Friday 25 January 2013

இந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -

 மதம் வேண்டாம் என்று வாழும் மனிதர்களை போல் நானும் ஒருவன் எம்மதமும் சம்மதமே என்று சொல்லிக்கொள்ளும் மானிடனும் நான்..ஒரு இந்துவாக பிறந்து இந்துவாக வளர்ந்து இந்துவாகவே வாழ்ந்து கொண்டும் இருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் ..தினம் தினம் கோவிலுக்கு சென்று ,பூசைகள் பல செய்து,காவடிகள் பல எடுத்து,மூட நம்பிக்கைகள் பல கொண்டு ,கோவிலே சரணம் என்று வாழும் மனிதன் இல்லை நான்.கோவிலும் இல்லை சாமியும் இல்லை எம்மை பெற்றெடுத்த தாய் தந்தையே எமது கோவில் என வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் நான்..

இன்று இந்து மதம் பெரும் இழிவு, சாக்கடை,மூடநம்பிக்கை ,கள்ள சாமியார்கள் என்ற சக்கரத்துக்குள் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறது.இதனால் பல பல ஆயிரம் மக்கள் இந்து மதத்தை வெறுக்க வேண்டிய சுழலும்,தவிர்க்க வேண்டிய சூழலிலும் இருக்கின்றனர்.நான் இலங்கை, ஈழம் என்னும் தமிழ் தேசத்தில் வாழ்ந்து வருவதால் எமது காலாச்சாரம்,பண்பாடு,மொழி,இனம் ,இத்தோடு பின்னி பிணைந்தது இந்து மதம்.இலங்கையை பொறுத்த வரை தமிழ் மக்கள் பெரும் மனித அழிவுக்கும்,உடைமைகள்,அழிவுக்கும் முகம் கொடுத்தவண்ணம் உள்ளார்கள்.எதிரி பல வழிகளில் தமிழர்களை அடிமைபடுத்த நினைக்கின்றான்,அல்லது அழிக்க நினைக்கின்றான்,மொழி,பண்பாடு,மதம்,இப்படி பல வழிகளிலும் தொடரும் இந்த அழிப்பு போர்.ஆனால் எமது தமிழர்கள் சிலர் இந்து மதம் சாக்கடை என்றும்,இந்து மதத்தை ஒழிப்போம் என்றும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.அவர்கள் அழிக்க நினைப்பது இந்து மதத்தை அல்ல மாறாக தமிழ் இனத்தை.தமிழ் இனத்தை அழிக்க நினைப்பவனும்,இந்து மதத்தை அழிக்க நினைப்பவனும் ஒரே இனம்.இலங்கையை பொறுத்த வரை இந்து மதம் அழிக்கப்படும் என்றால் தமிழ் இனம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.இலங்கையில் புத்த மக்கள் முதலாவதாகவும்,இந்து மக்கள் இரண்டாவதாகவும்,கிறிஸ்தவர்கள் முன்றவதாகவும்,இஸ்லாம் மக்கள் நான்கவதாகவும் இருப்பதாக ஒரு கருத்து கணிப்பு உள்ளது.

இலங்கையில் இந்து மதம் அழிக்கப்படும் என்றால்.ஒன்று அவர்கள் புத்த மதத்தை தழுவ வேண்டும்,அல்லது கிறிஸ்தவர்களாக மாற வேண்டும்,அல்லது இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும்,இதில் ஏது நடந்தாலும் இலங்கையில் தமிழ் இனம் வரலாறு,பண்பாடு,எழுந்து போய்விடும்.பின்பு நாம் தமிழர்கள் என்று சொல்லி கொள்ள எதுவுமே இருக்காது.ஆனாலும் இதுவும் ஒரு அடிமை வாழ்வுதான்.இலங்கையில் தமிழர்கள் இந்துக்கள் என்பதுக்கு பல சான்றுகள் உள்ளது.ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னரே கிறிஸ்தவ மதம் இலங்கைக்குள் வந்தது,அதே போல் இஸ்லாம் மதம் இலங்கைக்குள் பரப்ப பட்டது..

இன்று இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதுக்கு வரலாற்று சின்னங்களாக கோவில்களும் என்று சொல்லி கொள்ளலாம்.நாம் நினைக்கலாம் இந்து மதம் மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறது,அதனால் அதை அடியோடு வெறுத்து நாம் மதம் அற்றவர்களாக வாழலாம் என்று.நாங்கள் தமிழர்களாக இருந்தால் இந்து மதத்தை காப்பாற்றியே ஆகவேண்டும்.எம்மை ஆண்டவர்களும் சரி மாவீரர்களாக வாழ்ந்தவர்களும் சரி இந்து மதத்தை அழிக்க நினைக்கவில்லை.எமது கலை ,பண்பாடு,மொழி,இவற்றோடு பின்னி பிணைந்தது இந்து மதம்.இதை அழிக்க நினைத்தால் நாம் அழிந்து விடுவோம்.இலங்கையில் இந்துவாக வாழும் உங்களிடம் ஒரு கேள்வி இந்து மதத்தை அழித்து விட்டு நீங்கள் எப்படி வாழ போகின்றீர்கள்? புத்தனாகவா?? இஸ்லாமியனாகவா???இல்லை கிறிஸ்தவரா? இந்து,இஸ்லாம்,கிறிஸ்து,இவை எல்லாம் தமிழன் என்ற ஒரே கோட்டில் தான் பயணிக்கின்றது..

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.ஆனால் எமது வரலாற்று சின்னங்களை நாம் அழிக்க முனைய கூடாது அது எமக்கே அழிவை தேடி தரும்.

தவறுகளை திருத்த வேண்டும் கண்டிக்க வேண்டும்.மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.போலி சாமியார்களை ஒழிக்க வேண்டும்.அதை விட்டு இந்து மதத்தை ஒழிக்க நினைத்தால் நாம் அழிவது உறுதி..

இந்து மதத்தை அழிக்க நினைப்பவனும்.தமிழனை அழிக்க நினைப்பவனும் ஒரே ஜாதி ..

நன்றி ..