Wednesday 31 August 2011

அன்பே!




அன்பே! எங்கு செல்கிறோம் என்பது அறியாமலே .. அழைத்தவுடன் ஆவலாய் என்னோடு தொடர்பவளே . . . காதல் எனும் ரோஜாக் கூட்டம் நமக்கு துனை வரும் என ஆனந்தம் கொண்டாயோ . . . கூப்பிட்ட குரல் கேடு கேள்வி கேட்காமல் வந்தவளே . . . நாம் போகும் பாதை கல் முள் இருந்தும் கவலையில்லாமல் என்னோடு இருகரம் பிடித்து நடப்பவளே . . . நீ நிஜம் நீ என்னை தொடர்வதால் தான் என்னவோ என்னை எனக்கு பிடிக்கிறது என்னை எனக்கு உணர்த்தியவளே என்னருமை காதலியே . . . உன் பாதம் இனி புல் தரையில் கூட பட வேண்டாம் மெதுவாய் என்னில் உறைந்து விடு என்னோடு சேர்ந்து விடு - கை வீசி நடப்போம் நிலவை தொடும் வரை - நான் உன்னோடு கடைசி வரை காதலனாய் காவலனாய் உன் கணவனாய் . . .