Sunday 7 October 2018

கனமழை...

கனமழை...
மக்கள் என்ன செய்ய வேண்டும்?

1. அன்றைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஒரு நாள் முன்பே வாங்கி வைத்துக் கொள்ளவும்
2. அன்று முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படும். எனவே முந்தைய நாள் இரவே வீட்டில் உள்ள அனைவர்களுடைய செல்போனுக்கும் புல் சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளவும்.
3. வீட்டில் 4 பேர் இருந்தால் ஒருவருடைய செல்போனை மட்டும் தொடர்பில் வைக்கவும். மற்ற மூவரின் செல்போனை ஆப் செய்து வைக்கவும். தொடர்பில் இருக்கும் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனால் இரண்டாமவரின் செல்போனை ஆன் செய்து கொள்ளவும்.
4. டிக்கட் முன்பதிவு பணம் வீணாகி விடுமே என்பதற்காக பயணம் செல்லாதீர்கள். கூடுமானவரை வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
5. மரங்களுக்கு அடியில் நிற்காதீர்கள், உங்கள் வாகனங்களை பார்க் செய்யாதீர்கள்.
6. மீட்பு குழுவினர் வந்து தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் என்பது நடக்காத காரியம். எனவே ஆபத்து ஏற்பட்டால் அக்கம் பக்கத்தினர் உங்களுக்குள் உதவி கொள்ளுங்கள்.

Best regards,