Friday 14 December 2018

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...
1. பதினான்கு ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?
2. ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
3. ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
4. ரூபாய் 25 க்கு அரிசி வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?
6. மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?
ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;
சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதி சகோதரி ஆக முடியும்;
நேரு மாமா ஆக முடியும்
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனால்....
மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது...
இவ்வளவு வெறுப்பு ஏன்?
உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.
உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.
ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.
இன்னமும் "அவன் திருடுகிறான்,
இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்*
உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.
இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*
நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்...
அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை பலப்படுத்தியதில்
*இன்று ஜீரோ மின்வெட்டு.*
60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.
ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு.... ஒவ்வொரு சாமானியனுக்கும்.
தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.
ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.
நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.
விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை. E-commerce மின் வர்த்தகம்.
இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*
காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்... துறை அறிவே இல்லாத பொழுதும் "ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..
உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.
அந்த கோபம் இப்போது மோடி மீது...
மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
இன்னுமொன்று...
அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா போகிறீர்கள்...?
வாக்குச்சீட்டு போலி என்றோ ,
வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்...?
முதலில் பார்வையை *முடிந்தால்* சரி செய்யுங்கள்.
தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.....
உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் " பச்சைத் " தமிழரல்ல இனி இவர்கள்...
என்ன நடந்திருக்கிறது?
எப்படி நடந்திருக்கிறது ?
என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் " மெச்சும் " தமிழர்கள் ...
உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.
"மோடி" *மந்திரி அல்ல.....!*
அவர் ஒரு
*கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்

Best regards,