Sunday 21 October 2018

மனைவி

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது "யோகா".

மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது "தியானம்".

**யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

"இனி இவனை அடிக்க முடியாதுன்னு" பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான்

#திருமணம்

மாப்பிள்ளை வீட்டில், "மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு" என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.
ஆனால்,
பெண் வீட்டில் "பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு" என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
**ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.
உங்கள் கணவரை நேசியுங்கள்!
* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.👍👍
ஏனென்றால்.........,
"கணவனை கொல்வது, சட்டப்படி குற்றம்"..!!
மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!
1. நிறைய "அதிகாரம்" இருப்பதால்.
2. நிறைய இடங்களில் "புரிந்தும், புரியாமலும்" இருப்பதால்.

3. இரண்டு "அடி"யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

Best regards,