல்லாமல் போனாலும் கூட அவர்களுக்கு மிகப்பெரிய தியாக உள்ளம் உள்ளது. பெற்றுக் கொள்வதை விட அதிகமாக வாரிக் கொடுப்பதையே அவர்கள் நம்புவார்கள்.
 
👌நிர்வாக திறன்கள்

அலுவலகம், வீடு, குழந்தைகள், கணவன், பெற்றோர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியவர்களை நிர்வாகம் செய்வதற்கு பெண்களை போல் யாராலும் முடியாது. பல வேலைகளை சுலபமாக இழுத்து போட்டு, திறம்பட செய்யக் கூடியவளே பெண். மேலும் மிகவும் கடினமான சூழ்நிலையை கூட சுலபமாக கையாளுவார்கள்.
 

👌திருப்திகரமான ஆற்றல்கள்

பாதிப்பை உண்டாக்குவது, ஆளுமை மற்றும் பிறரின் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல்களை கொண்டவள் பெண். இது அவர்களுக்கு இயற்கையாகவே உள்ள குணங்களாகும். அனைத்தையும் திறமையாக கையாளுவதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்.
 

👍கடின உழைப்பாளிகள்

கடினமான உழைப்பு மற்றும் போராட்டமே இன்றைய பெண்களுக்கான அடையாளமாக விளங்குகிறது. அவர்களின் கடின உழைப்பே அவர்களை சார்பற்ற நிலையில் வாழ உறுதுணையாக உதவுகிறது.

💐நன்கு பேசுபவர்கள்

பேரம் பேசுவதில் பெண்களை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அது காய்கறி வாங்குவதாகட்டும், பலசரக்கு வாங்குவதாகட்டும் அல்லது ஆட்டோக்காரர்களிடம் வாடகை பேசுவதாகட்டும், பேரம் பேசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
 
💐விசுவாசம்

உலகத்தில் நீங்கள் நம்பக்கூடிய முதல் நபர் பெண்ணே. நீண்ட நாள் உறவிற்கு அவர்களே குறியீடு இலக்காக விளங்குகின்றனர்.
 

💐அழகு உணர்வாளர்கள்

ஃபேஷன், உட்பகுதி, ஆடை அணியும் விதம் என பெண்களை பற்றிய அனைத்தும் கவர்ச்சியுடையதாகவே விளங்கும். தங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகுணர்வாளர்களாக விளங்கும் பெண்களை பார்த்து அதனால் தான் அனைவரும் அதிசயிக்கின்றனர்.
 
💐பொறுமை

பெண்களின் அமைதியும் பொறுமையும் உண்மையிலேயே மிக அற்புதமான குணங்களாகும். மிகவும் மோசமான சூழ்நிலைகளையும் கூட அவர்களால் பொறுமையுடன் சிறப்பாக கையாள முடியும். அதனால் தான் மூன்றாம் உலகப்போர் எழாமல் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
 
💐உணர்ச்சி ரீதியான பலம்

ஆண்களை போல் உடல் ரீதியாக பலசாலிகள் அல்ல பெண்கள். ஆனால் உணர்ச்சி ரீதியாக பார்க்கையில் மூலையில் அமர்ந்து கொண்டிருப்பவள் அல்ல பெண். இதில் ஆண்களை தூக்கி சாப்பிட்டு விடுவாள் பெண். உணர்ச்சி ரீதியான விஷயங்கள் என்றால் அவைகளை மிகுந்த பலத்துடன் கையாளும் திறனை கொண்டவர்கள் பெண்கள்.
 
💐அனைத்து வேலைகளையும் செய்வது

வீட்டை கவனிக்கும் பெண்கள் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துபவர்கள். அதற்கு காரணம் அனைத்து வேலைகளையும் அவர்களால் திறம்பட முடிக்க முடிகிறது. பாடல்களை கேட்டுக் கொண்டே அவர்களால் வீட்டு வேலைகளையும் செய்ய முடியும், குழந்தைகளையும் கவனிக்க முடியும்.

Best regards,