Monday 27 February 2012

உங்களைத் திருத்தவே முடியாதடா!



தமிழனாய் இருந்து தமிழனையே குறைசொல்லிக் கொண்டு திரியும் உங்களைத்தான் சொல்லுகிறேன்! முதலில் எதிரிகளை சொல்லுங்கள் . துரோகிகளை சொல்லுங்கள், தமிழனின் காயங்களை சொல்லுங்கள்!

அதைவிடுத்து...

MGR குறை சொல்லுகிறீர்கள் அவன் ஒரு மலையாளத்தான் என்று!
தேசியத் தலைவரை குறை சொல்லுகிறீர்கள் சர்வதிகாரி !
சீமானைக் குறை சொல்லுகிறீர்கள் இந்துத் தீவிர வாதி என்று!
வைக்கோ பற்றி அவதூறு எழுதுகிறீர்கள்!

இலத் தெரியாமத்தான் கேக்குறான்!
இவர்களை குறை சொல்லும் அளவுக்கு நீ தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் செய்த தியாகங்கள் என்ன?

கனக்க வேணாம் ஒன்றே ஒன்று சொல்லு????

அத நானே சொல்லுறன் நீ என்ன செய்து சாதித்தீர்கள் என்று!

முகப் புத்தகத்தில , ஏதாவது ஒரு வீர வசனம் எழுதி இருப்பீங்க!
இல்லாட்டி முகப்புத்தகத்தில தமிழன் . வீரன் ,நெருப்பு ,தீ, இடிமுழக்கம், என்று பெயர்வைத்திருப்பீர்கள்.

இதெல்லாம் அவர்களை குறைசொல்லும் அளவுக்கு நீங்கள் பெரிய தலைவர்கள் ஆகிவிட்டதாய் நினைக்க வேண்டாம்!

அவர்களைவிட தமிழர்களின் மனதில் நீங்கள் இருப்பதாக நினைக்கவும் வேண்டாம்!

உங்கட பதிவுக்கு லைக் கொடுக்கவும் பக்க வாத்தியம் போடுவதற்கு சிலர்! முடியேல என்னால!

நான் உகளை திட்டவில்லை! உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எமக்கு வேதனையைக் இருக்கிறது!

உனக்ளுக்கு ஏன் கிழே உள்ள வர்களை பற்றி எழுத முடியாது???????

௧) எங்கள் இணைத்தையே அழித்த சிங்களவனை பற்றி எழுதுங்கள்.
௨) தமிழன் கண்ட காயங்களை பற்றி எழுதுங்க!
௩) தமிழர்களின் வீர சரித்திர வரலாற்றை பற்றி எழுதுங்கள் பலர் பயன் பெறுவார்கள்!
௪) எங்கள் கூடவே இருந்து எங்களையே காட்டிக் கொடுத்த கருணா பிள்ளையான், டக்கிளஸ், கேபி...போன்ற துரோகிகளை பற்றி எழுதுங்கள்!

இதெல்லாம் செயாமல்! ஏன் தோழா உனக்கு இந்த அந்நிய புத்தி?

எங்கள் அக்கா தங்கையின் கற்பை தின்றவர்களை மறந்துவிட்டு!
தயவு செய்து கேவலமாக வாழாதீர்கள்!

ஏதாவது ஒரு பிழை பிடித்து குறைசொல்வதை நிறுத்துங்க.
எனக்குத் தெரியும் இப்ப இந்தப் பதிவிலையும் என்னில் குறை பிடிக்க தயாராக ஒருசிலர்!