Sunday 19 April 2020

இனி சலூனுக்குப் போறவங்க மிகக் கவனம்!

இனி சலூனுக்குப் போறவங்க மிகக் கவனம்!

சர்வதேச சமூகத்திற்கு எதிரியாக மாறும் சலூன் கடைகள்..? அமெரிக்காவில் 50% பாதிப்புக்கு காரணம் சலூன்கள்

18-4-2020

கொரோனா தொற்றுள்ளவரிடமிருந்து தும்மல், இருமல் மூலமான வெளிவரும் எச்சில் மூலமாகவோ, கொரோனா தொற்றுள்ளவர்கள் தொட்ட பொருட்களை தொட்டு, அப்படியே மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளில் வைப்பதன் மூலமாகவோ என அந்த தொற்றுள்ளவரிடமிருந்து எந்த வகையிலும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால்தன, சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவதுடன் தனிமைப்படவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடுமையான தடுப்பு நடவடிக்களை எடுக்கப்பட்டும் கூட, அங்கு பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது கொரோனா.

அமெரிக்காவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், அவர்களில் 50%க்கும் அதிகமானோருக்கு சலூன் கடைகளின் மூலம்  கொரோனா பரவியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்தவர்களில் 50% இறப்புக்கு சலூன் கடைகள் பொறுப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை தலைவர் ஜே ஆண்டனி தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சலூன் கடைகளில் கத்தரிக்கோல்கள், டிரிம்மர்கள், துணிகள் மற்றும் ஹேர்ஸ்டைலிங் செய்ய பயன்படும் மற்ற கருவிகளை அனைவருக்கும் அதே கருவிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே பாதுகாப்பற்ற இந்த முறையில், கொரோனா தொற்றுள்ள ஒருவரிமிடருந்து நிறைய பேருக்கு பரவும் அபாயம் இருக்கிறது.

இப்படித்தான் அமெரிக்காவில் அதிகமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் 50% இறப்புக்கு சலூன் கடைகள் தான் காரணம் என ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவிலிருந்து சர்வதேச சமூகம் மீண்டவுடன் இது முடிந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. இது ஒரு நீண்டகால சிக்கல். ஏனெனில் கொரோனாவிலிருந்து மீண்டபின்னர், சலூன் கடைகளுக்கு செல்வதிலும் அபாயம் உள்ளது.

எனவே கொரோனாவிலிருந்து சர்வதேச சமூகம் மீண்டுவிட்ட பின்னர், மனித குலத்தின் நலனுக்காக, சலூன் கடைக்காரர்கள், பழைய உபகரணங்களை தூக்கிப்போட்டு புதிய உபகரணங்களை வாங்கி பயன்படுத்துவது அவர்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை. எனினும் இப்படியொரு அபாயம் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்திருப்பது, மனித சமூகத்தை அலெர்ட் செய்யும் விஷயமாக அமைந்துள்ளது.

நன்றி ஜமீல் கல்குடா
Best regards,