Sunday 21 June 2020

இன்று சூரிய கிரகணம்..!! 🌗

 இன்று சூரிய கிரகணம்..!! 🌗


🌞வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21) நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

⭕சூரிய கிரகணம் நிகழும் நேரம் :

🌞சூரிய கிரகணம் தமிழ்நாட்டில்,

🌞காலை 10.22 மணிக்கு தொடங்குகிறது.

🌞மதியம் 11.59 மணிக்கு உச்சத்தை அடைகிறது.

🌞பிற்பகல் 01.41 மணிக்கு முடிவடைகிறது.

⭕எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்?

🌞ரோகிணி

🌞மிருகசீரிஷம்

🌞திருவாதிரை

🌞அஸ்தம்

🌞சித்திரை

🌞சுவாதி

🌞திருவோணம்

🌞அவிட்டம்

🌞சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

⭕சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?

🌞வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக்கூடாது.

🌞தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் பார்ப்பது பாதுகாப்பானது.

🌞சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும்போது நிரந்தர கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

⭕சூரிய கிரகணம் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

🌞கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

🌞உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭕சூரிய கிரகணத்தின்போது என்ன செய்ய வேண்டும்?

🌞கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சூரிய கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

🌞சிவ பூஜை செய்பவர்களும் கிரகணத்தின்போது பூஜை செய்வது நல்லது.

🌞சூரிய கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

⭕என்ன செய்யக்கூடாது?

🌞கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது.

🌞அசைவம் சாப்பிடக்கூடாது.

🌞கிரகணத்தின் போது பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

🌞ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

🌞கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

🌞கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். பெண் இந்த சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

🌞புனிதமான செயல்களை செய்யக்கூடாது.

⭕கர்ப்பிணி பெண்களுக்கு :

🌞கர்ப்பிணி பெண்கள் கிரகண காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

🌞நகம் வெட்டக்கூடாது.

🌞கர்ப்பிணி பெண்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடாது.

🌞கிரகணத்தின்போது உறங்கக்கூடாது.

🌞மேலும், கிரகண நேரத்தின்போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர்வீச்சுக்கள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

⭕சூரிய கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

🌞வீட்டை சுத்தம் செய்வது அவசியம்.

🌞மேலும், பூஜையறையை சுத்தம் செய்து, சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

🌞கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாக்கும் என்பதால் புதியதாக உணவை சமைத்து சாப்பிடவும்.

🌞கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு உணவு சாப்பிடலாம்.

🌞ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🌞கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.Best regards,