Friday 19 October 2018

MeToo நினைவுகள்

MeToo நினைவுகள்

இந்திரனால் கல்லான
அகலிகை சொல்கிறாள்... meToo

தருமனால் பணயம் வைக்கப்பட்டு, துச்சாதனனால் சேலை உருவப்பட்ட
பாஞ்சாலி சொல்கிறாள்... meToo

பீஷ்மணால் வாழ்விழந்த
அம்பை சொல்கிறாள்...  meToo

வியாசகனால் விருப்பமின்றி வயிற்றுப்பிள்ளையை சுமந்த
அம்பிகா_அம்பாலிகா சொல்கிறார்கள்... meToo

சூரியனால் கர்ப்பமாகி
கர்ணனை பெற்ற
குந்தி சொல்கிறாள்... meToo

ராமனால் நெருப்பில் தள்ளப்பட்ட
சீதை சொல்கிறாள்... meToo

லட்சுமணனால் மூக்கறுப்பட்ட
சூர்ப்பனகை சொல்கிறாள்... meToo

சிவனால் வன்புணர்வு செய்யப்பட்ட
பார்வதி சொல்கிறாள்... meToo

கிருஷ்ணனின் காம விளையாட்டுக்கு பலியான
கோபியர்கள் சொல்கிறார்கள்... meToo

முலைவரிக்கு பதில் முலையையே அறுத்து தந்த...
நாஞ்செலி சொல்கிறாள்... meToo

2000 ஆண்டுகளாக பார்ப்பனர்களாலும், உயர் சாதி ஆண்களாலும் வன்புணர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான
தேவதாசிகள் சொல்கிறார்கள்...meToo

காஞ்சி மடத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் சொல்லுகிறார்கள் me Too

ஒரு பாப்பான் கோவிலுக்குள் வைத்து கற்பழித்தானே அத்தனைப் பெண்களும் சொல்லுகிறார்கள் meToo

சங்கராச்சாரி குறித்து அனுராதா ரமணன் சொல்லுகிறார் meToo

கோயிலுக்குள் இருந்தே ஆஷிபா கதறுக்கிறாள்... meToo

இந்துத்துவா அமைப்புகளால்
வட மாநிலங்களில் அடிச்சு அம்மணமாக ஓடவிட்ட
தலித் பெண்கள் சொல்லுகிறார்கள்  meToo

காவல்நிலையத்தில் காவலர்களால் குதறிப் போடப்பட்ட பத்மினி சொல்கிறாள்... meToo

காதலனாலும், அவன் நண்பர்களாலும் வன்புணர்வுக்குள்ளாகி மரணித்த நந்தினி சொல்கிறாள்... meToo

இந்திய ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, ஜார்க்கண்ட் போன்ற மாநில சகோதரிகள் சொல்கிறார்கள்... meToo

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் வனத்துறையும், அதிரடிப்படையும் வன்புணர்ச்சி செய்து கொன்ற பெண்கள் சொல்கிறார்கள்... meToo

ஈழத்தில் இந்திய அமைதிப்படை நாசமாக்கிய தமிழீழப் பெண்கள் சொல்கிறார்கள்... me Too

அப்பல்லாம் குரல் இல்லாத ஊமைகள், சின்மயி சொல்லிட்டாராம்  me Too
ஊமைகளின் குரல் வானுயரக் கேட்கிறது.

Best regards,