Thursday 15 November 2018

மின் வாரியத்தின் எச்சரிக்கை

மின் வாரியத்தின் எச்சரிக்கை
**************
இடி, மின்னலின்போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

வட கிழக்குப்பருவமழை ,மற்றும்வெள்ள
காலங்களில்ஏற்படும்மின்விபத்துகளைத் தவிர்க்கபொதுமக்களுக்கானவிழிப்புணர்வு குறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.நா. சங்கரன்அவர்கள் தெரிவித்திருப்பது:

மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், மின் கம்பத் தாங்கு கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.மழையாலும்,
பெருங்காற்றாலும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், அதன் அருகே செல்ல வேண்டாம். அதுகுறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தவறாமல் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.

இடி, மின்னலின்போது திறந்தவெளியில் இருக்க வேண்டாம்.அத்தருணத்தில் உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்றவாகனங்களில்தஞ்சம்அடையலாம்.இடி, மின்னலின்போது குடிசை
வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடைய வேண்டாம்.

மேலும்,தண்ணீர்தேங்கியுள்ளபகுதிளை
விட்டு அகலவேண்டும்.இடி,மின்னலின்
போதுதஞ்சமடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இடி, மின்னலின்போதுடிவி,மிக்சி,கணினி
கிரைன்டர்,தொலைபேசிபோன்றவற்றை
பயன்படுத்த வேண்டாம். மேலும்திறந்த
வெளியில்உள்ளஜன்னல்,கதவுபோன்றவற்றின்அருகில் இருக்க வேண்டாம்.
புயல்.மழை.வெள்ளம் காலங்களில் கவனமுடன் இருப்போம்.விபத்துகளை தடுப்போம......

Best regards,