Tuesday 16 October 2018

மழைக்கால நோய்களுக்கான மருத்துவம்

மழைக்கால நோய்களுக்கான மருத்துவம்


1. அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பின்னர், விரலி மஞ்சளை நெருப்பில் காட்டும்போது அதிலிருந்து புகை வெளிவரும். இந்த புகையை மூக்கின் ஒவ்வொரு நாசியிலும் தலா ஐந்து முறை சுவாசிக்கும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும். கனமழையால் ஏற்பட்ட குளிர், மழையில் நனைவது போன்றவற்றால் தலையில் நீர்கோர்த்து தலைவலி வருகிறது. ஈரமான காற்றை சுவாசிப்பதால் தலைபாரம் இருக்கும். மூக்கடைப்பு, நீர்கோர்வை போன்றவை குணமாகும்.

2. ஒருபிடி தும்பை இலை மற்றும் தும்பைபூக்கள் எடுத்துக் கொண்டு அரை ஸ்பூன் அதிமதுர பொடி சேர்த்து ஒரு டம்ளர்  நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து அதிகாலை அல்லது மாலையில் குடித்தால் அதிக நேரம் ஈரத்தில் இருப்பது, மழையில் நனைவது, அடிக்கடி தலைக்கு நீர் ஊற்றி குளிப்பது, பனியில் இருப்பது போன்றவற்றால் மூக்கடைப்பு, தலைவலி போன்றவை குணமாகும்.

3. மூன்று வெற்றிலைகளை துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 10 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அதிகாலையில் குடிக்க ஜலதோஷம் குணமாகும். குழந்தைகளுக்கு இதில் பாதி அளவுக்கு பொருட்கள் சேர்த்து தயாரித்து கொடுக்கவும்.

Best regards,