Saturday 25 April 2020

ஒரு சளியின் சபதம்!

ஒரு சளியின் சபதம்!

அய்யா என் பேரு சளிங்க...இது என் புள்ள இருமல்ங்க... அது என் பொண்ணு பேரு காய்ச்சல்ங்க......டாக்டரை  பார்க்கணும்...

எது? அறிவிருக்கா ஒனக்கு... இது எங்களை மாதிரி பணக்கார வியாதிங்க வந்து போற ஏரியா.. இங்கெல்லாம் ஒன்னை உள்ற விட மாட்டாங்க... போ போ.....

இல்லீங்க ரொம்ப நாளா என் மனசுல ஒரு ஆசைங்க.. இந்த மாதிரி பெரிய பெரிய ஆசுபத்திரில வைத்தியம் பார்த்துக்கணும்... டாக்டருங்க மூஞ்சில துணி கட்டிட்டு எனக்கு ஆபரேஷன் பண்ணணனும் ... ஒங்களை மாதிரி பெரிய வியாதிங்களுக்கு வர்ற ஆம்புலன்ஸல ராஜ மரியாதையோட வந்து அட்மிட் ஆகணும்!

ஹே ஹே.... அடேய் கேன்சரு ... இந்த கூத்தை பார்த்தியா?

என்னடா ஹார்ட் அட்டாக்?

அந்த பசங்க பிளட் பிரஷரையும் சர்க்கரை வியாதியையும் கூப்பிடு....

இதோ வந்துட்டோம்.... என்னடா ஹார்ட் அட்டாக்கு?

இவரு பேரு சளியாம்...இவரை பார்த்து எல்லோரும் அலர்றணுமாம்... ஏய்....நாங்கள்லாம் டெர்ரர் பாய்ஸ்... அடேய்....சளி  ...
ஒன்னால எங்களை மாதிரி ஒரு உயிரை எடுக்க முடியுமா? ... ஓடிடு... அந்தா மெடிக்கல்ஷாப்ல ஒரு சூரணம் விப்பான் வாங்கி குடிச்சிட்டு செத்துடு ....

ஹே ஹே ஹே ஹே .....

ஹூம்.... பெரிய வியாதிங்கற ஆணவத்துல ஆடாதீங்க.. இதோ என்புள்ளைங்க இருமல் காய்ச்சல் மேல சத்தியம்...இந்த நாளை குறிச்சி வச்சிக்கங்க... நானும் பெரிய ஆளாகி ஒலகமே அஞ்ச ஆம்புலன்ஸ்ல வருவேன்... ஒரு லட்சம் பேரை போட்டு தள்வேன்...அப்ப ஹார்ட் அட்டாக் கேன்சர் பிபி டயாபடீஸ் ஒங்களைலாம் வாசல்லயே நிக்க வைக்கல? ....பணக்கார வியாதின்னு எடப்பாடி வாயாலயே சொல்ல வைப்பேண்டா.....!

சளி அம்மா நீ பாட்டுக்கு சபதம் போட்டுட்டு வந்துட்டே? நாம எப்படி மா பெரியாளாக முடியும்?

முடியும் பிள்ளைங்களா... நாம ஒடனே சீனாவுக்கு போறோம்... அவனுங்கதான் பாம்பு பல்லி தேளு நட்டுவாக்கிளி பூரான்லாம் திம்பானுங்க அதுல நாம போய் குடியேர்றோம்... ஒலகத்தையே கால்ல விழ வைக்கிறோம்.....

ஹலோ நாங்க ஹார்ட் அட்டாக்,பி பி, கேன்சர் பேசறோம்யா...அர்ஜண்ட்யா ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்கய்யா.... எந்த ஆஸ்பத்திரிக்கு போனாலும் கேட்டோட நிறுத்திடறானுங்க...எங்களை உள்ள விட மாட்றானுங்க!

அந்தோ மூலைல மருந்து கடைல நாட்டு மருந்து வாங்கி தின்னுட்டு நேரா போய் சுடுகாட்ல படுத்துக்கங்க...

யாருங்க பேசறது?

ஹாஹாஹா! நான்தான் கொரோனா பேசறேன்... ஞாபகம் இருக்கா? எனக்கு இன்னொரு பேரு இருக்கு....அதான் சளி.....சபதம் போட்டேனே? இப்ப எனக்கு மட்டும்தான் ஒலகம் பூரா ராஜ மரியாதை.... வேற எந்த வியாதி பயலுக்கும்  எங்கேயும் எடமில்லை... என்ன ஆட்டம் போட்டீங்க? நீங்கள்லாம் வியாதி வந்தவனைத்தானே போடுவீங்க? நான் வியாதிக்கு வைத்தியம் பார்க்கற டாக்டரையே போட்டு தள்வேன்....ஒங்களுக்கெல்லாம் டாக்டருங்க மட்டும்தான் முகமூடி போட்டு வைத்தியம் பார்த்தாங்க... எனக்கு பயந்து ஒலகமே மூடிட்டு திரியறானுங்க... இப்ப தெரியுதா? யாரு டெர்ரரனு? யாரையுமே கொறைச்சலா எடை போடாதீங்கடா? வர்ட்டா?

அதனால எல்லோரும் வீட்டிலேயே இருங்க.

பாதுகாப்பு தான் முக்கியம்.வெளியில வராதீங்க.

சுபம்!.     அன்புடன்


Best regards,