Wednesday 13 March 2019

தமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'

தமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'  தாங்க முடியாத பெண் குழந்தைகளின் தந்தைகளின் மனவலியை உணர்ந்தவனாக ,
பெண் பிள்ளைகளை பெற்றவனாக பெருந்துயரோடு இதை எழுதுகிறேன்.

பெண் பிள்ளைகளே..
உண்மையான  தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள்பின் திரியும் தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்பபுத்தி  ஆண்களுக்கும் வித்தியாசம் அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனமோ, காரோ வைத்திருப்பது மட்டுமா வாழ தகுதி...?
ஆணின் தகுதி ?

கண்டபடி முடி வெட்டிக் கொண்டு கழிசடைத்தனமாக உடுத்திக்கொண்டு மட்ட சினிமா கதாநாயகன்  போன்ற  செயற்கையான தோற்றம்...
இது உங்களை ஈர்க்க  போதுமான ஒன்றா...?

காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள் பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?

'இதை பார்த்து உண்மையான காதல் என்றும் ஆத்மார்ந்த நட்பு என்றும் ஏமாந்து விட்டேன்' என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட ,தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா வரக்கூடிய ஆபத்தை நீங்கள் உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருகோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரமா..? அல்லது சாபமா..?

கைபேசியையே  கட்டிலுக்குள்  மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும்  பெண்களே...

ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் அல்ல.
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...

'அனைத்தும் Google ல் கிடைக்கும்'
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..
ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.

என் அருமை பிள்ளைகளே. கல்வியுடன் மனிதர்களையும் , அவர்களின் மனகுணங்களையும் சேர்த்து படியுங்கள்.

கைபேசியை உங்களுக்கு உதவும்  உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.

பெற்றோர்களே.நம் வாழ்நாட்கள் என்பது பணம்   சம்பாதிப்பதற்கு மட்டுமே  இல்லை.
குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

 நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..

Best regards,