Thursday 28 May 2020

BioWar 2.0 = பாலைவன வெட்டுக்கிளி...

BioWar 2.0 = பாலைவன வெட்டுக்கிளி...



திரைப்பட கதைகளை
விஞ்சி நடக்கும்
2020-ன் தொடர் பேரழிவுகள்!

"ஒரு சதுர கிலோ மீட்டர் அளிவில் சுமார் 4கோடி வெட்டுக்கிளிகள் கிட்டதட்ட 35,000 மனிதனின் விவசாய உணவை அழித்துவிடும் என்றும்,
இந்த வெட்டுக்கிளிகள்
ஆப்பிரிக்கா, ஈரான், பாகிஸ்தான் வழியாக..
இந்தியாவிற்கு வந்தடையும்
என்று..

ஐநா'வின்
உணவு மற்றும் விவசாய ஆணையம்
சில நாட்களுக்கு முன்பு
செய்தி அறிக்கை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக சில நாட்களாக ஈரான் நாடும், பின்பு பாகிஸ்தானும் கடும் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளான செய்திகள் வந்தது.

இதை தொடர்ந்து நேற்று,
வெட்டுக்கிளி கூட்டம்
இந்திய எல்லை பகுதிகளில் நுழைந்து, இராஜஸ்தான் மாநிலத்தின்
ஜெய்பூர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் கோடி கணக்கில் ஊடுருவி, அங்குள்ள மரங்களை அழித்து சென்றுள்ளது.

இது மேலும் அங்குள்ள
18 மாவட்டங்களில் பரவியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள்
தற்போது பரவி மத்தியப்பிரதேச மாநிலத்திலும் ஊடுருவியுள்ளது,
மேலும் இது பல வடமாநிலங்களில்  சென்றடைந்து பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும், மரங்களையும் அழிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது.

UN-FAO கடந்து 10 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை இவை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து எச்சரிக்கிறது.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளி தாக்குதலால் ஆரம்பத்திலேயே பாதிப்புக்கு உள்ளான கிழக்கு ஆப்பிரிக்க_நாடுகள் இதனால் ஏற்பட்ட அதீத இழப்பால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

எல்லாவற்றிக்கும் மேலாக
ஒரு சதுர கிமீ'ல் 4கோடி எண்ணிக்கையில் இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள் பொதுவாக.. 1000சதுரகி.மீ அளவில்,
நாள் ஒன்றுக்கு 150கி.மீ வரை பறக்கக்கூடியது என்பது,
பேரதிர்ச்சி அளிப்பதோடு,
இந்த பூச்சிகள்,
2020ன் போர் ஆயுதங்களாகவே பார்க்கப்டுகிறது."

பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிப்பது எப்படி?

பதில் : ஊரடங்கு மற்றும் கொரானாவால் பாதித்துள்ள நமக்கு புதிய தலைவலியாக பாலைவன வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படையெடுத்து வந்து பயிர்களை அளித்துக் கொண்டிருக்கிறது.

கென்யா, தான்சானியா, ஏமன்,மத்திய பிரதேஷ் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் படையெடுத்து உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க 2  சிறந்த எளிமையான வழிகள் உள்ளது.

1. தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது.  [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்]

தங்கள் காட்டுக்குள் வரும் பொழுது இதனை தீ வைத்து எரிக்க, புகைமூட்டம் சூழ வேகமாக வெட்டுக்கிளி திசை மாறும், வெளியேறிவிடும்.

மிளகாய் மார் மிக நன்றாக வேலை செய்யும்

2. மிளகாய் மார் கிடைக்காத நிலையில் , மிளகாய் பொடியை சிறிதளவு எண்ணெய் சேர்த்து புல்லுடன் எரிக்க புகைமூட்டம் வரும். இந்த புகைக்கு வெட்டுக்கிளி ஓடிவிடும்.

சில இரசாயன மருந்தின் ஊக்கத்தினால் நிழல் உலக இலுமினாட்டிகள் இந்த வெட்டுக்கிளியை ஏவி உணவு பஞ்சத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த வெட்டிக்கிளியை "துள்ளுகடான்"இன்று கிராமத்தில் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Locust என்று அழைப்பார்கள்.

அக்காலத்தில் தொலை தொடர்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் ஊதல் (சீட்டி அடித்தல், விசில்) மூலம் ஒவ்வொரு தோட்டத்திற்கும் தெரிவித்தார்கள்.

உடனடியாக கத்தைகளை (மிளகாய் மார்) தீ மூட்டி விரட்டுவார்கள்.

அன்று சீட்டி அடித்தல்!!  இன்று தொலைபேசி!!

எவ்வித மருந்திற்கும் கட்டுபடாது!!!

"இது ஒன்றே தீர்வு"Best regards,