Thursday 18 August 2011

உண்மையான மகிழ்ச்சி எது?

* உலக சம்பந்தமான பெயருக்கும் புகழுக்கும் கவுரவத்திற்கும் ஆசைப்பட்டு உங்களுடைய நாணயத்தைத் துறக்காதீர்கள். ஒற்றுமையையும், ஒன்றாக உழைக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு எளிய மக்களிடம் அன்பு காட்டுங்கள். மானிடசேவையே மாதவன் சேவை என்பதை உணருங்கள்.
* வயதாகிவிட்டது என்ற உணர்வையும், அதனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற சோர்வையும் விட்டுத் தள்ளுங்கள். நடந்து போனதை எண்ணில் மனச்சுமையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். இருப்பதை உற்சாத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். செய்யும் செயலில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
* பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்ற உண்மையை எப்போதும் நினைவில் வைத்துக் கொளளுங்கள். பொறாமையால் மனம் புழுங்கினால் அந்த இடம் நரகம். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல எண்ணங்கள் நம் மனதில் தெய்வீக ஆற்றலை உண்டாக்குகின்றன.