Thursday 9 April 2020

வாட்ஸ்அப்: மூன்று சிவப்பு டிக் இருந்தால் அரசாங்கம் உங்களை கைது செய்யுமா?

வாட்ஸ்அப்: மூன்று சிவப்பு டிக் இருந்தால் அரசாங்கம் உங்களை கைது செய்யுமா?


பிற முக்கிய சமூக ஊடக தளங்களைப் போலவே பலருக்கும் செய்தி மற்றும் பிற தகவல்களின் ஆதாரமாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. ஆனால், பிற சமூக ஊடக தளங்களைப் போலவே தவறான தகவலும் போலி செய்திகளும் வாட்ஸ்அப் செயலியிலும் பரவலாக உள்ளன.

வாட்ஸ்அப்பில் உள்ள செய்திகளில் ரெட் டிக் இருந்தால் அந்த செய்திகளை அரசாங்கம் கவனித்து வருவதாக ஒரு வைரல் மெசேஜ் வலம் வருகிறது. இந்த தகவலை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது.

PIB என்பது அரசாங்க திட்டங்கள், கொள்கைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு பரப்பும் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

பயனர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை அரசாங்கத்தால் கவனிக்கப்படுகிறதா அல்லது அனுப்புநருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை பயனர்கள் கண்டறியக் கூடிய புதிய முறையை வாட்ஸ்அப் செயல்படுத்தியுள்ளதாக அந்த வைரல் மெசேஜில் கூறப்பட்டுள்ளது.


மூன்று நீல டிக் - அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது .

இரண்டு நீலம் மற்றும் ஒரு சிவப்பு டிக் - அனுப்புநருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும் .

ஒரு நீலம் மற்றும் இரண்டு சிவப்பு டிக் - அனுப்புநரின் தரவை அரசாங்கம் திரையிடுகிறது .

மூன்று சிவப்பு டிக் - அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது மற்றும் நீதிமன்றத்தில் இருந்து விரைவில் சம்மன் அனுப்பப்படும்.

ஆனால் இது போலியான தகவல் எனவும் , அரசாங்கம் இதுபோன்று கண்காணிப்பு எதையும் செய்யவில்லை எனவும் பி.ஐ.பி மறுத்துள்ளது.

வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது . எனவே அரசாங்கத்திலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ உண்மையில் மெசேஜிங் பயன்பாட்டில் அனுப்பப்படும் எந்த செய்திகளையும் படிக்க முடியாது.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் ஒரு சிறந்த இடம் என்றாலும், செய்தி மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பெற இது எப்போதும் சிறந்த இடமாக இருந்ததே இல்லை.

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் செய்திகளில் 80 சதவீதம் போலியாக இருக்கவே வாய்ப்பிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததுBest regards,