Wednesday 8 February 2012

நீ மட்டுமே வேண்டும் !

  என்னைச் சுற்றி
எல்லோரும் இருக்க
உன்னைச் சுற்றியே
எப்போதும் மனம்..
கால இடைவெளியில்
சிறைப்பட்டுக்கிடக்கிறோம்
நல விசாரிப்புக் கூட
எப்போதாவது !

சிறை உயிரற்றதைத்
தான் எரிக்கிறது
அன்பே உன் சிந்தனை
உயிரையே எரிக்கிறதே
எப்படி ?
என்னுடைய
உடல் எடையை விட
நான் சுமந்து கொண்டிருக்கும்
உன் ஞாபகங்களின்
எடை அதிகமாகிவிட்டது !

உன்னிடம் தான் என்னை
அடகு வைத்தேன்
கடைக்கண் பார்வைக்கும்
கணநேரப் புன்னகைக்கும் !
பொத்திப் பொத்தி
பத்திரப்படுத்திய
உன் புகைப்படமும்
மின்னஞ்சல்களும்..
 
கதறி அழுதாலும்
காதில் விழாதபடி
தலையணைக்குள்
முகம் புதைத்த பல இரவுகள் !
கடல் கடந்து
கனவுகளில் மட்டுமே
கட்டிப்பிடிக்கும்
காதல் ஜோடிகள் நாம்...
நீ வேண்டும்
என்று மாறி
நீ மட்டுமே வேண்டும்
என்றாகிவிட்டது வாழ்க்கை..
அன்பே
உன் மடியில் தலைவைத்து
படுத்துறங்கும் வேளையில்
நீ மடியச் சொன்னாலும்
மடிந்திடுமே என் உயிரே !   
"புன்னகையை தொலைப்பது வதம், உன் புன்னகையில் தொலைவது வரம் "