Monday 11 March 2019

ரபேல் #ஒரு #பொன்முட்டையிடும் #வாத்து

ரபேல் #ஒரு #பொன்முட்டையிடும் #வாத்து

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கர்னல் சுந்தர் அவர்கள்ஒரு டிவி விவாதத்தில்  சொன்ன தகவல் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே

1) 15 அடுக்கு வலிமையான பாதுகாப்பு அமைப்பு உள்ள ஒரு பாதுகாப்பு துறை அமைச்சகத்திலிருந்து நாட்டின் உயரிய மிக ரகசியமான ஆவணங்கள் காணாமல் போனதாக ஒரு அட்டார்னி ஜென்ரல் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் சொன்னது  உலகில்  இது தான் முதல் முறை

2) இதற்கு முழுக்க முழுக்க நிர்மலா சீதாராமனே பொறுப்பு

3) பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு ராணுவ வீரர் கூட கிடையாது முழுக்க முழுக்க ஐ ஏ எஸ் அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள்

4) ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 3லட்சத்து75ஆயிரம் கோடிகள்... ஆனால் செலவழித்து இருப்பது வெறும் 50000 ஆயிரம் கோடிகள் மட்டுமே.. மீதி நிதி எங்கே

5) இந்த கோப்புகள் காணாமல் போனதாக 2நாட்களுக்கு முன்பு வரை யாருக்கும் தெரியாது... அப்படின்னா இந்த திருட்டு எப்ப நடந்துச்சு

6) சுப்ரீம் கோர்ட்ல் இவர்கள் கொடுத்த தகவல்கள் ஓன்று கூட உண்மையில்லை எப்படியென்றால்...

7) ரபேல் வாங்கியிருப்பது காங்கிரஸ் ஆட்சியை விடா 2.8% குறைவு என்றும் அதை பொது நல கமிட்டிக்கு தெரிவித்து விட்டதாக CAG ஆடிட்டர் ஜெனரலிடமும் ... CAG அதை ஒப்புக்கொண்டதாக  சுப்ரீம் கோர்ட்டிடமும் சொல்லி தீர்ப்பை வாங்கி விட்டார்கள்...

8) பொது நல கமிட்டிக்கு தலைவர் மல்லிகார்ஜுனகார்கே அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அந்த ஆவணத்தில் உங்கள் கையெழுத்தே இல்லயே ன்னு கேக்க

9) கார்கே அட்டர்னி ஜெனரல்  kk வேணுகோபால் அய்யங்காரிடம் நீங்க எப்போ என்னோட டேபிள்க்கு அனுப்சீங்க ன்னு கேக்க...

10) சாரி தெரியாம ஒரு grammar மிஸ்டேக் நடந்திருச்சு... அதனால CAG தப்பா சொல்லிரிச்சு CAG சொன்னத நம்பி நீங்க தீர்ப்ப சொன்னதால உங்க தீர்ப்பு தப்பாயிருச்சு அதனால ன்னு so பிளீஸ் உங்க தீர்ப்பை திருத்திக்கோங்க ன்னு கண்ணீர் விட 

10) அதற்கான ஆவணங்கள் எங்கே ன்னு  நீதிபதி ஜோசப் கேக்க... சீலிடப் பட்ட கவரில் இருக்கு ன்னு சொல்ல

11) எந்த நீதிபதியும் சீலிடப் பட்ட கவரைப் பிரித்து இதுவரைப் பார்க்கவில்லை ஆனால் மத்திய அரசின் கெட்ட நேரம் ஜஸ்டிஸ் ஜோசப் பார்த்தார்

12) உள்ளே இருந்த ரபேல் அனுமதி கடிதத்தில் ஒரு அதிகாரி கூட கையெழுத்துப் போடாமல் இருந்ததைப் பார்த்ததும் நீதிபதி கடுப்பாக

13) ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் எங்கே ன்னு கேட்க புதன்கிழமை (நேற்று) சமர்பிப்பதாக சொல்லிட்டு போக

14) புதன்கிழமை  வந்து ஆவணங்கள் திருடு போயிருச்சு ன்னு சொல்ல நல்லா  கவனிங்க அவர் ஆவணம் missed ன்னு சொல்லல stolen ன்னு சொல்றார். நீதிபதிகளுக்கு தலை சுற்றிப் போச்சு..

15) திருட்டு போனதை எப்போ யாரு கண்டு பிடிச்சாங்க ன்னு கேக்க தெரியல அரசை கேட்டு சொல்றேன் ன்னு சொல்ல

16) Hindu N.ராம் ஆதாரங்களை வெளியிட்டாரே அவருக்கு எப்படி போச்சு ன்னு கேக்க... அவர்மேல் தான் திருட்டு கேஸ் போட போறோம் ன்னு சொல்ல

17) நீங்கதானே போன வாரம் அவர் வெளியிடுவது எல்லாம் போலியான ஆவனங்கள்  ன்னு இதே கோர்ட்ல சொன்னீங்க இப்போ இப்டி சொல்றீங்க நீதிபதி கேக்க... வேணுகோபால் முழிக்க நாலு நாள் அவகாசம் கேட்டுட்டு போயிருக்கார்

18) ரபேல் ஊழலை வெளியிட்டது N.ராம் தான்... போபர்ஸ் ஊழலை வெளியிட்டதும் இதே ஹிந்து N.ராம் தான் (அதை அம்பலப் படுத்தியவர் சித்ரா சுப்ரமணியம்) ஆரியர்கள் வந்தேரிகள் ங்கிற டோனி ஜோசப் அறிக்கையை வெளியிட்டதும் இதே N.ராம் தான்... அவர்மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு பத்திரிக்கையாளர் இருப்பது இந்தியாவுக்கே பெருமை...!

Best regards,