Saturday 16 March 2013

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமசுகிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள்

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமசுகிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் ஆகும்.


இவை இரண்டு வகைப்படும்.
1) தற்சமம்
2) தற்பவம்

தற்சமம்
*********
வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில்
தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்ற மின்றி வருவது
தற்சமம் எனப்படும்.

(எ.கா)
கமலம் காரணம் மேரு

இச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன.
எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.

தற்பவம்
*********
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப
மாறி வருவது தற்பவம் எனப்படும்.

(எ.கா)
பங்கஜம்-பிரதி உறுப்பு
ரிஷபம்-இடபம்
ஹரி-கறுப்பு
பக்ஷி-பறவை
சரஸ்வதி-கலைமகள்
வருஷம்-ஆண்டு

இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள்
தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன.
எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழில் தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

“பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்”
(நன்னூல் : 274)

வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும்
வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும்
வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள்
வடசொற்கள் ஆகும் எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழில் வட மொழிச் சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

நம் முன்னோர்களின் மொழிப்பற்றாலும்
தமிழறிஞர்களின் அளப்பரிய தொண்டுகளாலும்
வடமொழிச் சொற்களால் தமிழில்
பெரிய பாதிப்பை உருவாக்க முடியவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும்
பல வடமொழிச் சொற்கள் கைவிடப்பட்டு
எளிய தமிழ்ச் சொற்கள் மீண்டும் பழக்கத்திற்கு வந்துள்ளன.

இன்றைய கல்விச் சூழலாலும் ஊடகங்களாலும்
நம்மில் பலருக்கு வடமொழிச் சொற்களுக்கும்
தமிழ் சொற்களுக்கும் வேறுபாடே காண முடியாத நிலை
உருவாகியுள்ளது.

ஆரம்பம்
கல்யாணம்
அவசரம்
அன்னியம்
ஞாபகம்
சந்தோசம்
கர்வம்
துரோகம்
பரம்பரை
யோக்யதை

மேலே குறிப்பிட்ட சொற்கள் எல்லாமே வடமொழிச் சொற்களே.

பல வடமொழிச் சொற்களை எழுதுவதற்காக
பின்வரும் எழுதுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
(ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ)

இது போன்ற எழுத்துருக்களைக் கொண்ட சொற்களை
வடமொழிச் சொற்கள் என்று மிகஎளிதாகக் கண்டறிந்துவிடலாம்.
(எ.கா)
நஷ்டம், ஆக்ஷேபம் போன்ற சொற்கள்.

ஆனால் பல வடமொழிச் சொற்கள் தமிழுக்கும் வடமொழிக்கும்
பொதுவான எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன.
(எ.கா)
ஆரம்பம், கல்யாணம் போன்ற சொற்கள்.

இவற்றை நாம் பெரும்பாலும்
தமிழ்ச் சொற்கள் என்றே எண்ணுகின்றோம்.

நாம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தப்படும்
வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையான
தமிழ்ச் சொற்களையும் கீழே காண்க.

வடமொழிச் சொல் தமிழ்ச் சொல்
******************
இருதயம் **************
உள்ளம்
ஆச்சர்யம்- வியப்பு
ஆரம்பம் -தொடக்கம்
அக்ஷேபம்- மறுப்பு
சங்கீதம் -இன்னிசை
கோஷ்டி -குழு
அபிவிருத்தி- செழிப்பு
அபூர்வம் -அருமை
அர்த்தம் -பொருள்
அவசரம் -விரைவு
அவசியம் -தேவை
அனாவசியம் -தேவையற்றது
அற்புதம் -புதுமை
அன்னியம் -அயல்
அனுபவி- நுகர்
ஆசீர்வாதம் -வாழ்த்து
சந்தோசம்- மகிழ்வு
கர்வம் -செருக்கு
சகஜம் -இயல்பு
சகோதரன் -உடன்பிறந்தவன்
கல்யாணம் -திருமணம்
சந்ததி -மரபு
சீக்கிரம் -சுருக்க
சுதந்திரம் -உரிமை
சேட்டை -குறும்பு
ஞாபகம் -நினைப்பு
தருமம் -அறம்
துரோகம்- இரண்டகம்
நஷ்டம்- இழப்பு
நிஜம்- மெய்
பக்தன்- அன்பன்
பரம்பரை- தலைமுறை
பிரகாசம்- ஒளி
பாபம் -தீவினை
யோக்யதை -தகுதி
ஜன்மம்- பிறவி
ஸ்ரீ- திரு

மீண்டும் சொல்லுகிறேன்...
முடிந்தவரை நாம் அனைவரும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து
தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு தவிர்க்க இயலாமல்
வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால்
அதற்கான விதி முறைகளுக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.

வடமொழி எழுத்துகளை தமிழில் பயன்படுத்த
உதவும் சில விதிகள்:

வட எழுத்து தமிழில் எழுதும் முறை உதாரணம்
ஜ ‘ச’ அல்லது ‘ய’ ஜயம் – சயம்
பங்கஜம் – பங்கயம்
ஷ ‘ச’ அல்லது ‘ட’ ஷண்முகம் – சண்முகம்
விஷம் – விடம்
ஸ ‘ச’ அல்லது ‘ய’ ஸபா – சபை
நேசம் – நேயம்
ஹ ‘அ’ அல்லது ‘க’ ஹரி – அரி
க்ஷ ‘க்க’ அல்லது ‘ட்ச’ பக்ஷி – பட்சி
பக்ஷம் – பக்கம்
சொல்லிறுதியில் வரும் ‘ஆ’ ‘ஐ’ மாலா – மாலை
கலா – கலை
‘ர’ ‘அ’ அல்லது ‘இ’ உடன் வரும் ரங்கம் – அரங்கம்
ராமன் – இராமன்
‘ல’ ‘இ’ அல்லது ‘உ’ லாபம் – இலாபம்
லோகம் – உலோகம்
‘ய’ ‘இ’ அல்லது ‘உ’ யமன் – இயமன்
யுத்தம் – உயுத்தம்-

இப்படி மாற்றம் செய்து-புரியவில்லை என்றால்.?
தமிழில் தெளிவு படுத்திக்கொள்ள நல்ல தமிழில் நாம் எழுதியும் காண்பிக்க வேண்டும்-தவறும் தருணத்தில்-
நாம் தமிழறியாத தமிழினம் என அவமானப்பட நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.!

தமிழினமாக அடையாளப்படுங்கள்-
தமிழராய் வாழ்ந்து கொள்வோம்.

தமிழுக்காக எதையும் செய்வோம்-அவை-
தமிழினம் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்திற்காகவே..!!

நன்றி-