Friday 29 March 2013

மீண்டும் ஒரு இசைப்பிரியாவா…? ஊடகங்களே உடன் செயற்படுங்கள் -

மீண்டும் ஒரு இசைப்பிரியாவா…? ஊடகங்களே உடன் செயற்படுங்கள் -

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலங்கையில் இறுதிப் போரின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வேற்று நாடுகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக 45 பேர் படகில் சென்றனர்.

குறித்த படகு நடுக்கடலில் பழுது பட்டதையடுத்து டுபாய் அரசுக்குறிய படகு இலங்கை பயணிகளை மீட்டு தமது நாட்டில் வைத்து சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது.

இதில் 7பேருக்கு வெளிநாட்டு விசா வழங்கியதுடன் 7பேரை இலங்கைக்கே நாடுகடத்தியுள்ளது.

மிகுதி 31 இலங்கையர்களையும் இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.

இதில் தமிழீழ ஊடகவியலாளர் பெண் ஒருவரும் அடங்குவர்.

இறுதிப்போரில் அரச படையிடம் சரணடைந்த ஊடகவியலாளர்கள் இசைப்பிரியா மற்றும் அகழ்விழி போன்றோர் மிகக் கொடூரமாகச்சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பெண் ஊடகவியலாளரையும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தினால் இவருக்கும் இதே கொடூரமே சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்படும்.

ஆகவே குறித்த பெண் ஊடகவியலாளர் உட்பட தஞ்சம் கோரிவந்த அனைத்து தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும் சர்வதேச அமைப்புக்கள் வழங்க வேண்டும் எனக் கோருவதுடன் இச் செய்தியை ஊடகங்கள் கவனத்தில் எடுத்து உரிய பொறுப்பு வாய்ந்த தரப்புக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.


via - பெண்கள் Women