Tuesday 5 March 2013

தயவு செய்து இதை பகிரவும்...!!!

இந்தப் புகைப்படத்தில் உள்ள எனது சகோதரன் பெயர் முத்துராஜ் மாசிலாமணி . இவரது மனைவியின் பெயர் சந்திரா. இவர்களுக்கு தர்ம துரை வயது 15 என்கிற மகனும், மான்சி வயது 11 என்கின்ற மகளும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் காரசேரி என்கின்ற ஊரில் வசித்து வருகின்றனர் .


அவர் கடந்த 1 1/2 வருடங்களாக சவுதி அரேபியாவில் ரியாத் என்னும் இடத்தில் ஓட்டுனராக முஹம்மத் பின் க்ஹலிட் பின் முஹம்மத் அல் சபிஈ( MOHAMMED BIN KHALID BIN MOHAMMED AL SABIEE)என்பவரது வீட்டில் பணி புரிந்து வந்தார். கடந்த பெப்ரவரி மாதம் 9 ம் தேதியில் இருந்து இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பு இல்லாமல் இருந்தார். நாங்கள் எல்லாவிதமான முயற்சிகள் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் இருந்து ஒரு தகவல் வருகிறது , அவர் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார் என்றும் அவரது உடல் அல் கொயா பொது மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் அவரது முதலாளி குடுமத்தினர் அனைவரும் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவரது உடலை பார்த்து முத்துராஜ் தான் என்று உறுதியாக யாரும் கூறவில்லை, மேலும் சில தினங்களுக்கு முன் ஒரு தகவல் வந்துள்ளது எனது சகோதரன் இறக்கவில்லை என்றும் அவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கடந்த திங்கட் கிழமை அன்று மனு ஒன்று வழங்கியுள்ளோம் . மேலும் சவுதி அரேபியாவில் எங்களுக்கு தெரிந்தவர் யாரும் இல்லாததால் எந்த வித தகவலும் பெற இயலாமல் இருக்கிறோம். ஆகவே நண்பர்களே, உங்களால் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக எனது சகோதரன் எங்கு எந்த நிலையில் உள்ளார் என்பதை விசாரித்து தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயவு செய்து இந்த செய்தியை அனைவரும் பகிருங்கள்..........!!

- இந்துமதி ராஜ். து