Monday 30 March 2020

“நம் முன்னோர்கள் வாழ்ந்த முறை..

“நம் முன்னோர்கள் வாழ்ந்த முறை..

1.கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்? -பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்..

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்...

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்...

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கை,கால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள். ஏன? -கிருமிகள்...

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்...

6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்...

7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் காலையிலேயே குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்...

8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்...

9.மண்,செம்பு,வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்...

10. வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்...

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது...

இன்று... உறவினர்களை கூட வீட்டுக்குள் அனுமதிக்க முடியாத நிலை...


Note:
(அந்த 7 & 8 வது points க்கு Association பொறுப்பல்ல...)🤫🤕Best regards,