Tuesday 21 February 2012

எப்போது வருவாய் என் தோழனே ?

 




எங்கே இருக்கிறாய் என்  தோழனே?

வந்து விடு!

காதலும் காமமும் தீண்டாத தூய நட்போடு

என்னை என்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவத்தோடு

என்  மகிழ்ச்சியை புன்னகையில் ஏந்திக் கொள்கிறவனாய்

என் கண்ணீரை தோள்களில் தாங்கிக் கொள்கிறவனாய்

என் சுக துக்கங்களை பங்கிட்டுக்கொள்ளும் தாயுமானவனாய்

என் கை கோர்த்து
என்னை நற்பாதையில் நடத்திச்செல்லும் தந்தையுமானவனாய்

குணங்களுக்காய் பாசத்தை மாற்றிக்கொள்ளாத பிள்ளையாய்

வாழ்க்கை பயணம் முழுமைக்கும்
வழிநடத்துபவனாய் இருக்க

எப்போது வருவாய் என் தோழனே ?