Friday 1 March 2019

*தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......

*தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......
.........................................
கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச்
சொன்னபோது ,

பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது ,

ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க...

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி என்றபோது ,

பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க......

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

பாசிப் பயறோ கடலை மாவோ
அரைத்துக்குளி என்ற போது ,

லிரில் , லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோள் சுறுங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு ,

ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

இருமலோ தும்மலோ வந்தபோது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்தபோது ,

முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு ,

ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்
செடி வளர்க்க.....

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

வயிற்று வலி என்றபோது
வெறும் வயிற்றில் வெந்தயக் களியோ கற்றாழைச் சாறோ கொண்டு வந்து தந்தபோது
சீறி தூக்கி எறிந்து ,

ப்ருஃபென்னும் பெயின்கில்லரும் போட்டு கருப்பை பளுதடைந்த பின்பு ,

ஓடுகின்றேன் கற்றாழை
வளர்க்க......

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மணமாய் தந்தபோது ,

சன்ஃபிளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக் கூறி முகத்தில் அறைய
பதிலுரைத்துவிட்டு ,

இன்று
உடல் நோய்க்கு இடமாக ஓடுகின்றேன்
செக்கு நோக்கி .....

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ,

ஆர்வோ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமானபின்பு

ஓடுகின்றேன் மண்பானை
வாங்க.....

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.......

படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி ,

கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து ,

மாடிகளில்
குளீருட்டப்பட்ட அறைக்கு இலட்ச
இலட்சமாய்க் கொட்டி , நடைப்பிணமாக

வாழ்வில் எங்கே சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கெங்கோ திாிந்து அலைகிறேன்.....

*தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.........

****

"மூத்தோா் சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும்
முன்னே கசக்கும் ,
பின்னே இனிக்கும்.."

Best regards,