Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Thursday, 28 March 2019

வைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய ஒன்று

வைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய ஒன்று

வைகோ, வேல்முருகன் மட்டும் இதற்கு குரல் கொடுத்தால் போதாது, BJP அரசு தமிழர்களுக்கு இழைத்து உள்ள மாபெரும் துரோகம், ஆளும் மத்திய அரசு தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஒடுக்க நினைக்கிறது.

நாம் இனியும் விழித்து கொள்ளவில்லை என்றால், நாளை தமிழகம் நம்ம கையில் இல்லை!

அவசியம் வைகோவின் அறிக்கையை முழுவதும் படிக்கவும், இந்த செய்தியை மக்கள் இடத்தில் கொண்டுசெல்ல வேண்டும் அனைத்து வாட்ஸ் ஆப் குரூபில்ழும் அனுப்பவும், அதிகம் share செய்து மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்.

இனி அறிக்கை:

இரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில்
வடமாநிலத்தவர் பணி நியமனம்

வைகோ கண்டனம்

தென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.

குறிப்பாக தென்னக இரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத்தவர்களையே பணி நியமனம் செய்து வருகிறது.

2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. இனிமேல் அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, “விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இதனை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை தென்னக இரயில்வே நிராகரித்தது. ஆனால் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்தனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.

இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8

Best regards,

Saturday, 15 December 2012

உண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம் இது. வாழ்த்துகள்!

இவரைப் போன்ற ஒருவர்தான் இன்றைய தேவை.
நாணயம், யோக்கியம் போன்றவற்றுக்கு அர்த்தமே தெரியாத இன்
றைய ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் தலைவர்களுக்கு மத்தியில் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற தனது கொள்கைகளை, பல்வேறு ஏளனம், கேலிகளைத் தாண்டி இன்னமும் வலுவாகப் பற்றிக் கொண்டிருப்பவர் வைகோ, இடையில் சில தடுமாற்றங்களுக்குள்ளானாலும்!
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியே தீர வேண்டும். அதுதான் வளர்ச்சி அரசியல் என்று புதுப்புது இலக்கணங்கள் படைக்கும் பச்சோந்திகளைப் பார்த்தே பழகிய வாக்காளர் கண்களுக்கு, தன்மானம் முக்கியம், தொகுதிகளுக்காக தரமிழந்து கையேந்த முடியாது என சிலிர்த்துக் கொண்டு நிற்கும் வைகோ ஒரு ஆச்சர்யமாக, அல்லது பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாகத்தான் தெரிவார். அது வைகோவின் தவறல்ல!
ஆனால் அவரை ஆரம்பமுதலே பார்க்கும் நமக்கு அப்படித் தெரியவில்லை. இத்தனைக் காலமும் சுற்றியிருப்பவர்களின் பதவி ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி, கட்சியைக் காப்பாற்றக் கருதிசில குறைந்தபட்ச சமரசங்களோடு கூட்டணி கண்டு வந்தார் வைகோ என்பதுதான் உண்மை.
ஆனால் அப்படி பதவி ஆசைக்காக அவரை நச்சரித்து வந்த கூட்டம் இப்போது எதிர் முகாமில், வாங்கிய கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள். வைகோவுக்கு இனி இழக்க எதுவுமில்லை. ஆனால் பெறுவதற்குதமிழகம்இருக்கிறது. இப்போது அவர் எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கலாம். அதற்கு இப்போது அவருக்குக் கிடைத்துள்ள சுயமரியாதை மற்றும் யோக்கியர் என்ற இமேஜ் பெருமளவு உதவும்.

இன்றைய தேதிக்கு திமுக அதிமுக கூட்டணிகளின் சந்தர்ப்பவாதங்கள், சர்வாதிகார்ப் போக்குகள் மற்றும் ஊழல்களைப் பார்த்து வெறுத்துப் போன பெரிய இளைஞர் கூட்டத்துக்கு லேசான நம்பிக்கைக் கீற்று வைகோ மூலம் தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் மிகையல்ல.
இந்த இளைஞர்களை மதிமுகவின் தொண்டர் பலமாக மாற்றிக் கொள்வதுதான், வைகோவின் அடுத்த கட்ட இலக்காக இருக்க வேண்டும். அதுவே, மதிமுக என்ற மாற்று அரசியல் சக்தியை நிலைநிறுத்த உதவும். நல்ல படிப்பாளி, நிர்வாகம் தெரிந்தவர், தொண்டர்களிடம் ஆளுமை மிக்க தலைவர், உண்மையான இன உணர்வாளர் என இத்தனை சிறப்புகள் இருந்தும் இவரால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க முடியாமல் போனது தமிழக வாக்காளர்களின் துரதிருஷ்டம்.
இந்த நேரத்தில் அவருக்கு ஒரு முக்கிய கோரிக்கையையும் தமிழக மக்கள் சார்பில் வைக்கலாம். ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் மனிதாபிமானி என்ற பெயரைப் பெற்ற வைகோ, இனி இங்குள்ள பிரச்சினைகளிலும் முழுவீச்சில் களமிறங்க வேண்டும்.
அடுத்த தேர்தலில் போட்டியிடுகிற அணிகளுள் வைகோவின் தலைமையிலான மதிமுக அணியும் ஒன்று என்ற நிலைக்கு அவர் இப்போதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமே, கூட்டணியிலிருந்து அவர் விலகி நிற்பது. தாமதம் என்றாலும், இது சரியான முடிவுதான்.
இதுதான் வைகோவை பெரும் சக்தியாக மாற்ற உதவும்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லைஆனால் ஆளுங்கட்சியாகும்போது ராசியான நிறங்கள்மட்டுமே வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதானால்தான் இத்தனை நாள் அவருக்கு கவசமாகத் தெரிந்த வைகோவின் ஈழ ஆதரவுக் குரல், இப்போது கசக்கிறது.
அரசியல் களத்தில் வைகோவை வீழ்த்துவதையே தனது கடமையாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது திமுக. ஜெயலலிதாவும் இதில் கருமமே கண்ணாக இருக்கிறார். பணத்தை வாரி இறைத்தேனும் அவரை விருதுநகரில் தோற்கடிக்கிறது காங்கிரஸ்.
வைகோவைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட பெரும் ஆலைகளின் முதலாளிகள் பல கோடிகளை வாரியிறைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவர்களின் கொள்ளைகளுக்கு வைகோ எந்த அளவு இடையூறாக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!
ஆக, அவர் நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றத்துக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பத் தெளிவாக உள்ளார்கள். காரணம் வைகோவின் கேள்விகள் தங்களை நோக்கிப் பாயும் என்ற பயம். நேர்மையாளனைப் பார்த்து பயப்படுபவர்கள் யாராக இருப்பார்கள்பரம அயோக்கியர்கள்தானே!
நல்லது, புதிய தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள் வைகோ!