Sunday 31 March 2019

மதிப்பிற்கும் அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.....

மதிப்பிற்கும் அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.....

          கடந்த சட்ட மன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதியில் DMK சார்பாக திரு.அப்பாவு அவர்களும் ADMK திரு.இன்பத்துரை அவர்களும் போட்டியிட்டனர்  வாக்கு எண்ணிக்கையில் ADMK சார்பாக திரு.இன்பத்துரை அவர்கள் பெற்ற வாக்குகள் 69,590 ம் இவருக்கு அடுத்தபடியாக DMK வேட்பாளர் திரு.அப்பாவு அவர்கள் பெற்ற வாக்குகள் 69,541. வெற்றி பெற்ற ADMK வேட்பாளர் வெறும் 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆனால் DMK வேட்பாளர் திரு.அப்பாவு அவர்களுக்கு தபால் ஓட்டுகள் மட்டும் சுமார் 610 ஓட்டுகள் இருந்தன . ஆனால் அந்த 610 தபால் ஓட்டுக்களும் மொத்தமாக செல்லாத ஓட்டுகள் என தேர்தல் அதிகாரி கூறி விட்டார். ஏன் செல்லாது என்று விளக்கம் கேட்கும் போது அந்த தேர்தல் அதிகாரி கூறிய காரணம் என்ன தெரியுமா..... நண்பர்களே 13A படிவத்தினை நிரப்பி அதில் வாக்களிப்பவர் கையொப்பம் இட்டு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் என்ற இடத்தில் அந்த 610 ஓட்டுக்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்றதால் அந்த 610 ஓட்டுகள் அனைத்தும் செல்லாத ஓட்டுகள்  என்று விளக்கம் அளித்தார் கையொப்பம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்ல என்று கூறி விட்டனர் இதனால் நாம் அனைவரும் கண்டிப்பாக வட்டார கல்வி அலுவலர் அல்லது உயரநிலை பள்ளி அல்லது மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது அரசு மருத்துவரிடம் மட்டுமே 13A படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும் அவ்வாறு கையொப்பம் பெறாத தபால் ஓட்டுகள் அனைத்தும் செல்லாத ஓட்டுகள் ஆகிவிடும் கவனமாக வாக்களியுங்கள்.......

உங்கள் ஓட்டு செல்லாத ஓட்டா????????

       அல்லது

உங்கள் ஓட்டு செல்லும்
ஓட்டா ??????

Best regards,