Wednesday 10 July 2019

முத்ரா கடன் திட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்வோம்!!

முத்ரா கடன் திட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்வோம்!!

✓MUDRA என்பதன் விரிவாக்கம் Micro Units Development Refinance Agency என்பதாகும்.

✓அதாவது சிறு, குறு தொழில்களை துவங்குபவருக்கு பத்து லட்சத்துக்குள் கடன் கொடுப்பது இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri Mudra Yojana) .

✓இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது.

✓நல்ல வியாபர திட்டம் உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

✓உற்பத்தி, சேவை, பதப்படுத்துதல் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன்கள் மூன்று வழிகளில் வழங்கப்படுகிறது.

✓ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் சிசு (Shishu) என்ற பெயரிலும்.

✓ரூ.5 லட்சம் வரையிலான கடன்கள் கிசோர்(Kishor) என்ற பெயரிலும்,

✓ரூ.5லட்சத்துக்கும் மேலான கடன்கள்
தருண்(Tarun) என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றன.

✓60% வரையிலான கடன்கள் சிசு முறையிலும், மீதி 40% மற்றவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதி முறை உள்ளது. அதனால் சிசு திட்டத்தில் எளிதில் கடன்கள் பெற்றுக் கொள்ளலாம்.

"எதன் மூலம் வழங்கப்படுகிறது?"

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

"இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?"

✓அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

✓உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிவு படுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவனை கலைஞர் உற்பத்தி, தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

✓பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை கோழிப்பண்ணை, வீவசாயம், காலன் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது

✓ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவு படுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

"ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கப்படுமா?"

✓ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.

✓இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை.

✓கடன் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பெறலாம்.

✓ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

✓உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.

✓அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். இருந்த போதிலும், உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.

✓விலைப் பட்டியலுக்கான Quotation-னுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.

✓இந்த கடன் திட்டத்திற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் ஏதும் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் இந்தக் கடனை வழங்கும்.,

"கடன் பணமாக கிடைக்குமா?"
✓கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் ( Quatation) கொடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும்

✓உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் உரிய ஆவணங்களின் மூலம்  நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.

✓இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது.

✓இவ்வாறு பெறும் கடன்களை ஐந்து வருடங்களுக்குள் திருப்பி கட்டிக் கொள்ள வேண்டும்.

✓கடன் வழங்குவதற்கு மறுத்தால்?
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன் மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம்.

✓வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.

✓உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.

✓சொத்து உத்தரவாதம் எதுவும் கொடுக்க தேவையில்லை.
இந்த கடனை பெறுவதற்கு கீழே உள்ள ஆவணங்கள் தேவைப்படுகிறது.

1.✓அடையாள அட்டை (Voter ID card / driving license / PAN card/ Passport)

2.✓ வீட்டு முகவரி அட்டை (Voter ID card / Aadhar card / Passport)

3.✓ இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்

4.✓ வியாபரத்திற்காக வாங்கும் இயந்திரங்கள் மற்றும் சப்ளை செய்பவர்கள் குறிப்பிடும் விலை விவரங்கள்

5.✓ தொழிலகம் முகவரி தொடர்பான அடையாள ஆவணங்கள்

6.✓ SC/ST/OBC சாதி சான்றிதழ்

சத்தியமா நான் பாஜக உறுப்பினர் அல்ல
மத்திய அரசோட திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் மட்டுமே.

மேலும் இது மோடியோட காசுல வர்றதில்ல நம்மளோட வரி பணத்துல இருந்து வருது அதனால பயனடைவோம்
Best regards,