Friday 24 April 2020

ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு மக்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் முழுவதும் படிக்கவும்

ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு மக்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் முழுவதும் படிக்கவும்

சமூக இடைவெளி பின்பற்றி நோய் பரவலை தடுப்போம்



வணக்கம் நண்பர்களே ரேஷன் கடை ஊழியர்களால் மக்களுக்கு சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை கொடுப்பதில் சில சிக்கல்களை சந்திக்கின்றனர் கீழ்கண்ட முறையில் அவர்கள் ரேஷன் பொருட்களை விநியோகிக்க கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்  சிலர் இதனை பின்பற்றுவதில்லை,சிலரால் பின்பற்ற  முடிவதில்லை எனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு கீழ் கண்ட முறையில் பொருட்களை விநியோகம் செய்ய தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ரேஷன் கடை ஊழியர்கள் பின்பற்ற தவறினாலும் கீழ்க்கண்ட முறையினை பின்பற்ற வலியுறுத்துங்கள்...


1) ரேஷன் கடைகளின் குடும்ப அட்டைதார்களுக்கு  விற்பனையாளர் 24 மற்றும் 25.4.20 தேதிகளில் கடையில் உள்ள இருப்பு மற்றும் பொருள் வரும் நாட்களை கணக்கிட்டு டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

2) டோக்கன் கூட்டுறவு அச்சகத்தில் உள்ளது. கூ.சா.ப / மே.இ. ஐ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

3) 27.4.20 க்குள் ம.எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்

4) 27.4.20 முதல் நகர்வு வரப்பெற்ற கடைகளில் அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் விநியோகம் செய்ய வேண்டும்

5) PHH. &. AAY கு.அட்டைக்கு வழக்கமாக வழங்க வேண்டிய அரிசியுடன் கூடுதலாக  PMGKAY திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி  வழங்க வேண்டும்.

(உம்) ஒரு PHH கார்டில் 4 நபர்கள் இருப்பின் ஏற்கனவே 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கூடுதலாக 20 கிலோ அரிசி, ஆகமொத்தம் 40 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

ஒரு AAY கார்டுக்கு எத்தனை நபர்கள் இருப்பினும் ஏற்கனவே 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அக்குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 25 கிலோ ஆக மொத்தம் 60 கிலோ அரிசி வழங்க வேண்டும். POS machine ல் தனித்தனியாக option உள்ளது. விற்பனையாளர் எந்த கணக்கும் செய்ய வேண்டாம். NPHH கார்டுக்கு வழக்கமாக வழங்கும் அரிசி மட்டும் வழங்க வேண்டும்.

6) PMGKAY திட்ட அரிசி கடையில் இருப்பிலிருந்தால் உடன் விநியோகம் செய்ய வேண்டும்.இருப்பு இல்லையென்றால் விரைவில் வந்துவிடும், வந்ததும் விநியோகம் செய்யப்படும் என விற்பனையாளர் தெரிவிக்க வேண்டும்.

7)  மலிவு விலை பலசரக்கு உடன் விற்பனை செய்ய வேண்டும். 19 பொருட்களுக்காக காத்திருக்க வேண்டாம். இருக்கின்ற பொருட்களுக்குரிய பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பொருளை வழங்க வேண்டும்.

8) தொழிலாளர் நிவாரண பொருட்கள் புதிய பட்டியல் படி பொருட்களை எடுத்து விநியோகத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இவ்விஷயத்தை தெரியப்படுத்தி அரசின் திட்டம் நல்ல முறையில் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

Best regards,