திருநீறு விளக்கம்
 
 
 
  ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது 
பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது. 
 
  வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.
 
  திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
  1) கல்பம்
  கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் 
பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து 
எடுப்பதே கல்பத் திருநீறு.
 
  2) அணுகல்பம்
  காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு
 
  3) உபகல்பம்
  மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த 
சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து 
எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு
 
  4) அகல்பம்
  அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு 
 
  "மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + 
திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. 
 
  நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
  புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண 
வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற 
வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை 
இடுவர். 
 
  புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
 
  உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
  ------------------------------------------------------------------------------------
  1) தலை நடுவில் (உச்சி)
  2) நெற்றி
  3) மார்பு
  4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
  5) இடது தோள்
  6) வலது தோள்
  7) இடது கையின் நடுவில்
  வலது கையின் நடுவில்
  9) இடது மணிக்கட்டு
  10) வலது மணிக்கட்டு
  11) இடது இடுப்பு
  12) வலது இடுப்பு
  13) இடது கால் நடுவில்
  14) வலது கால் நடுவில்
  15) முதுகுக்குக் கீழ்
  16) கழுத்து
  17) வலது காதில் ஒரு பொட்டு 
  18) இடது காதில் ஒரு பொட்டு 
 
  பலன்கள்
  -------------
  திருநீறு அணிவதால் 
  தடையற்ற இறைச் சிந்தனை, 
  உயர்ந்த நற்குணங்கள், 
  குறைவற்ற செல்வம், 
  நல்வாக்கு, 
  நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். 
  உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். 
  பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், 
  தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும். 
 
  இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
  -----------------------------------------------------------------------------------
  கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
  மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
  தங்கா வினைகளும் சாரும் சிவகதி
  சிங்கார மான திருவடி சேர்வரே!
