Thursday 28 February 2019

மக்களும், கோழியும் 2 ஆயிரம் ரூபாயும்!

ஒரு குட்டி கதை :

மக்களும், கோழியும் 2 ஆயிரம் ரூபாயும்! 👇👇👇

ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து, அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது. துடிதுடித்தது.

முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார். பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,.. மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி... அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.

அப்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறினார், "இதுதான் அரசியல், மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு, கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள்" என்று.

இதைத்தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. பல குளறுபடிகள் செய்து , தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மெரீனா போராட்ட காரர்கள் மீது தாக்குதல்,இப்படி பல வகையில் தமிழக மக்களை வஞ்சித்து தற்போது 2000 ரூபாய் கொடுத்து மக்களை தன்பக்கம் திருப்பி வரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ஆதலால் சிந்திப்போம். 2000 ரூ பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அது மக்கள் பணம். அதே வேளை இப்போது எதற்காக தரப்படுகிறது என புரிந்து தேர்தலை சந்திப்போம்.

மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும்.

Best regards,