Sunday 8 March 2020

மகளிர் கவனத்திற்கு...

மகளிர் கவனத்திற்கு...

1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியின் ஆட்சியில் வழங்கப்பட்டது

2.பெண்களுக்கான சொத்துரிமை இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

3.இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திராவிட கட்சி ஆட்சி.

4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

5.பெண்களுக்கான திருமண உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

6.பெண்களுக்கான மகபேறு உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

7.பெண்கள் காவல் துறையில் இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

8.பெண்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

9.பெண்களுக்கான சுயஉதவி குழுக்களை அமைத்து சுழல் நிதி அளித்து இந்தியாவிலே தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் முதலிடம் வகித்தது

10.பெண்களுக்காக தாய் சேய் நலம் மையம் அமைத்தது இந்தியாவிலேயே தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் தான்

11.பெண்கள்  இந்து அறநிலைத்துறையில் இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

12.கைம்பெண்களுக்கு இலவச தையல் மிஷின் இந்தியாவிலேயே தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது.

13.திருமணமாகாத பெண்களுக்கு இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

14.பெண்களுக்கான முதியோர் ஊக்கத்தொகை இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

15.பெண்களையும் அச்சகராக நியமித்து இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியில் அரசானை பிறப்பிக்கப்பட்டது.

16.கைம்பெண்களுக்கு அரசு தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கி இந்தியாவிலேயே முதன் முதல் தமிழ்நாட்டில் திராவிட கட்சி ஆட்சியில் சலுகை அளிக்கப்பட்டது.

17. தொட்டில் குழந்தை திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டு பெண் சிசு கொலை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவரப்பட்டது...

18. பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது.

19. திராவிட ஆட்சியில் பெண் குழந்தை பாதுகாப்பு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண்குழந்தையின் பெயரில், வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து, வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இது, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கு பேருதவியாக இருக்கும். லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

20. பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திராவிட ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், கிராமங்களில் உள்ள இளம் பெண்கள் முதல் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகள்வரை, பலதரப்பட்ட பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் பெண்களின் சுகாதாரத்திற்கான சிறந்த முன்னுதாரணத் திட்டமாக இத்திட்டம் போற்றப்படுகிறது.

21. உடல் எடைக்கும், உடல் நலனுக்கும் இடையே உள்ள தொடர்பை மனதில் கொண்டு, பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் திராவிட ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடைகள் கண்காணிக்கப்பட்டு, எடை குறைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் காக்கப்படுகிறது.

22. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது...

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும், அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்களைக் கொண்ட 'அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்' என்ற புதிய திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது . ஏழை, எளிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், நலமும் வளமும் பெற்று வளர, இத்திட்டம் உதவி வருகிறது.

23. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது...

பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும், பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர்,  2003 ஆம் ஆண்டு பெண்களை மட்டுமே கொண்ட சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது.

24. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது...

கைக்குழந்தைகளுடன் பெண்கள் வெளியில் செல்வதே பெரும்பாடானது. அதிலும் பாலூட்டும் தாய்மார்கள், பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாமல் தவிப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுக்கப்பட்டது.

25. மகப்பேறு மாதம் வரை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தரும் ’அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்’ திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டது... இதன் மூலம், மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க, 11 வகை மூலிகை மருந்துகள் அடங்கிய ’மகப்பேறு சஞ்சீவி’, அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், கருவுற்ற பெண்களின் ஆரோக்கியமும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

26. பெண்களுக்கான விருதுத் திட்டங்கள் திராவிட ஆட்சியில் அமலாக்கப்பட்டன.

வீர, தீரச் செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய, ‘கல்பனா சாவ்லா’ விருது, சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு, 1 லட்சம் ரூபாயோடு, 8 கிராம் தங்கப் பதக்கமும் அடங்கிய ‘அவ்வையார் விருது’ ஆகியவை திராவிட ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.  இந்த விருதுகள், பெண்களின் திறனை உலகம் அறிய, வகை செய்கின்றன.

தமிழகத்தில் பெண்கள் நலனுக்காகவும், பெண்களை போற்றிப் புகழும் வகையிலும் திராவிட ஆட்சிகளால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முழுதும் திரட்டி பட்டியலிடுவதற்கு இங்கு இடமும் நேரமும் போதாது...

அனைத்து மகளிருக்கும் நாம் அனைவரும் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்... 🙂💖💐



மகளிர் தின வாழ்த்துகள். 💟 💐 💐

- பகிர்வுBest regards,