Saturday 8 December 2012

ஒழியட்டும் வரதட்சனை ,,,!

தாலிக்கொடி ஏறி
தாரகையைபோல்
மின்னிவர

கன்னியரை கேட்கும்
வரதட்ச்சனையே
காளையர் கேட்கும்
கல்யாண கட்டணம்-இது ஒரு

காட்டானை
மது மலர் பூக்கும்
கன்னியர் தோட்டத்தை
கனப்பொழுதில் நாசப்படுத்தும்

தம்பதியை பிரிப்பதில்-இது
ஆடிவரும் ஆடிமாதம்
உலகில் உள்ள
ஏழைகளுக்கோ-இது
உள்ளத்தில் ஏற்படும்
உளப்போர்

உழைப்பின் கரங்களே
உறைந்த பின் எமை ஆழ்வது
வறண்டு போகும்
வரதட்சனை அல்ல

உன்னையாய்
உனை நேசிக்கும் ஒரு சில
உள்ளங்கள் மட்டுமே

உண்மைகளை உணர்ந்து
உயரட்டும் உங்கள்
உன்னத நம்பிக்கை

ஒழியட்டும் வரதட்சனை
ஓயாமல் பூக்கட்டும்
கன்னியர் தோட்டம் அன்பால் ,,,!