Friday 26 August 2011

வணக்கம் தோழர்களே........

உண்மைதான் அருகில் இருப்பது ஒரு உயிராக இருந்தாலும் அல்லது ஒரு பொருளாக இருந்தாலும், அதனுடைய அருமை நாம் யாருக்கும் புரிவது இல்லை.....அது நம்மை விட்டு விலகியதை நாம் உணரும்போழுதுதான் அதன் அருமை நமக்கு தெரிந்து,  தாங்க முடியாத ஒரு வலியை தருகிறது, கேவலம் நாம் தினமும் உபயோக படுத்தும் ஒரு புதிய உபகரணமாக இருந்தால் கூட நமக்கு சில காலம் அதன் மீது அக்கறை இருக்கிறது......ஆனால் நம்மை இந்த உலகிற்கு அறிமுக படுத்தி நம் செயல்களை அணுவணுவாய் ரசிக்கும் அந்த தாயை நாம் மறந்தே விடுகிறோம் அவள் அருகில் இருக்கும்பொழுது.........

(தாயில் சிறந்த கோவில் ஒன்றில்லை.....ஆகையால் அவள் அருகில் இருக்கும்பொழுதே அவளின் அருமை பெருமைகளை உணர்ந்து, அவளின் விருபத்திர்க்கேற்றாற்போல் நடந்துகொள்ளுங்கள்........பெண்மையை நாம் போற்றுவதற்கு முழு காரணமே அவள் அடைந்த, மற்றும் அடையபோகும் அந்த தாய்மையை காரணமாக கொண்டுதான், தாய் என்ற சொல்லுக்கு ஈடு இணையே இல்லை இவ்வுலகில்.........தாய்மையை போற்றுவோம்............)
ஒரு தாயின் மீது அக்கறை இல்லாமல் இருந்து அவளின் இழப்பின்போது அந்த மகனுக்கு ஏற்படும் வலியைவிட, அவள் வாழும் தருணங்களில், அவள் மீது அக்கறை செலுத்திய ஒரு மகனுக்கு அந்த தாயின் இழப்பால் ஏற்படும் வலி குறைவே.........அவள் விரும்பியபடி நடந்து கொண்டோமென்ற நிம்மதியால்........